நெனச்சது எதுவுமே நடக்கவில்லையா? உங்களை சுற்றி இருக்கும் கெட்ட அதிர்வுகளை நீக்கி நினைத்ததை அடைய செய்யும் அற்புத எளிய பரிகாரங்கள்!

erumbu-hanuman-chappathi-maavu
- Advertisement -

எப்போதுமே நாம் வேண்டிய வரங்கள் வேண்டியபடி நிறைவேறி விட்டால் நமக்கு தெய்வத்தின் மீது பெரிதாக நம்பிக்கை ஏற்பட்டு விடாது. நிறைவேறாமல் தடை, தாமதங்களை எல்லாம் சந்தித்து சிரமப்பட்டு ஒரு விஷயம் நமக்கு கிடைக்கும் பொழுது தான் அதன் மீது நமக்கு மதிப்பு அதிகரிக்கும். கேட்ட உடனே கிடைத்து விட்டால் அதன் அருமை புரியாது என்று கூறுவது இதற்கு தான். வாழ்க்கையில் நீங்கள் நினைத்த எதுவுமே நடக்கவில்லையா? நீங்கள் ஒன்று நினைக்க, அது ஒன்று நடக்கிறதா? அப்படி என்றால் உங்களை சுற்றி கெட்ட அதிர்வுகள் இருக்கின்றன என்பது அர்த்தம். இந்த கெட்ட அதிர்வுகளை விலக்கி நமக்கு கிடைக்க வேண்டிய விஷயங்கள் கிடைக்க செய்யக்கூடிய அற்புத எளிய பரிகாரங்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

sad-crying4

நம்மை சுற்றி எப்பொழுதும் ஏதோ ஒரு கெட்ட விஷயங்கள், அதிர்வலைகள் ஆக இருந்து கொண்டு தான் இருக்கும். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை கூட பயன்படுத்திக் கொண்டு நம் கர்ம வினைப் பயனை அது முடித்து வைத்து விடும். எனவே எப்பொழுதும் நல்ல விஷயங்களை செய்ய வேண்டும், நல்ல விஷயங்களை காதால் கேட்க வேண்டும், நல்ல விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். இப்படி இருப்பவர்களுக்கு அந்த எதிர்மறை ஆற்றல்கள் ஒன்றுமே செய்ய முடியாமல் போய் விடும்.

- Advertisement -

நாம் நினைத்த விஷயங்கள் நடப்பதில் தடை ஏற்படும் பொழுது நம்மை சுற்றியிருக்கும் தோஷங்களுக்கான பரிகாரங்களை நாம் செய்து கொள்ள வேண்டும். முதலில் நம்மை ஆட்கொண்டிருக்கும் பட்சி தோஷம் எனப்படும் தோஷம் நீங்க தினமும் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும். இதற்கு நவதானியங்களை சம அளவில் ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மொட்டைமாடிக்கு அல்லது வெளியிடங்களுக்கு சென்று பறவைகளுக்கு அவற்றை தூவி விடுங்கள்.

el deepam

பிறகு சனி தோஷம் நீங்க சனிக்கிழமைகளில் நவகிரக சன்னிதிக்குச் சென்று சனி பகவானுக்கு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி எள் தீபம் ஏற்றி வாருங்கள். இவையெல்லாம் நம்முடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் இருக்கும் தடைகளை அகற்றும். அதே போல பசுக்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோதுமை மாவை சப்பாத்தி செய்வது போல செய்து அதற்குள் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து தானம் கொடுக்க வேண்டும். யாருக்கு பிரச்சினை இருக்கிறதோ, அவர்கள் கைகளால் இதனை செய்வது சிறப்பு.

- Advertisement -

சனிக் கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வெண்ணை வைத்து வழிபாடு செய்தால் எத்தகைய தடைகளும் அகன்று நீங்கள் நினைத்ததை அடைய கூடிய சக்தி பிறக்கும். எறும்புக்கு பச்சரிசி மாவு தானம் கொடுப்பது தடைகளை அகற்றும் செயலாகும். இதற்காக தான் காலையில் கோலம் போடும் போது பச்சரிசி மாவில் கோலம் போட சொல்லி அறிவுறுத்தப்படுகிறது.

ant-erumbu

அப்படி நீங்கள் செய்யாவிட்டாலும் எறும்பு புற்று இருக்கும் இடத்திக்கு சென்று பச்சரிசி மாவைக் கொண்டு போய் போட்டு வாருங்கள், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். மேற்கூறிய எளிய பரிகாரங்கள் அத்தனையும் நம்மை சுற்றி இருக்கும் சிறு சிறு தோஷ தடைகளை அகற்றி நமக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்களை, நடக்க வேண்டிய நேரத்தில் நடத்திக் கொடுக்கும். இதை செய்தால் தொட்டதெல்லாம் வெற்றியாக, காரிய சித்தி உண்டாக நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை நீங்களே காணலாம்.

- Advertisement -