நன்மை தரும் நவகிரக வழிபாடு

navagragam
- Advertisement -

சில பேருக்கு கஷ்டமும் பிரச்சனையும் நான்கு பக்கத்தில் இருந்தும் வந்து அப்படியே கழுத்தை நெரிக்கும். வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். தவறு கிடையாது. ஆனால் ஒட்டு மொத்த பிரச்சனையும் சேர்ந்ததுதான் ஒருவருடைய வாழ்க்கை என்றால், அவர்களால் எப்படி நிம்மதியாக வாழ முடியும்.

மனித பிறவி எடுத்ததற்கான அர்த்தமே இருக்காது. சதாகாலமும் கஷ்டத்தோடு வாழ்பவர்கள், துன்பத்தில் இருந்து வெளிவர முடியாமல் இருப்பவர்கள், சனிக்கிழமை அன்று ஆன்மீகம் சொல்லும் இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே போதும். நிச்சயம் நன்மை நடக்கும்.

- Advertisement -

கஷ்டத்தை நீக்கும் நவகிரக வழிபாடு

உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது பழமையான சிவன் கோவில்களில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. அங்கு நவகிரக சன்னிதானம் இருக்கும். அந்த கோவிலுக்கு செல்லுங்கள். நீங்கள் செல்லும்போது ஒன்பது தேங்காய், ஒன்பது நவகிரகத்திற்கும் கதம்ப பூ, என்று சொல்லுவார்கள். எல்லா பூக்களையும் சேர்த்து கட்டி வைத்திருக்கும் பூ, அந்த பூ ஒன்பது முழம், வாழைப்பழம் 18, வெற்றிலை 18, பாக்கு 18.

இந்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தேங்காய், ஒரு முழம் கதம்ப பூ, இரண்டு வெற்றிலை, இரண்டு பாக்கு, இரண்டு வாழைப்பழம், இந்த தாம்பூல செட் தேவை. இதை கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்து நவகிரகங்களுக்கு எல்லாவற்றிற்கும் தனித்தனியாக இந்த தாம்பூலத்தை வைத்து தேங்காய் உடைத்து உங்கள் பெயர் நட்சத்திரம் கோத்திரம் சொல்லி, ராசி சொல்லி அர்ச்சனை செய்து தரும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதேபோல அவரும் செய்து தருவார். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது மனம் உருகி நவகிரகங்களிடம் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். நவகிரகத்திற்கு முன்னாடி இருக்கும் வெற்றிலை பாக்கு தேங்காய் பழத்தை எல்லாம் நீங்கள் திரும்ப வாங்க கூடாது. அதை கோவிலிலேயே விட்டு வர வேண்டும்.

இந்த வழிபாட்டை செய்து முடித்துவிட்டு ஈசனிடம் வாங்க. ஈசனின் முன்னாள் ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து கண்களை மூடி கஷ்டங்கள் தீர வேண்டும் இறைவா என்று மனதார பிரார்த்தனை செய்துகொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்து கொடிமரத்தில் நமஸ்காரம் செய்து மீண்டும் வீடு திரும்பவும். ஒரே ஒரு சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு.

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் துன்பங்கள் எல்லாம் சரியாகும். இதுவரைக்கும் உங்கள் வாழ்க்கை நஷ்டத்திலேயே ஓடிக்கொண்டிருந்தாலும் சரி இனிமேல் லாபகரமாக மாறும். அதாவது துக்கம் போய், சந்தோஷம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -