நினைத்தது நடக்க தீப வழிபாடு

deepam
- Advertisement -

இருளை விலக்கி வெளிச்சத்தை தரக்கூடிய தீபத்தை நாம் மனதார முழு நம்பிக்கையுடன் ஏற்றினோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய இருளையும் அது நீக்கி நம் வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும் என்பதால்தான் நம் முன்னோர்கள் காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அப்படி விளக்கேற்றும் போது எந்த மாற்றத்தை செய்தால் நாம் நினைத்தது நடைபெறும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவாக திகழக் கூடியதுதான் தீபம். எந்த தெய்வத்தை நினைத்து நாம் தீபம் ஏற்றுகிறோமோ அந்த தெய்வம் அந்த தீபத்தில் ஆகர்ஷணம் செய்யப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. அப்படிப்பட்ட தீபத்தை நாம் நம்முடைய தேவைக்காக எப்படி ஏற்றுவது என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக தீபம் ஏற்றுவது என்று பார்க்கும் பொழுது எந்த விளக்கில் தீபம் ஏற்றுகிறோமோ அதற்கேற்ற பலன் கிடைக்கும். அதே போல் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றுகிறோமோ அதற்கேற்ற பலன் கிடைக்கும். எந்த திரி உபயோகப்படுத்துகிறோமோ அதற்கேற்ற பலன் கிடைக்கும் என்று பல வகைகளில் தீபத்தின் பலன்களை நம்மால் கூற முடியும். இதில் சில காரியங்கள் நடந்தேறுவதற்கு எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்று பார்ப்போம்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த சுப நிகழ்ச்சிகளை செய்வதற்கு முயற்சி செய்வார்கள். அப்படி முயற்சி செய்யும்பொழுது ஒரு கிண்ணத்திலோ அல்லது தாம்பாலத்திலோ, மஞ்சளைக் கொட்டி அதற்கு மேல் இரண்டு அகல்களை வைத்து தீபம் ஏற்றி வழிபட நினைத்த சுப காரியங்கள் அனைத்தும் எந்தவித தடைகளும் இன்றி மங்களகரமாக நடந்திடும்.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க வேண்டும் அல்லது கிடைத்த வேலையில் பதவி உயர்வு கிடைக்க வேண்டும். பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சந்தன கட்டையை வாங்கி உரசி அதிலிருந்து சந்தனத்தை எடுத்து தாம்பாளத்தில் தடவி அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். சுத்தமான சந்தனம் கிடைக்காத பட்சத்தில் ஏலக்காயை போட்டு அதற்கு மேல் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டாலும் அவர்கள் விரும்பிய வேலையும், பதவி உயர்வும், அந்தஸ்தும், புகழும் கிடைக்கும்.

வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கிறது. எதிரிகளின் தொல்லை தாங்க முடியவில்லை, எங்கு சென்றாலும் பயமாக இருக்கிறது, தடைகளாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் தங்கள் இல்ல பூஜை அறையில் குங்குமத்தை ஒரு தாம்பாலத்தில் கொட்டி அதற்கு மேல் தீபம் ஏற்றி வைத்து வழிபட அவர்களுக்கு இருக்கக் கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும், துன்பங்களும், எதிரிகளும் ஒழிந்து போய்விடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: புத பகவானின் அருளைப் பெற தானம்

அன்றாடம் தீபமேற்றி வழிப்படுபவர்கள் முழு நம்பிக்கையுடன் மேற்சொன்ன சிறிய மாற்றத்தை மட்டும் செய்து வழிபட அவர்கள் நினைத்தது அனைத்தும் நிறைந்தேறும் என்பது நிதர்சனமான உண்மை.

- Advertisement -