நினைத்த காரியம் நடக்க வில்வ இலை வழிபாடு

siva lingam pray
- Advertisement -

எண்ணிய எண்ணம் யாவும் எண்ணிய வண்ணம் நிறைவேற அடிபணிய வேண்டிய இறைவன் சிவபெருமான். அத்தகைய சிவபெருமானுக்கு உகந்த பொருட்கள் பல இருப்பினும் வில்வம் மிக விசேஷமானதாக சொல்லப்படுகிறது. ஏக வில்வம் சமர்ப்பணம் என்ற இந்த ஒரு வார்த்தை போதும் வில்வத்தின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ள வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை.

சிவபெருமானை என்னென்ன பொருட்கள் கொண்டு அர்ச்சனை செய்தாலும் இந்த வில்வ இலையை கொண்டு செய்யப்படும் அர்ச்சனைக்கு அத்தனை மகத்துவம் உண்டு. பாவங்களை நீக்கக் கூடியது சகல சௌபாக்கியங்களையும் தரக் கூடிய சிவன் அருள் பெற்றது இந்த வில்வம் இலை. பெரும்பாலான சிவாலயத்தில் வில்வம் ஸ்தல விருட்சமாக கட்டாயமாக இருக்கும்.

- Advertisement -

அப்பேற்பட்ட வில்வ இலையை கொண்டு சிவபெருமானை வழிபடும் போது நம்முடைய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் அதிலும் வில்வ இலையில் இப்படி எழுதி வழிபட்டால் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

நினைத்த காரியம் யாவும் நடக்க

இந்த வழிபாட்டை ஆலயத்தில் சென்று தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டிலே கூட செய்யலாம் இந்த வழிபாடு செய்வதற்கு சிவலிங்கம் சிவம் பெருமானின் படம் இருந்தால் நல்லது இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் ஒரே ஒரு வில்வ இலை மட்டும் இதற்கு கட்டாயமாக வேண்டும்.

- Advertisement -

இந்த வில்வ இலையை நல்ல சுத்தமான தண்ணீரால் அல்லது பன்னீரில் முதலில் கழுவி விடுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான சந்தனத்தை பிழைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு சிறிய குச்சி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த குச்சிக்கு பதிலாக பூக்களின் காம்பை கூட பயன்படுத்தலாம். ஏனெனில் குச்சி என்றால் நீங்கள் கீழே கிடைக்கும் ஏதோ ஒரு குச்சியை எடுத்து பயன்படுத்தக் கூடாது.

இப்போது இந்த சந்தனம் வில்வ இலை அனைத்தையும் பூஜை அறையில் வைத்து விட்டு முதலில் தீபம் ஏற்றி விடுங்கள். அதன் பிறகு இந்த வில்வ இலையை உங்கள் கையில் வைத்து சந்தனத்தை குச்சியில் தொட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வில்வ இலையில் ஓம் நமசிவாய என்ற நாமத்தை எழுதுங்கள். அதன் பிறகு பூஜை வைத்து ஓம் நமசிவாய என்று நாமத்தை 11 முறையோ 24 முறையோ உங்களால் எத்தனை முறை சொல்ல முடியும் அத்தனை முறை பாராயணம் சொல்லுங்கள்.

- Advertisement -

இதை சொல்லும் போது சிவபெருமானின் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த வில்வ இலையில் இருக்கும் சந்தனம் லேசாக காய்ந்தவுடன் அதை எடுத்து உங்கள் பாக்கெட் அல்லது மணி பரிசல் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வில்வ இலையுடன் நீங்க வெளியில் சென்றால் எந்த காரியத்திற்காக செல்கிறீர்களோ அது நிச்சயமாக தடை இன்றி நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

இந்த வழிபாட்டை தினமும் கூட செய்யலாம். குறிப்பாக ஏதேனும் முக்கியமான பணியை நிமித்தமாக செல்லும் போது இப்படி வேண்டி விட்டு செல்லுங்கள். இதே போல சிவாலயத்தில் சென்று வில்வ இலையில் எழுதி சிவலிங்கத்திடம் வைத்து வழிபாடு செய்து பிறகும் கொண்டு செல்லலாம் பெரிய பெரிய காரியங்கள் கூட எளிதில் சித்தியாக கூடிய அற்புதமான வழிபாடு.

இதையும் படிக்கலாமே: வருமானம் பெருக பரிகாரம்

சிவனின் அருள் இருந்தாலே நம்முடைய செயல்கள் அனைத்தும் வெற்றி தான். அதிலும் அவர் அருள் பெற்ற இந்த வில்வ இலை நம்முடன் இருக்கும் போது தோல்வி என்ற வார்த்தை கூட நம் அருகே வராது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் சிவபெருமான் அருளுடன் இந்த வழிபாடு செய்யலாம்.

- Advertisement -