நிலை வாசலில் குங்குமம் வைப்பதற்கு முன்பு இந்த 1 பொருளை வைத்தால், குன்றாத செல்வம் வீட்டில் குடியேறும்.

door-vasal-lakshmi
- Advertisement -

செல்வகடாட்சமும் ஐஸ்வர்யமும் வீட்டில் அருவி போல கொட்ட வேண்டும். குன்றாத வருமானம் ஊற்றெடுத்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். வறுமையும் கஷ்டமும் ஆரோக்கியமற்ற சூழ்நிலையும், ஒரு குடும்பத்திற்கு தொடர் துன்பத்தைக் கொடுக்கும். கஷ்டம் வருவதாக இருந்தாலும் அது நிலை வாசல் வழியாகத்தான் உள்ளே வர வேண்டும். ஐஸ்வர்யம் வர வேண்டும் என்றாலும் அது நிலை வாசல் வழியாகத்தான் உள்ளே வர வேண்டும்.

வரக்கூடிய கஷ்டத்தை தடுத்து நிறுத்தி ஐஸ்வர்ய கடாட்சத்தை வீட்டிற்குள் அழைத்து வர, ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த தாந்திரீக பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பெரும்பாலும் நாம் இந்த பரிகாரத்தை கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை.

- Advertisement -

இதுவரை நாம் இந்த ஒரு பொருளை பயன்படுத்தி பரிகாரம் செய்ததே இல்லை. இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் அந்த ஒரு பொருள் என்ன தெரியுமா. தேன் மெழுகு. இது நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக நமக்கு கிடைக்கும். இந்த தேன் மெழுகு வாங்கி அப்படியே வாசல் படியில் ஒட்டினால், அது தானாக ஒட்டிக் கொள்ளும். ஒட்டுவதற்கு சிரமம் இருந்தால் லேசாக சூடு செய்து ஒட்டிக் கொள்ளலாம். கீழே விழாது. இந்தத் தேன் மெழுகு வைத்து முறையான பரிகாரத்தை எப்படி செய்வது.

குன்றாத செல்வ வளம் பெருக தேன் மெழுகு பரிகாரம்:
தேவையான அளவு தேன் மெழுகு வாங்கிக் கொள்ளுங்கள். கொஞ்சமாக ஜவ்வாது தேவைப்படும். ‌பிறகு சுத்தமான தாழம்பு குங்குமம் தேவை. இந்த மூன்று பொருட்களையும் முதலில் வாங்கி வைத்து விடுங்கள். அதன் பிறகு வெள்ளிக்கிழமை அன்று வழக்கம் போல நிலை வாசலை துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து, பூக்கள் வைத்து அலங்காரம் செய்து விடுங்கள்.

- Advertisement -

நிலை வாசலில் மேல் பக்கம் நடுவில், நிலை வாசல் மரசட்டத்தில் சிறிய அளவு தேன்மெழுக்கு ஒட்டி வைத்து அதன் மேலே ஜவ்வாதை பூசி, அதன் மேலே குங்குமத்தை வைத்து விடுங்கள். அவ்வளவு தான். குலதெய்வத்தை வேண்டி இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

மேலே ஒட்டி வைத்த தேன் மெழுகு ஒரு மாதத்திற்கு அப்படியே இருக்கலாம். ஒரு மாதம் கழித்த பின்பு பழைய தேன் மெழுகை எடுத்துவிட்டு, புதிய தேன்மெழுகை ஒட்டி வைக்க வேண்டும். இந்தத் தேன் மெழுகு உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்களை எல்லாம் சரி செய்து விடும். இனிப்பான வாழ்க்கையை உங்களுக்கு கொடுக்கும். இனிப்பான வாழ்க்கையோடு சேர்ந்த ஐஸ்வர்யம், அஷ்டலட்சுமி கடாட்சம், வருமானம் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வீட்டிற்குள் வரத் தொடங்கி விடும்.

- Advertisement -

பிறகு வழக்கம் போல பூஜை அறையை அலங்காரம் செய்துவிட்டு, காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தை நினைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து வெள்ளிக்கிழமை பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். (தினமும் விளக்கு ஏற்றும் போது ஊதுவத்தியை மட்டும் அந்த தேன்மொழுகிற்க்கு காண்பித்தால் போதும்.) நான்கு வார வெள்ளிக்கிழமை கழித்து, ஐந்தாவது வாரம் வெள்ளிக்கிழமை தேன் மெழுகை மறக்காமல் மாற்றி விடுங்கள். அதற்கு இருக்கும் பவர் குறைந்து போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகி சகல சௌபாக்கியதோடு வாழ நாம் கோவிலுக்கு செல்லும்போது இதை செய்தாலே போதும்.

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நெருக்கடி தரும் கஷ்டங்களை கூட சரி செய்ய இந்த சின்ன பரிகாரம் போதும்.‌ இதை எத்தனை நாட்கள் தொடர்ந்து செய்வது. உங்கள் வீட்டில் பண கஷ்டம் தீரும் வரை, மன நிம்மதி கிடைக்கும் வரை செய்யலாம். மூன்று மாதம் தொடர்ந்து செய்யும்போது உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். சித்தர்களால் அருளப்பட்ட இந்த எளிமையான பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருதோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -