வேண்டுதல் நிறைவேற பரிகாரம்

poojai arai woodden box writing
- Advertisement -

ஒவ்வொருவரும் இறைவனை சரணடைவதே தனக்கான வேண்டுதல்களை அவர் நிறைவேற்றி தருவார் என்பதற்காகவே. கடவுளை வணங்குவது ஆலயம் செல்வது வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்வது என ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் மனிதன் தன்னுடைய தேவைகளை வைத்து தான் செய்கிறான். இதில் தவறு என்று எதுவும் கிடையாது. நம்முடைய தேவைகளை அவனிடம் இன்றி வேறு யாரிடம் சொல்ல முடியும்.

அந்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுமா என்பது அவரவரின் முயற்சியும் நேரத்தில் தன்மையும் பொறுத்து அமையும். சில குறிப்பிட்ட பரிகார முறைகளை செய்யும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் பலிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன மாதிரியான பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வேண்டுதல் நிறைவேற பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு நாம் சில பொருட்களை வாங்க வேண்டும் அதில் முக்கியமாக ஒரு சிறிய சந்தன பெட்டி வாங்க வேண்டும். தெய்வீகப் பொருட்கள் விற்கும் கடைகளில் இது நிச்சயமாக இருக்கும் வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல மருதாணி விதைகளையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு முதலில் ஒரு அந்த சந்தன பெட்டியில் இந்த மருதாணி விதைகளை மேலே தூவி விடுங்கள். அதன் பிறகு ஒரு வசம்பை நெய்யில் தொட்டு அகல் விளக்கில் தீ பொருத்தி அதில் காட்டுங்கள். வசம்பு நன்றாக கருகி விடும். அதன் பிறகு இந்த வசம்பின் துகள்களை தனியாக ஒரு கிண்ணத்தில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு மஞ்சள் நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேப்பரை மடித்து வைக்க கூடாது. ஆகையால் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் சந்தன பெட்டியின் அளவிற்கு ஏற்றார் போல் பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேப்பரில் முதலில் ஓம் என்று போட்டு விடுங்கள். அதன் பிறகு இரண்டு பக்கம் அஃகு என்ற வார்த்தையும் எழுதி விடுங்கள்.

இப்போது அந்த மஞ்சள் நிறத்தாளில் நீங்கள் ஏற்கனவே எடுத்து வைத்து வசம்பு தூளை மயிலிறகின் அடியில் குச்சி போன்ற பாகம் இருக்கும் அதை வைத்து உங்களுடைய வேண்டுதலை எழுதுங்கள். ஏதாவது ஒரு வேண்டுதலை மட்டும் தான் எழுத வேண்டும். சந்தன பெட்டி அதன் மேல் மருதாணி விதைகள் அதன் மேல் நீங்கள் எழுதிய இந்த மஞ்சள் நிறத்தால் இதற்கு மேல் கடைசியாக கொஞ்சம் பச்சை கற்பூரம் தூவி வெட்டியை மூடி பூஜையறையில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் மயில் தோகை

இந்த பரிகாரத்தை செய்த பிறகு தினமும் இந்த பெட்டிக்கு தீப தூப ஆராதனை காட்டி உங்கள் வேண்டுதல் பலிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு நம்பிக்கையுடன் அதற்கான முயற்சி எடுங்கள். 48 நாட்களில் நிச்சயமாக பலிக்கும் என்று சொல்லப்படுகிறது. இது சித்தர்கள் கையாண்டு அற்புதமான முறை நம்பிக்கை இருந்தால் நீங்களும் நம்பிக்கையுடன் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -