பிரம்ம முகூர்த்த தீபம் ஏற்றும் நேரம்

sivan agal dheepam
- Advertisement -

வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது நாம் காலம் காலமாக செய்து வரும் வழக்கம் தான். என்ன இருந்தாலும் பிரம்ம முகூர்த்த தீபம் என்பது மிகவும் விசேஷமானது. இந்த நேரத்தில் நாம் தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். அப்படி ஏற்றப்படும் தீபத்தினையே எந்த நேரத்தில் சரியாக ஏற்ற வேண்டும். எப்படி ஏற்ற வேண்டும் என்பதெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிரம்ம முகூர்த்த தீபம்

பொதுவாக நாம் வீட்டில் பிரம்ம முகூர்த்த தீபம் ஏற்றுவது நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணி வரை ஏற்றுவோம். அதன் பிறகு அந்த நாளுக்குரிய ஹோரை நேரம் தொடங்கி விடும். மகான்கள், முனிவர்கள் இறைப்பணி ஆற்றுபவர்கள் காலை மூன்று மணியிலிருந்து 5 மணிக்குள்ளாக இந்த பிரம்ம முகூர்த்த வழிபாடுகளை செய்வார்கள். ஏனெனில் இது தேவர்களுக்கான பிரம்ம முகூர்த்த நேரம். ஆகையால் இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்வார்கள்.

- Advertisement -

ஆகையால் நாமும் இந்த பிரம்ம முகூர்த்த தீபத்தை காலை மூன்று முப்பது மணியிலிருந்து நான்கு மணிக்குள்ளாக ஏற்றும் பொழுது நாம் கேட்கும் எதுவும் நமக்கு நிச்சயமாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் நாம் இந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த தீபத்தை ஏற்ற மன்னாலான தட்டு போன்ற ஒரு சட்டியை வாங்கிக் கொள்ளுங்கள். இதை தண்ணீரில் வைத்து சுத்தம் செய்த பிறகு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதில் கல் உப்பை நிரப்பி அதன் மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை இலுப்பை எண்ணையும் பஞ்சித் திரியும் பயன்படுத்தி ஏற்றுங்கள்.

- Advertisement -

காலை மூன்று முப்பது மணிக்கு இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் கிழக்கு முகமாக எரியும்படி ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்ற நீங்கள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பல் துலக்கி கை கால் முகம் அலம்பிய பிறகு சுத்தமான திருநீரை நெற்றியில் ஓம் நமசிவாய என்ற நாமத்தை சொல்லி பூசி கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த தீபத்தை ஏற்றலாம். நீங்களும் கிழக்குப் பார்த்தவாறு அமர வேண்டும். அதன் பிறகு இந்த தெய்வத்தையே உங்களுடைய குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வமாக பாவித்து உங்களுக்கு வேண்டியவை உடனே நிறைவேற வேண்டும் என்ற கோரிக்கையை வையுங்கள்.இப்படி வேண்டும் போது நீங்கள் வைக்கும் கோரிக்கை மூன்றே நாளில் நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பில் உயர்ந்த நிலைக்கு செல்ல பரிகாரம்.

ஒரு வேளை உங்களுடைய கிரகநிலை நேரம் சரியில்லாத சூழ்நிலையாக இருந்தால் கூட ஒரு மண்டலத்திற்கு உள்ளாக இதற்கான பலன் கை மேல் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -