பண வரவை அதிகரிக்கும் மயில் தோகை

mayil thogai
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பணத்தின் தேவை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. இந்த பண தேவையை பூர்த்தி செய்வதற்காக தான் பல வழிகளில் அனைவரும் முயற்சி செய்கிறார்கள். பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக முயற்சி செய்வதை விட வருகின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். வாய்ப்பே கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மயில் தோகையை வீட்டில் எந்த இடத்தில் வைப்பதன் மூலம் பணவரவு அதிகரிக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான ஆகர்சன சக்தி இருக்கிறது என்று தாந்திரீக ரீதியாக கூறப்படுகிறது. அந்த வகையில் மயில் தோகை என்பது எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நேர்மறை ஆற்றல்களை ஈர்த்து தரக்கூடிய ஒரு அற்புதமான பொருளாக திகழ்கிறது. முருகனின் வாகனமாக திகழக்கூடிய மயிலில் இருந்து பெறப்படும் இந்த மயில் தோகையானது முருகனின் பரிபூரண அருளை பெற்ற பொருளாகவும் திகழ்கிறது.

- Advertisement -

யாருடைய வீட்டில் மயில் தோகை இருக்கிறதோ அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்காது. நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். மேலும் நோய் நொடிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் குறையும் என்று கூறப்படுகிறது. பாம்பை எதிர்க்கும் குணம் கொண்டதுதான் மயில் என்பதால் மயில் தோகையை நாம் வீட்டில் வைக்கும் பொழுது பாம்பு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், ராகு கேது போன்ற தோஷங்கள் அனைத்தும் நீங்கும். மேலும் நம்முடைய வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகளை நம்மை தேடி வரவைக்கும் ஒரு அற்புதமான ஆற்றல் கொண்டதாக மயில் தோகை விளங்குகிறது. அதோடு நிற்காமல் பணவரவையும் அதிகரிக்க கூடிய அற்புதமான ஆற்றல் கொண்டதாக தான் இந்த மயில் தோகை திகழ்கிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட இந்த மயில் தோகையை நம் வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது தெரியாமல் பலரும் பல இடங்களில் வைக்கிறார்கள். பொதுவாக மயில் தோகையை பூஜையறையில் முருகனின் படத்துடன் இணைந்தவாறு வைத்து வழிபடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அதைவிட மிகவும் சிறப்பு வாய்ந்த இடமாக திகழ்வதுதான் தலைவாசல். தலைவாசலின் இரண்டு புறமும் நாம் மயில் தோகையை வைப்பதன் மூலம் வீட்டிற்குள் எந்த விதமான எதிர்மறை ஆற்றல்களும் வராது என்று கூறப்படுகிறது.

அதே போல் தலைவாசல் கதவின் பின்புறமாக மயில் தோகையை வைப்பதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும். மேலும் கண்டிப்பான முறையில் வீட்டில் யாராவது ஒருவருக்காவது ராகு அல்லது கேது போன்ற கிரகங்களின் சஞ்சாரம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் இதை வீட்டு நிலைவாசலின் பின்புறம் வைக்கும் பொழுது ராகு கேதுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை நீக்கும் குலதெய்வ வழிபாடு

முருகனின் வாகனமான மயிலின் தோகையை நாம் நம் வீட்டில் வைப்பதால் நம்முடைய பணவரவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ராகு கேது தோஷத்தில் இருந்தும் விலக முடியும்.

- Advertisement -