ராகு கால, எமகண்ட நேரத்தில் இதை செய்தால், இந்த உலகத்திலேயே நீங்கதான் மிக மிக அதிர்ஷ்டசாலி. வாழ்வில் நடக்காத நல்லதை கூட நடத்திக் காட்டும் சூட்சம ரகசியம்.

ragu-ketu1
- Advertisement -

ராகு காலம், ராகுவிற்கு உரிய காலம். எமகண்டம், கேதுவிற்கு உரிய காலம். இந்த ராகுகால எமகண்டத்தில் நாம் நல்ல விஷயங்கள் எதையுமே செய்ய மாட்டோம். அப்படிப்பட்ட இந்த ராகுகால எமகண்டத்தில் கூட நாம் சில விஷயங்களை செய்யும் போது அது நமக்கு நல்ல பலனை கொடுக்கும். அது எந்தெந்த விஷயம். அந்த விஷயங்களை எல்லாம் எப்படி செய்வது என்பதை பற்றிய இதுவரை நீங்கள் அறிந்திடாத சூட்சம குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ராகு ஒரு சின்ன விஷயத்தை கூட பிரம்மாண்டமாக மாற்றக்கூடிய சக்தி கொண்டவர். இவரை ஜாதகத்தில் பிரம்மாண்டம் என்று சொன்னாலும், இவர் ஒரு நிழல் கிரகம் என்பதால், நம்முடைய மதியை மயக்க கூடிய வேலையை இவர் செய்ய தொடங்கி விடுவார். உதாரணத்திற்கு பத்து ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தால் அந்த இடத்தில் ஆயிரம் ரூபாயை செலவு செய்து விடுவோம். எல்லாவற்றையும் இழுத்து விட கூடிய வேலையை ராகு செய்து விடுவார். நாம் செய்யக்கூடிய நல்ல வேலையை செய்ய விடாமல் தடுத்து விடுவார். குறிப்பாக எந்த ஒரு நல்ல காரியத்தையும் இதனால்தான் இந்த ராகு காலத்தில் நாம் செய்ய மாட்டோம். இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். இதுதான் ராகுவின் வேலை.

- Advertisement -

இந்த ராகு காலத்தில் நாம் என்ன நல்லதை செய்துவிட முடியும் என்று நமக்கு சந்தேகம் வரும். நம்முடைய வாழ்விற்கு ஒத்து வராத ஒரு விஷயத்தை இந்த ராகுகால நேரத்தில் செய்தால், அதை நாம் திருப்பி திருப்பி செய்யாமல் தடுத்து விட முடியும். உதாரணத்திற்கு உங்கள் குழந்தைக்கு ஐஸ்கிரீம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த குழந்தைக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது. அந்த குழந்தை ஐஸ்கிரீம் சாப்பிடவே கூடாது என்று வைத்துக் கொள்வோம். ராகு கால நேரத்தில் அந்த குழந்தைக்கு ஐஸ்கிரீமை வாங்கி கொடுங்க, அந்த குழந்தை அடுத்த நாளிலிருந்து அந்த ஐஸ்கிரீமின் மேல் இருக்கக்கூடிய ஆசையை விட்டுவிடும். (நாம் ரொம்பவும் விரும்பி செய்யக்கூடிய ஒரு விஷயத்தை, திரும்பவும் செய்யவிடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இந்த ராகு பகவான் செய்கின்றார்.)

யாருக்காவது நிறுத்த முடியாத கெட்ட பழக்கம் இருக்கிறது என்றால், அவர்களுக்கு இருக்கும் அந்த கெட்ட பழக்கத்தை ராகு கால நேரத்தில் செய்யுங்கள். அந்த கெட்ட பழக்கத்தை அந்த நபர் மீண்டும் மீண்டும் அதன் பிறகு செய்யவே மாட்டார். அதற்காக கெடுதலை ராகு கால நேரத்தில் செய்ய வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. நன்றாக புரிந்து வைத்து கொள்ளுங்கள். (நம்மிடம் இருக்கக்கூடிய ஒரு கெட்ட பழக்கத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை எனும் பட்சத்தில், அந்த கெட்ட பழக்கத்தை ராகு கால சமயத்தில் செய்யும்போது, அதை நாம் மீண்டும் மீண்டும் செய்யாமல் இருப்போம். அதற்கான சக்தி இந்த ராகு காலத்தில் உள்ளது.) ராகுவை போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை.

- Advertisement -

கேதுவின் வேலை என்ன. எந்த விஷயமாக இருந்தாலும் அதை உடனே தடுத்து நிறுத்தி விடுவார். நீங்கள் நல்லதை செய்தாலும் சரி, கெட்டதை செய்தாலும் சரி, பெரிய அளவில் செய்தாலும் சரி, சிறிய அளவில் செய்தாலும் சரி, நீங்கள் செய்யப் போகும் காரியம் உடனடியாக தடைபடும். இதுதான் கேதுவின் வேலை.

அடிக்கடி மருத்துவ செலவு வந்து கொண்டே இருக்கிறது. மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய சூழ்நிலை. என்ன செய்வது. எமகண்ட நேரத்தில் மருத்துவ செலவு செய்யுங்கள். எமகண்ட நேரம் இருக்கும்போது தொடர்ந்து ஒரு சில நாள் மாத்திரையை சாப்பிட்டு வாருங்கள். நீங்கள் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய பழக்கம் காலப்போக்கில் படிப்படியாக குறைந்து விடும். காலப்போக்கில் உங்களுடைய தீர்க முடியாத நோய் பிரச்சனை படிப்படியாக குறையும். நீங்கள் மருந்து சாப்பிடுவதை கேது பகவானே தவிர்த்து விடுவார். (ராகு காலத்தில் மருந்து மாத்திரையை சாப்பிட தொடங்கினால் அது, பல மடங்கு உயர்ந்துவிடும். அந்த இடத்தில் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.)

இதையும் படிக்கலாமே: இந்த இலையை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், மன பயம் நீங்கும். டென்ஷன் குறையும். பதட்டமே இருக்காது.

அதிலும் குறிப்பாக எமகண்டமோ, ராகு கால நேரமோ முடியும் தருணத்தில் அந்த வேலையை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு ஞாயிறு 12:00 லிருந்து 1:30 மணி வரை எம கண்ட காலம் என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் 1:15, 20 அந்த சமயத்தில் நீங்கள் அந்த மருந்து மாத்திரையை சாப்பிடும் வேலையை செய்தால் அது உங்களுக்கு அதிகப்படியான நன்மையை கொடுக்கும். காரணம் ராகுவும் கேதுவும் நமக்கு கெட்டது செய்தாலும், அவர்கள் விலகும் போது நமக்கு அபரிவிதமான அதிர்ஷ்டத்தை கொடுத்து விடுவார் என்பது ஜோதிடம் சொல்லும் நம்பிக்கை. நமக்கு வரக்கூடிய கஷ்டங்களில் இருந்து தப்பிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. இதையும் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -