கண் திருஷ்டி போக பரிகாரம்

kan drishti
- Advertisement -

ஒருவருடைய வளர்ச்சியை பார்த்து இப்படி வளர்ந்து விட்டாரா என்று நினைத்தாலே அவர்களுடைய வளர்ச்சி தடைப்பட்டுவிடும் என்பது அனுபவபூர்வமாக பலரும் கண்ட உண்மை. புதிதாக ஆடை அணிந்து வெளியில் செல்லும் பொழுது ஆடை நன்றாக இருக்கிறது என்று பலரும் சொல்வார்கள் அதிலும் குறிப்பாக சிலர் சொல்லும் பொழுது உடனேயே அந்த ஆடையில் ஏதாவது ஒரு கறை பட்டு விடும். இதைத்தான் நாம் கண் திருஷ்டி என்று கூறுகிறோம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அப்படிப்பட்ட கண் திருஷ்டிகளை நீக்க செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு நம்முடைய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தடுத்து நிறுத்தி பிரச்சனைகளை அதிகரிக்க கூடிய ஆற்றல் கண் திருஷ்டிக்கு இருக்கிறது. இந்த கண் திருஷ்டியை நாம் நல்ல கண் திருஷ்டி கெட்ட கண் திருஷ்டி என்று கூறுவோம்.

- Advertisement -

நம்முடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுவது மட்டும் கண் திருஷ்டி கிடையாது. நம்முடைய வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்படுவதாலும் கண் திருஷ்டி ஏற்படும். அப்படி சந்தோஷப்படுவதால் ஏற்படக்கூடிய கண் திருஷ்டியை நல்ல கண் திருஷ்டி என்றும், பொறாமைப்படுபவர்களால் ஏற்படும் திருஷ்டியை கெட்ட கண் திருஷ்டி என்றும் கூறுவோம்.

இந்த கண் திருஷ்டி பரிகாரத்தை நாம் செவ்வாய்க்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தான் செய்ய வேண்டும். அதுவும் மாலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். இதற்கு நாம் ஆறு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றன் மேல் ஒன்றாக ஆறு பேப்பரை வைத்து அதன் நடுவில் ஒரு கைப்பிடி அளவு உப்பு, 3 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் மிளகு இவற்றை வைக்க வேண்டும்.

- Advertisement -

காய்ந்த மிளகாய் நாம் தேர்வு செய்யும் பொழுது காம்புடன் உடையாமல் இருக்கக்கூடிய மிளகாயை தான் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கண் திருஷ்டி முழுமையாக நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு இதனுடன் ஏழு கற்பூரத்தையும் வைத்து இதை நன்றாக சுருட்டி கையில் வைத்துக் கொண்டு திருஷ்டி சுத்த வேண்டும். இவ்வாறு திருஷ்டி சுத்தும் நபர் வீட்டில் இருக்கும் பெண்களாக இருக்க வேண்டும். அதிலும் வயது முதிர்ந்த பெண்களாக இருப்பது மிகவும் சிறப்பானது.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் அண்ணனுக்கு தங்கையும், தந்தைக்கு மகளும் சுற்றி போடக்கூடாது. இப்பொழுது இந்த பொட்டணத்தை கையில் எடுத்துக் கொண்டு வீட்டில் இருக்கும் நபர்களை கிழக்கு பார்த்தவாறு நிற்க வைத்து அவர்களின் தலையை வலதிலிருந்து இடமாக மூன்று முறையும் இடத்திலிருந்து வலமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு அவர்களுடைய தலையில் இந்த பொட்டணத்தை வைத்து அப்படியே தலையில் இருந்து பாதம் வரை கொண்டு வந்து பாதத்தில் வைக்க வேண்டும். மறுபடியும் பாதத்திலிருந்து எடுத்து வந்து தலைக்கு கொண்டு வர வேண்டும். இப்படி மூன்று முறை செய்துவிட்டு அவர்களை மூன்று முறை அந்த பொட்டணத்தில் துப்ப சொல்லி வீட்டு வாசலுக்கு கொண்டு போய் அதை எரித்து விட வேண்டும். எரித்துவிட்டு திரும்ப வீட்டிற்குள் வரும் பொழுது முகம், கை, கால்களை கழுவி விட்டு பிறகுதான் வீட்டிற்குள் வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணம் பெருக மண் பரிகாரம்

இந்த முறையில் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு சுற்றி போடுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் விலகி வீடு மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் திகழும்.

- Advertisement -