மகா கந்த சஷ்டி கவச தினத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

murugan om
- Advertisement -

உலகெங்கிலும் மக்கள் இப்போது கந்த சஷ்டி விரதம் இருந்து கந்த பெருமானை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சஷ்டியின் முக்கிய நாளான சூரசம்ஹார தினத்தில் கந்தனை நினைத்து சஷ்டி வேளையில் நாம் சொல்லும் இந்த ஒரு மந்திரமானது நம்முடைய வாழ்வில் உள்ள சகல துன்பத்தையும் நீக்கும். அது மட்டுமில்லாமல் கேட்ட வரத்தை உடனே தரக் கூடிய அற்புத சக்தி கொண்டது. அந்த வகையில் மகா கந்த சஷ்டி நாளான இன்று கந்தனை பற்றி சொல்லக் கூடிய அந்த மந்திர வழிபாட்டை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மந்திரங்களை பொறுத்த வரையில் சாதாரணமான நாட்களில் சொல்லுவதை காட்டிலும் விசேஷமான நாட்களிலும் அந்த மந்திரத்திற்கான நாட்களிலும் சொல்லும் போது பல மடங்கு பலனை பெறலாம். அந்த வகையில் கந்தனை போற்றி சொல்லப்படும் இந்த மந்திரத்தை மகா கந்த சஷ்டி நாளில் இன்று சூரசம்ஹார நாளில் சொல்லும் போது இதற்கு பல மடங்கு பலம் அதிகரிக்கும். இந்த மந்திரத்தை இன்று சஷ்டி திதி ஆரம்பிக்கும் நேரத்தில் சொல்ல வேண்டும்.

- Advertisement -

இந்த சஷ்டி திதியானது இன்று 18.11. 2023 அன்று காலை 10 :14 முதல் நாளை 19 .11 . 2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 : 04 வரை இருக்கிறது. இதில் மாலை 4 முதல் இரவு 8 மணிக்குள் இந்த மந்திரத்தை சொல்வது சிறந்தது. இந்த நேரத்தில் சொல்ல முடியாதவர்கள் காலை 10:30 மணிக்கு மேல் 12 மணிக்குள்ளாக சொல்லலாம். அல்லது 19 .11. 23 அன்று காலை 6 மணிக்குள் இந்த மந்திரத்தை சொல்லி அதற்குரிய முழு பலனையும் பெறலாம்.

இந்த மந்திரத்தை நாம் பூஜை அறையில் தான் சொல்ல வேண்டும் என்று கிடையாது. அவரவர் இருக்கும் இடத்திலிருந்து சொல்லலாம். மந்திரத்தை சொல்லும் போது தரையில் அமர்ந்து சொல்லுவது மிகவும் நல்லது. அப்படி அமர்ந்து சொல்லும் போது தரையில் ஏதேனும் ஒரு விரிப்பை பயன்படுத்தி அமர்ந்து அதன் பிறகு சொல்ல ஆரம்பியுங்கள். உடல் நலம் இல்லாதவர்கள் உங்களுடைய வசதிக்கேற்ப இந்த மந்திர வழிபாட்டை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மந்திரத்தை சொல்லும் நாளன்று தலை ஸ்தானம் செய்வது நல்லது. இதிலும் உடல் நலம் இல்லாதவர்கள் இதை தவிர்த்து விடுங்கள். இந்த மந்திர வழிபாட்டை செய்யும் நாள் அன்று அசைவத்தை நிச்சயம் தவிர்க்க வேண்டும். மந்திரத்தை தெற்கு திசையை தவிர நீங்கள் வேறு எந்த திசையை நோக்கி வேண்டுமானால் அமர்ந்து சொல்லலாம். இப்போது இந்த மந்திரத்தை பார்க்கலாம்.

ஓம் ஐம் க்லீம் செளம்
சரவண பவாய
குமார தேவாய நமக

என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மந்திரத்தை சரியாக சொல்ல ஜெபமாலை, கற்கண்டு போன்றவற்றை பயன்படுத்தி சொல்லுங்கள். சஷ்டி விரதம் இருப்பவர்களும் இந்த மந்திரத்தை சொல்லலாம். விரதம் இருந்து வழிபட முடியாதவர்களும் இந்த மந்திரத்தை சொல்லி அதற்குரிய முழு பலனையும் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: சாபம், தோஷம், மன பயம் நீங்க வாராகி மந்திரம்

இந்த மந்திர வழிபாட்டை செய்தால் கேட்ட வரம் உடனே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. கேட்டவருக்கு கேட்ட வரத்தை கொடுக்கக் கூடிய தெய்வம் எனில் அது கந்தன் தான். அதிலும் அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி கேட்கும் போது உடனே அருள் புரிவார். நம்பிக்கையுடன் நீங்களும் கந்தனை நினைத்து அற்புதமான இந்த மந்திர வழிபாட்டை செய்து பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -