21 நாட்களில் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும். அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை செய்யுங்கள்.

sivan
- Advertisement -

நிறைய பேருக்கு சிவன் வழிபாடு செய்வதில் ஒரு மனபயம் இருக்கும். சிவன் வழிபாடு செய்தால் வாழ்வில் நிறைய கஷ்டங்கள் வரும். அந்த எம்பெருமான் நமக்கு நிறைய துன்பங்களை கொடுப்பான். நம்மிடம் இருப்பதை எல்லாம் இழக்க வைப்பான். பணம் காசு இல்லாமல் கஷ்டப்படுவோம் என்று பயம் கொண்டு சிவன் வழிபாடு செய்யவே மாட்டார்கள். ஆனால் சிவன் வழிபாடு செய்யும் போது நமக்கு கஷ்டங்கள் வரும் என்பது உண்மைதான். கஷ்டங்களைக் கொடுத்து கொடுத்து அந்த எம்பெருமான் நம்மைப் சோதித்து பக்குவப்படுத்திக் நமக்கான கர்மவினைகளை அழிக்கின்றான் என்பதுதான் அர்த்தம். நம்மிடம் இருப்பதை எல்லாம் இழக்க வைப்பான். ஆம், ஆணவம், கர்வம், தலை கனம், அகந்தை இவைகளை எல்லாம் நிச்சயம் இழக்க வைப்பான்.

நம்முடைய கர்ம வினைகள் எல்லாம் இந்த பிறவியில் நம்மை விட்டு கடிந்து போய் விடும். அதன் பின்பு இறுதியாக அந்த எம்பெருமானின் பாதங்களில் சரண் அடைந்து முக்தி அடைய வேண்டும் என்றால் சிவன் வழிபாடு ஒன்றே சிறந்த வழி. சிவ வழிபாட்டை தொடர்ந்து 21 நாட்கள் இப்படி செய்து பாருங்கள். நிச்சயமாக எவ்வளவு பெரிய கஷ்டத்திற்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கு தினம்தோறும் செல்ல வேண்டும். நெற்றியில் நீறு பூசிக் கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு, அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு கோவிலை வலம் வரவேண்டும். அதன்பின்பு அந்த சிவன் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து சிவபுராணத்தை மனதார படியுங்கள். வாய்விட்டு சத்தமாக படித்தாலும் தவறு கிடையாது. ஆரம்பத்தில் சிவபுராணத்தை படிக்கும்போது சின்னச் சின்னப் பிழைகள் வரும். பரவாயில்லை போகப் போக சரியாகிவிடும். புத்தகத்தை பார்த்து படிக்கலாம். அப்படி இல்லை என்றால் இப்போது தொழில்நுட்ப வசதியின் காரணமாக கைபேசியில் இணையதளத்தில் சிவபுராணத்தை வர வைத்து படிக்கலாம். சிவ புராணத்தைப் படித்து முடித்துவிட்டு உங்களுடைய கஷ்டங்களை எம்பெருமானின் பாதங்களில் இறக்கி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்து விடுங்கள்.

கோவிலுக்கு செல்லும் போது உங்களால் முடிந்த வாழைப்பழமோ, கற்பூரம், ஊதுவத்தி, ஏதாவது ஒன்றை எம்பெருமானுக்கு வாங்கிக்கொண்டு செல்லுங்கள். நம்மைப் பார்க்க வரும் பக்தன், நமக்காக ஆசையாக என்ன பொருள் கொண்டு வருவான் என்று ஏக்கத்தோடு ஆசையோடு சிவபெருமான் எதிர்பார்த்து காத்திருப்பாராம். உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த பிரச்சினையாக இருக்கட்டும் அதை சரியாக வேண்டுமென்று 21 நாட்கள் தொடர்ந்து மேல் சொன்னபடி சிவ வழிபாட்டை செய்து பாருங்கள். உங்கள் வாழ்வில் நிச்சயம் நீங்கள் நம்ப முடியாது ஒரு அதிசயம் நடக்கும்.

- Advertisement -

தினமும் என்னால் கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள் காலையிலோ அல்லது மாலையிலோ பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு அப்பனை மனதார நினைத்து கொண்டு சிவ புராணத்தை வாசிக்க வேண்டும். அதன் பின்பு உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் வைக்க வேண்டும் ஏதாவது ஒரு கோரிக்கையாக இருக்கட்டும். 21 நாட்களும் தொடர்ந்து அந்த கோரிக்கை நிறைவேற சிவபுராணத்தை படித்துதான் பாருங்களேன்.

பிறகு உங்களுடைய அனுபவம் என்ன என்பதை நீங்களே உணர்வீர்கள். இனம்புரியாத சந்தோஷமா, இனம்புரியாத பேரானந்தமா, என்னவென்றே நம்மால் சொல்ல முடியாது. ஆனால் 21 கஷ்டப்பட்டு இந்த பழக்கத்தை கொண்டு வந்துவிட்டால், அடுத்த நாள் உங்களால் இந்த சிவபுராணத்தை படிக்காமல் இருக்கவே முடியாது. நம் வாழ்வில் அனுபவிப்பவித்து கொண்டிருப்பது எல்லாமே சிற்றின்பம். பேரின்பம் என்பது இறைவனின் பாதங்களை சரண் அடைவதில் தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள இந்த வழிபாடு உங்களுக்கு நல்வழி காட்டி கொடுக்கும்.

- Advertisement -