நினைத்தது நிறைவேற ஆஞ்சநேயருக்கு ஒரு ரூபாயை வைத்து வழிபட்டு செய்து பாருங்கள்

hanuman valipadu
- Advertisement -

என்றும் சிரஞ்சீவியாக வாழும் வரத்தை பெற்றவர் ஆஞ்சநேயர். இன்றளவும் அருவமாக உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்று ஆன்மீகவாதிகள் நம்புகிறார்கள். சிறந்த பக்தன் என்று கூறினால் அது ஆஞ்சநேயருக்கு பொருந்தும். ராமபிரானின் மீது கொண்ட தீராத அன்பினால் அவருடைய தொண்டராகவே, அவருக்காகவே வாழ்ந்தவர் தான் ஆஞ்சநேயர். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதில் நாம் பார்க்க போகிறோம்.

ஆஞ்சநேயருக்கு ராமபிரானை பிடிக்கும் என்பதால் அவர் சதா சர்வ காலமும் ராமா ராமா என்று உச்சரித்த வண்ணம் இருப்பார். ஆதலால் யார் ஒருவர் வாயிலிருந்து ராமா என்ற நாமம் வருகிறதோ அவரை ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடிக்கும். ராமா என்று கூறி நம்முடைய பிரச்சனைகளை நாம் கூறும்பொழுது அந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்க அனுமன் ஓடோடி வந்து விடுவார்.

- Advertisement -

இன்று நாம் பார்க்கப் போகும் வழிபாடு நம் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான வழிபாடு ஆகும். இந்த வழிபாட்டை நாம் ஆரம்பிக்கும் நாள் சனிக்கிழமையாக இருக்க வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து 11 நாட்கள் செய்ய வேண்டும். நடுவில் எந்தவித தடைகளும் தடங்கல்களும் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் 11 நாட்களும் அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விட்டு மனத்தூய்மையுடனும், உடல் தூய்மையுடனும் வழிபட வேண்டும்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரு வெற்றிலையும், ஒரு ஒரு ரூபாய் நாணயமும், செந்தூரமும் தேவைப்படும். சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் இருக்கும் ஆஞ்சநேயரின் புகைப்படத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு ஆஞ்சநேயருக்கு அகலில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும் ஆஞ்சநேயரின் புகைப்படம் இல்லாதவர்கள் நெய் தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தையே ஆஞ்சநேயராக பாவித்து வழிபடலாம்.

- Advertisement -

நம்முடைய நியாயமான வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு வெற்றிலையை எடுக்க வேண்டும். அந்த வெற்றிலையில் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். அந்த வெற்றிலையின் நடுவில் செந்தூரத்தை தடவ வேண்டும். பிறகு அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். பிறகு அந்த வெற்றிலையை நான்காக மடித்து ஒரு வெள்ளை நிற நூலால் அந்த வெற்றிலையை கட்டி ஆஞ்சநேயரின் பாதத்தின் கீழ் வைக்க வேண்டும். அவருக்கு நெய்வேத்தியமாக கொய்யா பழத்தை வைக்கலாம்.

பிறகு ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான ஸ்ரீ ராம ஜெயம் என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு தினமும் புதிதாக வெற்றிலையை வாங்கி செந்தூரம் தடவி ஒரு ரூபாய் வைத்து நான்காக மடித்து வெள்ளை நிற நூலால் கட்டி ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்துக் கொண்டே வர வேண்டும். 11 நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்ய வேண்டும். 12வது நாள் நாம் கட்டி வைத்திருக்கும் வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு ரூபாய் நாணயத்தையும் வெற்றிலையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு வெற்றிலைகளை கால் படாத ஏதாவது ஒரு இடத்தில் போட்டு விட வேண்டும். முடிந்த அளவு வீட்டில் வளர்க்கக்கூடிய பூந்தொட்டிகளில் அதை போட்டு விடலாம். இந்த ஒரு ரூபாய் நாணயத்தை அருகில் இருக்கும் ஆஞ்சநேயரின் ஆலயத்திற்கு சென்று உண்டியலில் போட வேண்டும். ஆஞ்சநேயரின் ஆலயம் அருகில் இல்லாத பட்சத்தில் ஏதாவது ஒரு பெருமாள் கோவில் உண்டியலில் இந்த நாணயங்களை சேர்த்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த எண்ணையில் தீபம் ஏற்றினாலே நம் வாழ்க்கையில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகள் தீரும்.

இவ்வாறு நாம் வழிபாடு செய்து 11 நாட்கள் தொடர்ந்து வழிபாடு செய்து முடிப்பதற்குள்ளாகவே நாம் வேண்டிய வேண்டுதலுக்குரிய செயல்கள் நடைபெற ஆரம்பித்து விடும் என்பது உறுதி. நம்பிக்கையுடன் ஆஞ்சநேயரை வழிபட்டு நம்முடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வோம்.

- Advertisement -