காரிய தடை நீக்கும் திலகம்

amman-kunkumapoo
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் பலரின் தோல்விக்கு காரணமே அவர்கள் எடுக்கும் காரியத்தில் வெற்றி பெற முடியாமல் அடுத்தடுத்து தடைகளை சந்தித்து கொண்டு இருப்பது தான். இந்த தடைகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம்முடைய கிரக பலன்கள் அல்லது கண் திருஷ்டி, தீய எண்ணங்கள். ஏன் சில நேரங்களில் நம்முடைய பொறுப்பில்லாத தனங்களாக கூட இருக்கலாம்.

இப்படி எந்த காரணமாக இருப்பினும் அதை மாற்றக் கூடிய ஒரு அருமையான பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த பரிகாரத்தை நாம் தெரிந்து கொண்டு அதை பின்பற்றி செய்யும் பொழுது நாம் தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியில் முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தடை நீங்க பரிகாரம்

முதலில் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் அதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நம் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சோர்வு இல்லாமல் நாம் செய்ய வேண்டும். இவை இரண்டையும் நாம் சரிவர செய்யும் பொழுது அதற்கான வெற்றி கிடைத்ததாக தான் அர்த்தம்.

சில நேரங்கள் அதையும் மீறி தோல்வியை சந்திப்போம். ஒரு சில நேரங்கள் இப்படி நாம் சிந்திக்க முடியாத அளவிற்கு சில சூழ்நிலைகள் நம்மை அழுத்தும். இவை எல்லாம் மாற்றுவதற்கான ஒரு அருமையான வழிமுறை தான் இந்த அரகஜா மை. இந்த மைக்கு பிறவற்றை வசியம் செய்யும் தன்மை இருப்பதுடன், நேர்மறை ஆற்றலை கொடுக்கக் கூடிய தன்மையும் உண்டு. அதுமட்டுமின்றி இதற்கு தெய்வ அனுகிரகமும் உண்டு.

- Advertisement -

இந்த அரகஜா மையானது நாட்டு மருந்து கடைகள் அல்லது தெய்வீக பொருட்கள் விற்கும் இடத்தில் கிடைக்கும். எங்கும் கிடைக்கவில்லை எனில் ஆன்லைனில் இப்பொழுது இது அதிகமாக கிடைக்கிறது. இதில் நல்ல தரமான அரகஜா ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் தரமான குங்குமப்பூ சிறிதளவு வாங்கிக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு உங்களுடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம் யாரேனும் ஒரு தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு இந்த அரகஜா மை டப்பாவில் கொஞ்சமாக குங்குமப்பூவை போட்டு மூடி பூஜை அறையில் வைத்து விடுங்கள். இது மூன்று நாட்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்து மறுபடியும் ஒரு முறை தீபம் ஏற்றி வேண்டிக் கொண்டு அந்த மையை பூஜை அறையில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மையை நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது நெற்றியில் வைத்துக் கொண்டு வெளியில் செல்லுங்கள். இது உங்கள் நெற்றியில் இருக்கும் போது உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை தருவதோடு, உங்களிடம் ஒரு ஈர்ப்புத் தன்மை உருவாக்கும். ஆகையால் நீங்கள் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் அல்லது அது தொடர்பாக யாரிடம் பேசினாலும் நிச்சயம் அது மறுப்பில்லாமல் வெற்றியில் முடியும்.

இதையும் படிக்கலாமே: நன்மை தரும் நவகிரக வழிபாடு

இந்த முறை நாம் காலம் காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு முறை தான். நம்முடைய காரியங்கள் எதுவும் தடையில்லாமல் வெற்றியில் முடிய பயன்படுத்தப்படும் இந்த அரகஜா மை முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -