வீட்டில் மனநிம்மதியே இல்லையா? பகலிலும், இருள் சூழ்ந்த நிலையில் உங்கள் வீடு பொலிவிழந்து காணப்பட்டால், உடனடியாக இந்த 3 பொருட்கள் சேர்த்த தீர்த்தத்தை உங்கள் வீட்டில் தெளித்து விடுங்கள்.

- Advertisement -

வீட்டில் எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாமல் இருப்பது போல சில நேரங்களில் வெறுமையாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் மன நிம்மதி இல்லாமல் தவித்து வருவார்கள். காரணம் என்னவென்று தெரியாது. திடீர் திடீரென்று வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். பணவிரயம் ஏற்படும். மன கஷ்டம் ஏற்படும். உறவுகளுக்கிடையே சண்டை வந்துவிடும். நன்றாக இருக்கும் வீட்டில் பீடை பிடித்தது போல பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக தலைதூக்கும். என்னவென்று யோசிப்பதற்கு கூட நேரமிருக்காது. நன்றாக இருந்த வீட்டில் திடீரென்று இருள் சூழ்ந்து இருக்கும்.

family fight

இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து எல்லாம் சரியாக சொல்ல முடியாது. எல்லோருக்கும் கெட்ட நேரம் என்ற ஒன்று வரத்தான் செய்யும். அந்த கெட்ட நேரத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். பொதுவாக கண்ணுக்குத் தெரியாத கெட்ட ஆற்றல் நம் வீட்டில் குடிபுகுந்து இருந்தாலும், அல்லது நம்முடைய உடலில் குடிபுகுந்து இருந்தாலும் நமக்கு பல கஷ்டங்கள் வரத்தொடங்கும்.

- Advertisement -

நிம்மதி இழந்த சூழ்நிலையில் உங்களுடைய வீட்டை குளிர வைக்க, ஆக்ரோஷமாக பிரச்சினைகள் தலை தூக்கும் நேரத்தில், அந்த பிரச்சனைகளின் தாக்கத்தை தணிக்க, ஒரு சுலபமான தீர்த்தம் உள்ளது. அந்த தீர்த்தத்தை நம் வீட்டில் எப்படி தயார் செய்யலாம். அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

nanaari

இந்த தீர்த்தத்தை தயார் செய்ய மூன்று பொருட்கள் தேவை. பன்னீர், நன்னாரி வேர், துளசி இலை. ஒரு சிறிய செம்பு பாத்திரத்தில் பன்னீர் ஊற்றி அதில் கொஞ்சமாக நன்னாரி வேர் போட்டு, துளசி இலைகளை போட்டு ஒரு மணி நேரம் அப்படியே ஊற வைத்துவிடுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். நன்னாரி வேரை கிடைக்கவில்லை என்றாலும் நன்னாரி பொடியை இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

நன்னாரி வேர் துளசி இலை 2 பொருளும் பன்னீரில் நன்றாக ஊறிய பின்பு, அந்த பன்னீரோடு கொஞ்சமாக தண்ணீரை கலந்து, இந்த தீர்த்தத்தை உங்கள் வீட்டு நிலை வாசற் படியிலிருந்து வீட்டிற்குள் தெளித்து வர வேண்டும். வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லா இடங்களிலும் தெளிக்கலாம். பூஜை அறை, சமையல் அறை, படுக்கை அறை இப்படி குளியல் அறை கழிவறை தவிர்த்துவிட்டு உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற இடங்களில் எல்லாம் இந்த தீர்த்தத்தை தெளித்து விட்டு, இறுதியாக உங்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்களின் தலையிலும் இந்த தீர்த்தம் படும்படி நன்றாக தெளித்து விடுங்கள் போதும்.

உங்கள் கையாலேயே இந்த தீர்த்தத்தை எடுத்து தாராளமாக தெளிக்கலாம். தவறு கிடையாது. அப்படி இல்லை என்றால் வெற்றிலைமாலை வேப்ப இலை கிடைத்தாலும் அதில் இந்த தீர்த்தத்தை தொட்டு வீடு முழுவதும் தெளித்து கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம் தான். இந்த தீர்த்தம் உங்களுடைய வீட்டை சாந்தப்படுத்தும். வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சினைகளின் தன்மையை படிப்படியாக குறைக்கும்.

thulasi theertham

இதை எத்தனை நாட்கள், இப்படி செய்யவேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சினைகள் தலைவிரித்தாடும் பட்சத்தில் தினமும் தவறாமல் இதைச் செய்து வந்தால், வீட்டில் உங்களை அறியாமலேயே ஒரு நிம்மதி கிடைப்பதை, மனரீதியாக உணர்வீர்கள். அதுவரை விடாமல் இந்த தீர்த்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக எல்லோருக்கும் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -