நினைத்தது நடக்க வாராகி அன்னை வழிபாடு.

varahi prayer
- Advertisement -

வாராகி அன்னை வழிபாடு இன்று பலரும் செய்து வருகிறார்கள். சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னையை பற்றி சில காலம் வரையில் அவ்வளவாக ஒன்றும் பேசப்படவில்லை. தற்போது வாராகி அன்னை வழிபாடு பெருமளவு பெருகி இருக்கிறது. இதற்கு காரணம் வாராகி அன்னை தன்னுடைய பக்தர்களுக்காக நிகழ்த்தும் அதிசயங்களும், அற்புதங்களும் தான்.  இந்த அன்னையின் முன் மனம் உருகி ஒரு துளி கண்ணீர் விட்டு எதை வேண்டாலும் அதை நிறைவேற்றி தருவார்.

இந்த நம்பிக்கை அனைவர் மனதிலும் ஆழமாக உள்ளது.  அது உண்மையும் கூட, அதிலும் இந்த அன்னைக்கு பஞ்சமி திதி வழிபாடு மிகவும் விஷேசமாக செய்யப்படுகிறது அந்த நாளில் நாம் வழிபடும் போது அதிகப்படியான பலன்களையும் பெறலாம் அப்படியான அன்னையை இன்னும் எளிமையாக நாம் எப்படி வணங்கி நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

வேண்டுதல் நிறைவேற வாராகி அன்னையை வழிபடும் முறை
வெள்ளிக்கிழமையில் இந்த அன்னையை காலை அல்லது மாலையில் வணங்கலாம். ஆனால் வாராஹி அன்னை பொறுத்த வரையில் மாலையில் வணங்க அதிகப்படியான பலன் உண்டு. ஆகையால் காலையை விட மாலை வழிபாடு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. மாலையில் வழிபட முடியாதவர்கள் காலையில் வணங்கலாம். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் வாராகி அன்னை படம் இருந்தால் ஒரு தீபம் ஏற்றி விடுங்கள்.

படம் இல்லாத பட்சத்தில் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபத்தையே வாராகி அன்னையாக பாவித்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அன்னைக்கு பிடித்த மலரான செவ்வரளி பூவை மாலையாக தொடுத்து போடுங்கள். முடியாதவர்கள் செம்பருத்தி பூவை வையுங்கள். இரண்டுமே கிடைக்காதவர்கள் மல்லிகை பூவை அன்றைய தினம் வைத்து வணங்கலாம்.

- Advertisement -

இத்துடன் அன்னைக்கு வைக்க வேண்டிய முக்கியமான நெய்வேத்தியம் பனைவெல்லம். பலரும் அன்னைக்கு கிழங்கு வகைகள் பழவகைகள் என நெய்வேத்தியமாக படைப்பார்கள். ஆனால் நாம் நினைத்ததை உடனடியாக அன்னை நிறைவேற்ற வேண்டும் எனில் அவருக்கு பனைவெல்லத்தை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். ஒரு சிறிய வாழை இலையில் பனைவெல்லத்தை நெய்வேத்தியமாக வைத்து தீபம் ஏற்றி தீபத்தின் முன் நீங்கள் அமர்ந்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் வாராகி அன்னையின் மூலம் மந்திரம் தெரிந்தவர்கள் அதை பாராயணம் செய்யலாம். அன்னையின் வேறு ஏதேனும் மந்திரம் தெரிந்தால் அதையும் படிக்கலாம். எந்த மந்திரமும் தெரியாது என்பவர்கள் ஓம் வாராகி தாயே போற்றி என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த முறையில் வெள்ளிக்கிழமைகளில் வேண்டுதல் வைக்கும் போது நிச்சயம் அதை உடனே நிறைவேற்றி தருவார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி போக பரிகாரம்

கேட்டவருக்கு கேட்ட வரத்தை அருளக் கூடிய வாராகி அன்னைக்கு இது போல நெய்வேத்தியம் வைத்து வணங்கி பாருங்கள். உங்கள் வேண்டுதல் அனைத்தும் நீங்கள் நினைத்த நேரத்தை விட சீக்கிரத்தில் முடித்து வைக்கும் அதிசயத்தை உங்கள் வாழ்க்கையிலும் நிகழ்த்துவார். இந்த பதிவில் உள்ள தகவலில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -