முருகப்பெருமானின் அருள் பார்வை உங்கள் மீது பட்டு கேட்டதெல்லாம் கிடைத்து ராஜ போக வாழ்க்கை வாழ முருகனின் இந்த மூலம் மந்திரத்தை ஒரு முறை ஜெபித்தாலே போதும்.

- Advertisement -

மனிதனின் தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்வதில் கந்த கடவுளுக்கு நிகரான கடவுள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதனால் தான் இவர் பெரும்பாலோனரின் இஷ்ட தெய்வமாகவே இருக்கிறார். முருகா என்று மனம் உருகி கூப்பிடும் ஒரு குரலுக்கே வந்து நின்று அவர்களின் தேவைகளை உடனே நிறைவேற்றி தரக்கூடிய அரும்பெரும் கடவுளாக திகழ்பவர் இந்த கந்த கடவுள். அப்படியான இவரை ஒரே ஒரு மூல மந்திரத்தின் மூலம் பூஜித்து அவரின் அருள் பார்வையை முழுதாக பெற முடியும் என்றால் அது எத்தனை பெரிய விஷயம். அந்த மந்திரம் குறித்த தகவலை தான் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த முருகர் வழிபாடை செய்வதற்கு இன்னொரு சிறப்பு காரணமும் உண்டு. குரு பார்க்கின் கோடி நன்மை உண்டு என்ற பழமொழியை அறியாதவர் எவரும் இல்லை. ஒருவருடைய ராசியில் குரு பகவானின் அருட்பார்வையானது பட்டு விட்டால் அவர்கள் வாழக்கூடிய ராஜபோக வாழ்க்கையை யாராலும் தடுக்க முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே. அந்த குருவிற்கு குருவாக விளங்கக்கூடியவர் எனில் அது கந்த கடவுள் தான். ஆகையால் தான் குரு ஸ்தலமான திருச்செந்தூரில் கந்தக்கடவுளான முருகர் குருவாகவே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

- Advertisement -

இவருடைய கடைக்கண் பார்வை முழுவதுமாக கிடைத்து உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் தூரப் போக வேண்டும் எனில் வாய்ப்புள்ளவர்கள் நிச்சயம் திருச்செந்தூர் ஆலயம் சென்று முருகப்பெருமானை தரிசித்து அங்கு ஒரு மணி நேரம் அந்த ஆலயத்தில் அமர்ந்து நினைத்து நடக்க வேண்டி அருளை பெற்று கொள்ளலாம். அங்கு எதை வேண்டி செல்கிறோமோ அதை நிச்சயம் தரக்கூடிய தெய்வமாக இவர் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேட்டது கிடைக்க முருகனின் மூல மந்திர வழிபாடு
இந்த வழிபாடை நாம் செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 யிலிருந்து 7 செவ்வாய் ஓரையில் செய்வது மிகவும் சிறப்பு. செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. ஆகையால் அந்த நாளில் அவருடைய இந்த நாமத்தை உச்சரித்து வேண்டுவது அதிக பலன்களை கொடுக்கும். செவ்வாய்க்கிழமை காலையிலே எழுந்து உங்கள் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாட்டிற்கு தயாராகி விடுங்கள்.

- Advertisement -

இந்த நேரத்தில் முருகர் படத்திற்கு செவ்வரளி மாலையை சூட்டி 2 அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு எளிமையான நெய்வேத்தியத்தை படைத்த பிறகு வெற்றிலை, பாக்கு, பூப்பழம், ஊதுபத்தி என பூஜைக்கான சகலத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு முருகரின் திரு உருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து மனதார இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

ஓம் ளெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம்
கீலிம் க்ளெம் ளெளம் நமஹ

என்ற இந்த மூல மந்திரத்தை ஒரே ஒரு முறை மனதார முருகனை நினைத்து உருகி சொல்லிய பிறகு உங்களுடைய எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டுமோ அதையும் நினைத்து நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை ஒரு முறை செய்தவுடன் உங்கள் வேண்டுதலுக்கான வாய்ப்புகள் உங்களுக்கு தெரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் சண்டை வராமல் இருக்க இந்த ஒரு சூடத்தை மட்டும் வாரத்தில் ஒரு நாள், வீட்டில் ஏற்றினால் போதும். சண்டை போடும் கணவர் கூட சமாதான கொடியை வீசுவார்.

இதே வழிப்பாட்டை முருகர் ஆலயத்தில் சென்று செய்தாலும் சிறப்பு அங்கு இதே போல செவ்வரளி மாலையை வாங்கி கொடுத்து முருகருக்கு முன்பாக நெய் விளக்கு தீபம் ஏற்றி வைத்து விட்டு அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபித்து வேண்டினாலும் இன்னும் கூடுதல் பலன்களை பெறலாம். முருகர் அருளை பெறுவதற்கான அருமையான இரண்டு வழிகளை இந்த பதிவில் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் இதை கடைபிடித்து உங்கள் வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றிக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -