செல்வ செழிப்பில் உயர்ந்த நிலைக்கு செல்ல பரிகாரம்.

bero
- Advertisement -

நிறைய பணம் காசு நகை, சொத்து பத்திரம் இவைகளை பீரோவில் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் தான் இருக்கிறது. ஆனால் அதை எல்லோராலும் நிறைவேற்றி காட்ட முடியுமா. நிச்சயம் முடியாது. யார் யாருக்கு எவ்வளவு பிராப்தம் இருக்கிறதோ, அவரவர்களுக்கு உண்டான வருமானத்தையும், செல்வ செழிப்பையும் அந்த இறைவன் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான்.

இருந்தும் நம்முடைய ஆசைகளை அடக்கிக் கொள்ள முடியவில்லை. நிறைய பணம் சேர்க்கணும் செல்வ செழிப்போடு வாழனும் என்று அடுத்தவர்களை பார்த்து பேராசைப்படுகின்றோம். பீரோவை திறந்து பார்த்தால் அதில் கட்டு கட்டாக பணமும் தங்கமும் வெள்ளியும் இருக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும். பணத்தின் மீது ஆசைப்பட வேண்டும். நகையின் மீது ஆசைப்பட வேண்டும்.

- Advertisement -

ஆசைப்பட்டால் போதுமா. ஆசைப்பட்டதை அடைய அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறதே. இந்த அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதற்கு நேர்மறை ஆற்றலை கவருவதற்கு ஆன்மீகத்தில் ஒரு சில பொருட்கள் சொல்லப்பட்டுள்ளது. இந்த பொருட்களை எல்லாம் தனித்தனியாக வைத்தாலே பணம் அந்த இடத்தில் நிறைய சேரும்.

இந்த ஐந்து பொருட்களையும் ஒன்றாக வைத்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்கள் பீரோவில் தங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த ஐந்து பொருட்கள் என்னென்ன. அதை உங்கள் வீட்டு பீரோவில் எப்படி வைக்கப் போகின்றோம். பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

அஷ்ட ஐஸ்வர்யத்தையும் பெற்று தரும் விதைகள்

தாமரை விதை, மருதாணி விதை, பூசணி விதை, பாதாம் பிசின், முருங்கை விதை. இந்த ஐந்து பொருட்களுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். பாதாம் பிசினை விதை என்று சொல்ல மாட்டோம். ஆனால் அதுவும் அடங்கும். இந்த ஐந்து பொருட்களை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி இதை அப்படியே பீரோவில் வைக்கணும்.

உங்க வீட்டில் கொஞ்ச நகை, கொஞ்சம் பணம் இருந்தாலும் அந்த இடத்தில் கொண்டு போய் இந்த பாட்டிலை வச்சிடுங்க. அந்த கொஞ்ச பணம், கொஞ்சம் நகையை ஒரு சில நாட்களில் பல மடங்காக பெருக்கி உங்களுக்கு கொடுக்கக் கூடிய வேலையை இது செய்யும். நல்லது நல்லதை ஈர்க்கும் ஆகவே காலியாக இருக்கும் பீரோவில் இதை வைக்கக்கூடாது.

- Advertisement -

நீங்கள் இந்த பாட்டிலை வைக்கும் இடத்தில் பத்து ரூபாய் நோட்டு, ஒரு குண்டுமணி தங்கம் வெள்ளி, இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சொத்து பத்திரங்கள் இருக்கக்கூடிய இடத்தில் இதை வைத்தால் உங்களுடைய சொத்து பத்திரங்கள் மேலும் மேலும் இரட்டிப்பாகும். நேராக நாட்டு மருந்து கடைக்கு போய் ஐந்து விதைகளை வாங்கி குலதெய்வத்தை வேண்டி அப்படியே பாட்டிலில் போட்டு வைக்கலாம்.

இத்தனை விதைதான் போட வேண்டும் என்ற அளவுகளும் கிடையாது. நீங்கள் வைத்திருக்கும் பாட்டிலை பொறுத்து இந்த ஐந்து பொருட்களையும் அதில் போட்டு வச்சுக்கோங்க. மூன்று மாதங்களில் என்ன வித்தியாசம் தான் தெரிகிறது என்று பார்ப்போமே. நிச்சயமாக இந்த ஐந்து விதைகளை பீரோவில் வைப்பதால் நமக்கு எந்த நஷ்டமும் வரப்போகுது கிடையாது.

இதையும் படிக்கலாமே: அளவில்லா பணத்தை அள்ளித் தரப்போகும் இடது கை பரிகாரம்.

பரிகாரத்திற்கு மொத்தமாக ஆகப்போகும் செலவு 100. இதில் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் பெறுவதற்கு நிறைய இருக்கிறது என்ற தகவல் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -