நிலையான ஐஸ்வர்யம் வீட்டில் நிலைத்து நிற்க 48 நாட்கள் வீட்டில் இந்த மகாலட்சுமி பூஜையை செய்தாலே போதும்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

நிலையான ஐஸ்வர்யம் வீட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக நாம் எடுக்காத முயற்சிகளே கிடையாது. என்னென்னவோ செய்து பார்த்தோம். ஆனால் கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கவே இல்லை. வீட்டில் பணம் காசு தங்கவில்லை. வீண் விரையம் ஆகிக் கொண்டே தான் இருக்கின்றது என்பவர்களுக்கு இந்த ஒரு பூஜை முறை நிச்சயம் கை கொடுக்கும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த சுலபமான பூஜையை உங்கள் வீட்டில் நிறைவு செய்து பாருங்கள். மனநிறைவான வாழ்க்கையை அந்த மகாலட்சுமி உங்களுக்கு நிச்சயம் கொடுப்பாள்.

coin

ஒரு கலசம் அதாவது பித்தளை சொம்பு அல்லது செம்பினால் ஆன சொம்பு, அல்லது மண் குடுவை இதில் உங்கள் சவுகரியத்தைப் பொறுத்து எந்த அளவில் வேண்டுமென்றாலும் ஒரு சொம்பினை எடுத்துக் கொள்ளலாம். முதலில் அந்த சொம்பை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

சொம்பில் மஞ்சள் குங்குமப் பொட்டு இட்டு கொள்ளுங்கள். அந்தச் சொம்பு நிரம்ப கோபுரமாக சில்லரை காசுகளை நிரப்பிக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் தங்க நாணயம் இருந்தால் அந்த நாணயத்தை இந்த நாணயங்களின் மேல் வைத்து விடுங்கள். தங்க நாணயம் இல்லை என்பவர்கள் பரவாயில்லை. ஒன்றும் பிரச்சனை கிடையாது. வெறும் சில்லரை காசுகளை வைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

kungumam

இந்த கலச சொம்பை வைத்து பூஜை அறையில் வழிபாடு செய்ய வேண்டும். ஒரு பெரிய தாம்பாளத்தில் பச்சரிசியைப் பரப்பி, அதன் மேல் இந்த கலச சொம்பை வைத்து அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். பெண்கள் தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு குங்கும அர்ச்சனையை, இந்த சில்லறை காசு நிரம்பிய கலசத்திற்கு செய்து வர வேண்டும். கலச சொம்பிற்க்கும் முன்பாக சிறிய வாழை இலை அல்லது வெற்றிலை வைத்து குங்குமத்தை உங்களுடைய மோதிர விரல் கட்டை விரலால் எடுத்து ஒவ்வொரு சிட்டிகை குங்குமாக அந்த இலையில் போடுங்கள். ‘ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி குங்குமார்ச்சனை செய்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். இடையே பெண்களுக்கு பூஜை செய்ய முடியாத மாதவிடாய் நாட்களை தவிர்த்து விட்டு கணக்கு வைத்துக் கொள்ளலாம். ஒன்றும் தவறில்லை. இந்த பூஜையை நிறைந்த வெள்ளிக்கிழமையில் தொடங்குங்கள். பூஜை செய்யும்போது மனதார உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலை தாயாரிடம் வைக்க வேண்டும்.

mahalakshmi1

நாற்பத்தி எட்டு நாட்கள் பூஜை முடிந்த பின்பு சொம்பில் இருக்கும் சில்லரை காசுகளை ஒரு மஞ்சள் துணியில் போட்டு முடிச்சாக கட்டி பீரோவில் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் கோவில்களுக்கு செல்லும் போது தெய்வீக காரியங்களுக்காக இந்த பணத்தை செலவு செய்தும் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்.

இந்த அர்ச்சனை செய்த குங்குமத்தை உங்கள் கைகளால் உங்களுடைய கணவருக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் தினம்தோறும் இட்டு விடுங்கள். நிச்சயமாக நன்மைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். மன நிறைவாக இருக்கும். சண்டை சச்சரவுகள் குறையும். வீடு நிச்சயம் கோவிலாக மாறும். ஐஸ்வர்யம் வீட்டில் நிரம்பி வழியும் நிலையாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பூஜையை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -