நிலை வாசலில் இந்த ஒரு செடியை வைத்தால் பணக்கஷ்டம் மன கஷ்டம் வராது.

flower
- Advertisement -

ஒரு மனிதன் செல்வ செழிப்போடு நன்றாக வாழ வேண்டும் என்றால், அவனுக்கு இரண்டு விஷயங்கள் கட்டாயம் தேவைப்படும். ஒன்று பணம். இரண்டாவது நிம்மதி. ஒரு குடும்பத்தில் இருக்கும் சந்தோஷம் நிம்மதி கெட்டுப் போக காரணம் அடுத்தவர்களுடைய கண்திருஷ்டி. சந்தோஷமாக ஒரு விசேஷம் வீட்டில் நடந்து விட்டால், அடுத்து ஏதாவது ஒரு கஷ்டம் வந்துவிடும்.

காரணம் நம் சந்தோசத்தை பார்த்து அடுத்தவர்கள் திருஷ்டி வைத்திருப்பார்கள். இரண்டாவது பணம். நாம் கொஞ்ச காலத்தில், நிறைய பணத்தை சம்பாதித்து விட்டால் போதும். அதுவும் அடுத்தவர்களுக்கு பொறுக்காது. இவ்வளவு சீக்கிரத்தில் பணக்காரர் ஆகிவிட்டான் என்ற எண்ணத்திலேயே நம்மை நிலை குலைய வைக்க செய்து விடுவார்கள்.

- Advertisement -

இந்த கண் திருஷ்டி, பணத்தடை இரண்டு பிரச்சனைகளிலிருந்து வெளிவர நாம் செய்ய வேண்டிய எளிமையான சின்ன இரண்டு விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இரண்டு செடியை நட்டு வைக்கப் போகின்றோம்.

வீட்டிற்கு வெளியே ஒரு செடி, வீட்டிற்கு உள்ளே ஒரு செடி. இதை செய்து விட்டாலே பண பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். கண் திருஷ்டியில் இருந்தும் தப்பிக்கலாம். வாங்க அந்த இரண்டு செடிகள் என்ன என்பதை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கண் திருஷ்டி நீங்க, பணக்கஷ்டம் தீர செய்ய வேண்டியது

கண் திருஷ்டி நீங்க நிலை வாசலுக்கு வெளியே உங்களால் முடிந்தவரை நிறைய குரோட்டன்ஸ் செடியை நட்டு வையுங்கள். குரோட்டன்ஸ் செடியில் பல வகைகள் உள்ளது. முள் இருக்கக் கூடிய குரோட்டன்ஸ் செடியை நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் வைக்கலாம். இந்த செடி வீட்டிற்குள் வருபவர்களுடைய நெகட்டிவ் எனர்ஜியை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்.

கெட்ட எண்ணத்தோடு நம் வீட்டிற்கு வரக்கூடிய நபர்கள் எல்லாம் நம் வீட்டிற்குள், நுழையும்போது பாசிட்டிவ் எனர்ஜியுடன் நுழைவார்கள். எதிர்மறை ஆற்றலை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி குரோட்டன்ஸ் செடிகளுக்கு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அடுத்ததாக நம் வீட்டிற்குள் இருக்கக்கூடிய பணக்கஷ்டம் நீங்க என்ன செடி வைக்கணும். நாம் எல்லோருக்கும் தெரியும்.

- Advertisement -

இந்த செடியை பற்றி. இன்று பெரும்பாலானவர்கள் வீட்டில் இந்த செடியை வைத்தும் வளர்க்கிறார்கள். அதுதான் மணி பிளான்ட். மணி பிளான்ட் சீக்கிரமாகவே படர்ந்து வளரக்கூடிய தன்மை கொண்டது. அதாவது அதனுடைய இனப்பெருக்கம் ரொம்பவும் வேகமாக இருக்கும். சின்னதாக ஒரு கிளையை நட்டு தண்ணீரில் போட்டு வைத்தாலே கடகடவென வளர்ந்து விடும். அதேபோல நம் வீட்டில் இருக்கும் பணமும் சீக்கிரம் பல மடங்காக பெறும் என்ற நம்பிக்கையில் தான் இந்த செடியை வீட்டில் வைத்து வளர்க்கிறார்கள்.

வீட்டில் ஒரு இடத்தில் மட்டும் மணி பிளான்ட் வைத்து வளர்க்காதீர்கள். சின்ன சின்ன தொட்டியில் படுக்கையறை சமையலறை வரவேற்பறை பால்கனி என்று இன்னும் உங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் செடி வைக்க வாய்ப்பு இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் சின்ன சின்ன மணி பிளான் செடிகளை நட்டு வளர்த்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்யக்கூடிய வாய்ப்புகளை தரும் மந்திரம்.

அந்த செடி வளர வளர பண வசதியில் நீங்களும் வளர்ந்து கொண்டே செல்வீர்கள் என்பது தான் நம்பிக்கை. தினமும் அந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது இதை நினைச்சுக்கோங்க. நீ வளர வளர நானும் வசதியில் வளர்ந்து கொண்டே செல்வேன். செடி சீக்கிரம் செழிப்பாக வளர வேண்டும் என்று மனதில் சொல்லிக் கொண்டே தண்ணீரை ஊற்றும்போது இன்னும் நல்ல பலனை பெற்று தரும். எளிமையான ஜோதிடம் சொல்லும் இந்த இரண்டு பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -