நினைத்த வேலை கிடைக்க வழிபாடு

job sucess
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட பணத்தை நாம் பெற வேண்டும் என்றால் அதற்கான உழைப்பை நாம் செய்ய வேண்டும். இந்த பணத்தை வேலை செய்தும் சம்பாதிப்பார்கள் அல்லது சொந்தமாக தொழில் செய்தும் சம்பாதிப்பார்கள். இப்படி வேலை செய்பவர்களும் தொழில் செய்பவர்களும் தங்களுக்கு தேவையான அளவு பணத்தை சம்பாதித்து விடுகிறார்களா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

பலரும் தங்களுடைய படிப்பிற்கேற்ற வேலையை செய்யாமலும், தங்களுடைய திறமைக்கேற்ற வேலையை செய்யாமலும் கஷ்டப்படுகிறார்கள். அதே சமயம் கஷ்டப்பட்டு பாடுபட்டு உழைத்து தொழிலை முன்னேற்றி வருமானத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏதாவது ரூபத்தில் தடைகள் ஏற்பட்டு அவர்களுடைய உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். இப்படி வேலை, தொழில் தொடர்பாக ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு ராஜராஜேஸ்வரி அம்மனை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எந்த நாளை நாம் தேர்வு செய்கிறோமோ அந்த நாள் வளர்பிறை நாளாக இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அந்த நாளில் யார் வேண்டுதல் வைக்கிறார்களோ அவர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு மிகவும் தேவைப்படுவது ராஜராஜேஸ்வரி அம்மனின் படம் தான்.

ராஜராஜேஸ்வரி அம்மனின் படத்தை வீட்டு பூஜை அறையில் வாங்கி வைத்து சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு மல்லிகை பூக்களால் மாலை தொடுத்து அணிவிக்க வேண்டும். மல்லிகை பூக்கள் கிடைக்காத பட்சத்தில் வாசனை மிகுந்த முல்லை, ஜாதிப் பிச்சி போன்ற மலர்களாலும் மாலை கட்டி போடலாம்.

- Advertisement -

எந்த பூக்களால் நாம் மாலை கட்டி போடுகிறோமோ அந்த பூக்களில் சிறிது உதிரி பூக்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உதிரிப் பூக்களை வைத்து ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது ராஜராஜேஸ்வரி அம்மனின் மந்திரங்கள் தெரிந்தால் அந்த மந்திரங்களை கூறி 108 முறை அர்ச்சனை செய்யலாம். அவ்வாறு மந்திரங்கள் தெரியாத பட்சத்தில் “ஓம் ராஜராஜேஸ்வரியே போற்றி” என்னும் மந்திரத்தை 108 முறை கூறியும் அர்ச்சனை செய்யலாம்.

இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்த பிறகு வீட்டிலேயே மாவிளக்கு தயார் செய்து அதை ராஜராஜேஸ்வரி அம்மனின் படத்திற்கு முன்பாக வைத்து சுத்தமான நெய் ஊற்றி மஞ்சள் நிற திரி போட்டு இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை அம்மனிடம் மனதார கூறிவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். கடைசியாக ஆரத்தி காட்டி நிறைவு செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த முறையில் தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர நாம் வேலை ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் என்ன வேண்டுதலை வைத்தோமோ அந்த வேண்டுதல் கண்டிப்பான முறையில் நிறைவேறும். மேலும் தொழில், வேலை தொடர்பாக இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர தேங்காய் பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் வேலை மற்றும் தொழில் ரீதியான அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

- Advertisement -