இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டால் அதிர்ஷ்டம் பெருகி வீடு, நிலம் வாங்கும் யோகம் வந்து சேரும்

arasa
- Advertisement -

மனிதனின் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு அவன் பணம், நகை, சொத்துக்கள் வாங்கி சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக அவனது தலைமுறை இன்பமாக வாழ முடியும். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு நல்ல வேலை கிடைத்து, அதில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, வருகின்ற வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருவதென்பதே சாதனையாக இருக்கிறது. இப்படிப்பட்ட தருணத்தில் சொத்துக்கள் வாங்குவதென்பது ஒரு மனிதனின் கனவாக தான் இருக்கிறது. இப்படிப்பட்ட கனவுகள் மெய்ப்பட வேண்டுமெனில் இந்த ராகுகால தீப பரிகாரத்தை முழுமனதுடனும், இறை நம்பிக்கையுடனும் செய்து பாருங்கள். இதற்கான பலனை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரைவில் பெற முடியும். வாருங்கள் இந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

cash

ஒரு சிலர் நன்றாக உழைத்து எளிதாக பணம் சம்பாதித்து இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் ஒரு ரூபாய் கூட எடுத்து வைக்க முடியாது. நினைக்கும் வகையில் சொத்துகள் வாங்க முடியாது. வரவுக்கு ஏற்ற செலவுகள் வந்து கொண்டே இருக்கும். வீண் விரயம் என்பது அவர்களின் குடும்ப சூழ்நிலையில் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

ஆனால் குறைந்த சம்பாத்தியமாக இருந்தாலும் அவர்கள் இல்லத்தில் ஆசைப்பட்ட அனைத்தையும் செய்து கொள்வார்கள். வீடு வாங்குவது, நகை வாங்குவது என சொத்துக்கள் வாங்குவதில் மிகவும் கவனமாக செயல்பட்டு அதனை நடத்தி முடிப்பார்கள். இவர்களை பார்ப்பவர்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கிறது என்றும் வெளிப்படையாகவே கூறிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறான அதிர்ஷ்டம் பெருவதற்க்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

job

இப்படி பாவம் மற்றும் புண்ணிய கணக்கின்படி தான் நமது வாழ்க்கைத்தரம் அமைகிறது. நமக்கு கிடைக்கும் நன்மை தீமைகளும் இவற்றைப் பொருத்துதான் இருக்கிறது. எனவே பாவம் தீரவும், சொத்துகள் வாங்கவும் தினமும் ராகு கால நேரத்தில் அரச இலை தீபம் ஏற்றவேண்டும். அரசமரத்தில் முப்பெரும் தெய்வங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. படைக்கும் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன்.

- Advertisement -

இவ்வாறு உலகை ஆளும் முப்பெரும் தெய்வங்களும் அரசமரத்தில் தான் வாசம் செய்கின்றனர். எனவே அரச மர இலையை வைத்து இந்த பூஜையை செய்வதன் மூலம் நமது பாவங்கள் அனைத்தும் தீர்ந்து நாம் நினைப்பது அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதற்காக பூஜை அறையின் முன் அரச இலையை வைத்து, அதன் மீது ஒரு அகல் விளக்கிற்க்கு மஞ்சள் ,குங்குமம் பொட்டு வைத்து வைக்கவேண்டும். பிறகு அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

arasa-maram1

இந்த தீபத்தை ஏற்றி, கண்களை மூடி, கைகளைக் கூப்பி, குல தெய்வத்தை நினைத்துக் கொண்டும், துர்கை அம்மனை நினைத்து கொண்டும், நான் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து, எனது வாழ்க்கை முன்னேறவும், எனது தலைமுறையினரின் நலனுக்காக சொத்துக்கள் வாங்கவும் அருள் புரிய வேண்டும். என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த தீபத்தை தினமும் வரும் ராகு கால நேரத்தில் ஏற்றி வர வேண்டும். இதனை ஏற்றுவதற்கு இத்தனை நாட்கள் என்ற கணக்கு ஏதும் கிடையாது. இதனைத் தொடர்ந்து ஏற்றிவர உங்கள் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் வரத் தொடங்கும்.

- Advertisement -