உங்கள் துன்பங்கள்,கடன் என அனைத்தும் நீங்கி, செல்வ வளத்துடன் வாழ வழி செய்ய இந்த விரலி மஞ்சள் போதும். பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் எளிய பரிகாரம்

- Advertisement -

மனிதன் வாழ்க்கையில் சந்திக்க கூடிய பிரச்சனைகள் ஏராளம் கடன் பிரச்சனை, திருமணம் நடக்காமல் போவது , குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, குடும்ப சச்சரவு, தொழில் நஷ்டம் எப்படி பிரச்சினைகளுக்கு எல்லையே இல்லாமல் நீண்டு செல்லும். இந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ மிக எளிமையான முறையில் அனைவரும் செய்யக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த பரிகாரம் செய்ய நமக்கு ஒரே ஒரு பொருள் மட்டும் தான் தேவை அது விரலி மஞ்சள் வேறு மஞ்சள் எதையும் பயன்படுத்தக் கூடாது. இந்த விரலி மஞ்சளை வைத்து தொடங்கும் இந்த பரிகாரத்தை வெள்ளி, செவ்வாய், சஷ்டி, பிரதோஷம் இப்படி வழிபாட்டிற்குரிய நாட்களிலும், சுப நாட்களிலும் தொடங்கினால் மிகவும் விசேஷம். இது உங்களின் வசதிக்கேற்ப எந்த நாளில் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்ய வீட்டில் மகாலட்சுமி தாயார் படத்தை ஒரு சிகப்பு துணியின் மீது வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து முடித்ததும் பூஜையறைக்கு சென்று உங்களின் காலை பூஜையை முடித்தவுடன், மகாலட்சுமி தாயாரின் முன்பு ஒரே ஒரு விரலி மஞ்சள் எடுத்து வைத்து நீங்கள் எந்த வேண்டுதலுக்காக வைக்கிறீர்களோ (ஒரே ஒரு வேண்டுதல் மட்டும்) அது நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு வந்து மஞ்சள் அந்த சிகப்பு துணியின் மீது வைக்க வேண்டும். இது போல 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். 48 நாட்களும் வைக்கும் இந்த விரலி மஞ்சள் பூஜை அறையில் அப்படியே இருக்க வேண்டும். பெண்கள் இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் விசேஷம்.

பெண்கள் இந்த பூஜையை செய்யும் போது அவர்களுக்கான அந்த மாத இடையூறு காலங்கள் இதில் கணக்கீடு கிடையாது. 48 வது நாள் பரிகாரத்தை நிறைவு செய்யும் அன்று மகாலட்சுமி தாயார்க்கு வெத்தலை, பாக்கு, பூ, பழம் நெய்வேத்தியம் எல்லாம் செய்து படைத்து வணங்க வேண்டும்.

- Advertisement -

நாற்பத்தி ஒன்பதாவது நாள் இந்த 48 விரலி மஞ்சள்களை ஒன்றாக மாலையாக கட்டி அருகில் இருக்கும் லட்சுமி தாயர் சன்னதியில் சேர்க்க வேண்டும் வேறு எங்கும் இந்த மஞ்சள் மாலையை சாற்ற கூடாது . மகாலட்சுமி தாயாருக்கு தான் சாற்ற வேண்டும் அவர்கள் எந்த அவதாரத்தில் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் மகாலட்சுமி தாயார்க்கு இந்த விரலி மஞ்சள் மாலை ஆனது சேர வேண்டும். விரலி மஞ்சள் சாற்றும் நாளன்று குங்குமம் வாங்கி கொடுத்து மகாலட்சுமி தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை வீட்டிற்கு வாங்கி வந்து தினமும் பயன்படுத்தி வாருங்கள்.

இந்த விரலி மஞ்சள் பரிகாரத்தை 48 நாட்கள் செய்து முடித்து 49 வது நாள் நீங்கள் இந்த பூஜையை முடிக்கும் போது எந்த காரியத்திற்காக இதை தொடங்கினீர்களோ கட்டாயமாக அந்த காரியம் முடிந்து சந்தோஷமான மனநிலையில் தான் இந்த பூஜையை முடிப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே: காலையில் எழுந்ததும் இந்த ஒரு விஷயத்தை முதன் முதலில் நீங்கள் பார்த்தால் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா? எழுந்ததும் பார்க்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் என்னென்ன?

இந்த எளிய பரிகாரத்தின் மூலம் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -