இந்த தண்ணீரைக் கொண்டு நிலை வாசல் கதவை துடைத்தால் வீட்டிற்குள் கண் திருஷ்டி வராது கெட்ட சக்தியும் வராது. வீட்டில் இருக்கும் தெய்வ சக்தியும் வெளியேறாது.

vasal
- Advertisement -

வீட்டில் இருக்கும் நல்லது வெளியில் போவதற்கு என்ன காரணம். நம் வீட்டிற்குள் வந்த கெட்டது தான் காரணம். கெட்ட சக்திகள் வீட்டிற்குள் நுழையும் போது, வீட்டில் இருக்கும் நல்ல சக்தி அதுவாகவே தானாக வெளியில் சென்று விடும். இப்படிப்பட்ட பிரச்சனையில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், செய்யக்கூடிய ஒரு சின்ன பரிகாரத்தை தான் இன்று பார்க்கப் போகின்றோம். பொதுவாகவே நாம் வெளியில் சென்று வரும்போது நம்முடன், கெட்ட சக்திகள் நம் வீட்டிற்குள் நுழைவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. நம் காலில் மிதித்து வந்தது, நம் உடம்போடு ஒட்டி வந்தது, என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. கண் திருஷ்டி, கழிப்பை தாண்டினாலும் அந்த எதிர்மறை ஆற்றல் நம்மை வந்து தொற்றிக் கொள்ளும். இதனால் தான் அந்த காலத்தில் வீட்டிற்குள் வருவதற்கு முன் வெளியில் நின்று வாசலிலேயே தங்களுடைய காலை கழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைவார்கள். இன்று அப்படி ஒரு வழக்கத்தை நாம் மறந்து விட்டோம்.

சரி இப்படி கண்ணுக்கு தெரியாமல் நாம் கொண்டுவரக்கூடிய கெட்ட சக்திகளை நிலை வாசலிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் என்ன செய்வது. காலண்டரில் பார்த்தால் வாஸ்து நாள் என்று ஒன்று வரும் அல்லவா. அன்றைய தினம் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் நல்ல தண்ணீரை ஊற்றி, மஞ்சள் பொடி சிறிது போட்டு, அதை கலந்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் இரண்டு வெற்றிலை, இரண்டு மாயிலைகளை போட்டுக் கொள்ளுங்கள். ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த தண்ணீரைத் தொட்டு உங்கள் நிலை வாசல் மர சட்டம், நிலை வாசல் கதவு இவைகளை நன்றாக துடைத்து விட வேண்டும்.

அதன் பின்பு நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதை செய்தால் வீட்டிற்குள் கெட்ட சக்திகள் ஊடுருவாது. உங்களுடைய வீட்டிற்குள் கண் திருஷ்டியோடு பொறாமை எண்ணத்தோடு யாராவது வந்தால் கூட அவர்களுடைய கெட்ட எண்ணத்தை நிலைவாசல் படியிலேயே இந்த பரிகாரம் அழித்துவிடும். இது ஒரு குறிப்பு.

- Advertisement -

இது அல்லாமல் நிலை வாசலுக்கு வெளியே நின்று நீங்கள் பைரவரை காவல் தெய்வமாக கூப்பிட்டு வழிபட வேண்டும். நிலை வாசலுக்கு அருகில் விளக்கு ஏற்றி வைத்தாலும் சரி, விளக்கு ஏற்ற வில்லை என்றாலும் சரி, தினமும் ஊதுவத்தியை நிலை வாசல் படிக்க்கு காண்பிப்பீர்கள் அல்லவா. அப்போது பைரவரை மனதில் நினைத்துக் கொண்டு, பைரவா எங்களுடைய வீட்டின் காவல் தெய்வமாக நின்று வீட்டை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ராகு கால, எமகண்ட நேரத்தில் இதை செய்தால், இந்த உலகத்திலேயே நீங்கதான் மிக மிக அதிர்ஷ்டசாலி. வாழ்வில் நடக்காத நல்லதை கூட நடத்திக் காட்டும் சூட்சம ரகசியம்.

இதற்கு நீ தான் பொறுப்பு என்று பைரவரின் பாதங்களை பற்றிக் கொள்ளுங்கள். முக்காலத்தையும் உணர்ந்த கால பைரவர். நம்முடைய வீட்டை காவல் தெய்வமாக நின்று காப்பார். தினமும் பைரவரின் பெயரை உச்சரிப்பவர்கள் அருகில் எந்த ஒரு கெட்ட சக்தியாலும் நெருங்க முடியாது. மேல் சொன்ன குறிப்புகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -