வாராகி அம்மனை நினைத்து இந்த பொருளை நிலை வாசலில் கட்டி விட்டால் போதும். உங்களைஅழிக்க நினைக்கும் எந்த ஒரு கெட்ட சக்தியும் உங்க கிட்ட கூட நெருங்க முடியாது.

varahi nilavasal
- Advertisement -

தெய்வங்களிலே மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த வாராகி அம்மன் விளங்குகிறார். எப்படி ஒரு தாயானவள் தன் பிள்ளையின் முகத்தை பார்த்து அவர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செய்வார். அத்தகைய குணம் கொண்ட தாயாக இந்த வாராகிஅம்மன் இருக்கிறார். நாம் அவர் முன் மனம் உருகி நின்றாலே போதும் நம்முடைய தேவைகள் அனைத்தையும் உணர்ந்து நிறைவேற்றி தரக் கூடிய சக்தி வாய்ந்த தெய்வம்.

இந்த வாராகி அம்மனை வேண்டி நம்முடைய பணகஷ்டம், துன்பம் காரியத்தடை, தீய சக்திகளின் தாக்குதல், கண் திருஷ்டி என அனைத்தையும் எப்படி சரி செய்து கொள்வது என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

எல்லோருக்குமே வாழ்க்கையில் பல்வேறு தடைகள் உண்டு. ஒரு சிலருக்கு எப்பொழுதும் தடைகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கும். அவர்கள் வாழ்க்கையில் எந்த வித சுப காரியங்களும் நல்ல செயல்களும் நடக்காது. எதைத் தொட்டாலும் அதில் தடங்கலாகவே இருக்கும். இந்த தடைகளில் பல விதங்கள் திருமண தடை, குழந்தை பேறில் தடை, பணத் தடை, வியாபாரத்தில் முடக்கம், வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை என எப்படி சூழ்நிலைகள் இருந்தாலும் இதை செய்யலாம்.

நினைத்தது நடக்க வாராகி வழிபாடு
இதற்கு 23 எலுமிச்சை பழம் அல்லது 21 மஞ்சள் இரண்டில் எதை வேண்டுமானாலும் எடுத்து அதை உங்கள் கையாலே மாலையாக தொடுக்க வேண்டும். இப்படி தொடுக்கும் நேரத்தில் உங்களுடைய எந்த வித பிரச்சனை தீர வேண்டுமோ அதை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மாலையை வாராகி அம்மன் இருக்கும் ஆலயத்தில் கொண்டு சென்று அவருக்கு சாற்றி வழிபட்டு வாருங்கள். உங்களுடைய தடைகள் அனைத்தும் தூள் தூளாக போக இந்த பரிகாரம் நிச்சயம் பலனை தரும்.

- Advertisement -

கெட்ட சக்திகள் நெருங்காதிருக்க
அதே போல் வீட்டில் எப்பொழுதும் பணத் தடை உள்ளது. வீட்டில் கண் திருஷ்டி, கெட்ட சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், வீட்டில் சுப காரியங்கள் எதுவும் நடக்கவில்லை என்பன போன்றவைகள் இருந்தால், வெள்ளிக்கிழமையில் ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை கொண்டு வாராகி அம்மன் பாதத்தில் வைத்து வணங்கிய பிறகு இந்தப் பழத்தை வீட்டுக்கு கொண்டு வந்து விடுங்கள்.

இந்தப் பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கிய பிறகு அதை அப்படியே ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து முடிச்சாக கட்டி உங்கள் வீட்டு நிலை வாசலில் கட்டி விடுங்கள். இதன் பிறகு உங்கள் நிலை வாசலை தாண்டி எந்த ஒரு கெட்ட சக்தியும் உள்ளே வராது. அது போல நீங்கள் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணத்துடனும் உங்களை யாரும் நெருங்க முடியாது. பணத்தடை, காரியத்தடை அனைத்தையும் இந்த முடிச்சு தகர்த்து எறிந்து விடும்.

இதையும் படிக்கலாமே: அன்னபூரணி சிலை வைத்திருப்பவர்கள் அந்த அரிசியை என்ன செய்யணும்னு தெரியுமா? தெரியாமல் கூட இந்த தப்பை பண்ணிராதீங்க வறுமை வரும்!

வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து நல்ல முறையில் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள வாராகி அம்மன் வழிப்பாடும் இந்த எளிய பரிகாரமும் செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. சக்தி வாய்ந்த இந்த வாராகி அம்மனின் வழிபாட்டை நீங்களும் செய்து வாழ்க்கையில் சகல விதமான செல்வத்தையும் பெற்று நலமுடன் வாழுங்கள்.

- Advertisement -