இந்த மாலையை நிலை வாசல் படியில் மாட்டி வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் துர்தேவதைகள் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேறி, வீடு சுபிட்சம் பெறும்.

vasal-lakshmi
- Advertisement -

வீட்டில் தினமும் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்யும் பட்சத்தில் அந்த வீடு சுபிட்சம் பெறும். ஆனால், சில வீடுகளில் விளக்கை கூட தினமும் ஏற்ற முடியாத சூழ்நிலை இருக்கும். துர்தேவதைகளின் நடமாட்டம், செய்வினை கோளாறு, ஏவல் பில்லி சூனியம், என்று பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வீட்டில் இறைவழிபாடு செய்ய முடியாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். வீட்டில் கண் திருஷ்டி பிரச்சனை உள்ளது. வீட்டில் சுபகாரியங்கள் எதுவுமே நடக்கவில்லை என்று சொல்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டில் பண கஷ்டம் உள்ளது. மன நிம்மதி என்பதே இருப்பது கிடையாது. கடன் தொல்லை உள்ளது என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். ஆகமொத்தத்தில் எல்லோர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு மாலை தான் இது. அது எந்த மாலை, அந்த மாலையை நம்முடைய வீட்டில் எப்படி மாட்டி வைப்பது என்பதை பற்றிற ஆன்மீக ரீதியான தகவலை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

நமக்கு எல்லா விஷயத்திலும் வெற்றியை கொடுக்கக்கூடிய வேர் வெட்டிவேர். இந்த வேர் ஒரு மூலிகை என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த வேரை சில பேர் தண்ணீரில் போட்டு வைத்து, அந்த தண்ணீரை பருகி படுவார்கள். இது உடலுக்கு மிகமிக குளிர்ச்சியை தரக்கூடிய விஷயம். இதை செய்தால் அது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

- Advertisement -

கடைகளில் வெட்டிவேர் மாலை கிடைக்கின்றது. வெட்டிவேரை மாலையாகத் தொடுத்து விற்கின்றார்கள். அதில் ஒரு மாலையை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த மாலையை வீட்டிற்கு கொண்டு வந்து அதில் லேசாக மஞ்சள் தண்ணீரை தெளித்துக் கொள்ளுங்கள். இந்த மாலையை பூஜை அறையில் வைத்து, தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அதன்பின்பு அந்த மாலையை எடுத்து உங்களுடைய நிலை வாசலில் கட்டி விடுங்கள். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல், துர்தேவதைகள், கண் திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம் எப்படிப்பட்ட எதிர்மறை வினையாக இருந்தாலும் அது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அந்த மாலையை கட்டி விடுங்கள்.

- Advertisement -

அவ்வளவு தாங்க. குறைந்தபட்சம் 3 நாட்கள், அதிகபட்சம் 5 நாட்கள் இந்த வெட்டி வேர் வாசம் உங்கள் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கும். இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல் அனைத்தையும் ஈர்த்தது தரக்கூடிய தன்மை வெட்டி வேருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த மாலையை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை புதியதாக மாற்றினால் கூட போதும்.)

உங்கள் வீட்டில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அது ஒரு சில நாட்களிலேயே சரியாகும். உங்களால் பூஜை புனஸ்காரங்களை தொடர்ந்து செய்ய முடியவில்லை தினம் தோறும் வீட்டில் விளக்கு கூட ஏற்ற முடியவில்லை என்ற சூழ்நிலை இருந்தாலும், அது கூட ஐந்தே நாட்களில் மாறும் நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். ஒருவேளை உங்களால் உங்கள் வீட்டு நிலை வாசல்படியில் இந்த மாலையை மாற்ற முடியாத சூழ்நிலை இருந்தால் உங்கள் வீட்டு பூஜை வாசல்படியில் இந்த மாலையை மாட்டி வைக்கலாம். அதுவும் முடியாது என்று சொல்லுபவர்கள் உங்கள் பூஜை அறையில் ஏதாவது ஒரு சுவாமி படத்திற்கு இந்த மாலையை மாட்டி வையுங்கள். வெட்டிவேர் மாலை என்பது உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது உங்களுக்கு வெற்றியை மட்டுமே கொண்டு வந்து சேர்க்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -