வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்யக்கூடிய வாய்ப்புகளை தரும் மந்திரம்.

bramma
- Advertisement -

ஒருவர் அவருடைய வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த சரியான வாய்ப்பை எவர் ஒருவர் பயன்படுத்துகிறாரோ அவர் அவருடைய வாழ்க்கையில் கண்டிப்பான முறையில் நல்ல முன்னேற்ற நிலையை அடைவார்கள். அப்படி கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டு பிறகு வருத்தப்படுபவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் இழந்த வாய்ப்பை திரும்பப் பெற்று வாழ்க்கையில் வெற்றி அடைவார்கள். இந்த மந்திரம் குறித்த பதிவில் எந்த மந்திரத்தை உச்சரித்தால் இழந்த வாய்ப்பை மறுபடியும் பெற முடியும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பல வாய்ப்புகள் நம்மை தேடி வரும். அந்த வாய்ப்புகளில் எந்த வாய்ப்பு நம்முடைய வாழ்க்கையை வெற்றி பெறச் செய்யும் என்றும் எந்த வாய்ப்பு நம்முடைய வாழ்க்கையை அடி பாதாளத்திற்கு தள்ளும் என்றும் உணர்ந்து வெற்றி தரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும்.

- Advertisement -

ஒருமுறை நமக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் பொழுது அந்த வாய்ப்பை நம்மால் பயன்படுத்த முடியாத பட்சத்தில் அந்த வாய்ப்பால் நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து நன்மைகளையும் இழந்து விடுவோம். அது மட்டும் அல்லாமல் அந்த நல்ல வாய்ப்பிற்கு பதிலாக நம் வாழ்க்கைக்கு தீமை ஏற்படக்கூடிய விஷயங்களில் ஈடுபட்டு விடுவோம்.

அப்படி நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நாம் உபயோகப்படுத்தாமல் விட்டு விட்டால் மறுபடியும் நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகமே. அப்படி நமக்கு மறுபடியும் நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

- Advertisement -

“பிரம்ம நாடி சூட்சம”

நம்முடைய தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியவர் பிரம்ம தேவர். அவர்தான் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பார். இருப்பினும் நம்முடைய தான தர்மங்களால் வாழ்க்கையில் நன்மை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளையும் தருவார்.

- Advertisement -

அவருக்குரிய இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் தான் கூற வேண்டும். மேலும் இயற்கை சூழ்நிலை நிறைந்த இடத்தில் அமர்ந்து குறைந்தது 27 முறையாவது ஒரு நாளைக்கு கூறி வரவேண்டும். அதுவும் வாய்விட்டு கூறாமல் மனதளவில் கூற வேண்டும்.

நம்மால் முடியும் என்றால் அணு தினமும் ஒவ்வொரு நிமிடமும் இந்த மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். இப்படி கூறி வந்தால் கைநழுவி போன நம்முடைய நல்ல வாய்ப்புகள் நம்மை தேடி வரும். அதன் மூலம் நம் வாழ்க்கையில் நமக்கு பல வெற்றிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: கேட்டதை கேட்ட படி அருளும் பிரபஞ்ச மந்திரம்

இந்த எளிய மூன்றெழுத்து மந்திரத்தை தினமும் மனதிற்குள் கூறி வர நம்முடைய வாழ்க்கை வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.

- Advertisement -