சாபம், தோஷம், மன பயம் நீங்க வாராகி மந்திரம்

varahi-manthiram
- Advertisement -

வாராகி வழிபாடு இப்போது பெரும்பாலான இடங்களில் அனைவராலும் செய்யப்படுகிறது. இந்த வாராகி அன்னையானாவள் துர்க்கை அம்மனின் படைத்தலைவியாக போற்றப்படுகிறார். அப்படியான இந்த அன்னை தோல்வி என்பதே அறியாமல் வெற்றிக்கு மேல் வெற்றியை தருபவர். இவர் தைரியத்திற்கு முன்னுதாரணமாக விளங்குபவர் அப்படியான இந்த அன்னையை நாம் வணங்குவதன் மூலம் நம்முடைய அனைத்து சாபம் தோஷம் விளங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது குறித்த தகவல்களை மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பயம் நீங்க வாராகி மந்திரம்

ஒரு காரியத்தில் வெற்றியை மட்டுமே பெற வேண்டும் எனில் முதலில் அதற்கான மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலர் எதற்கு எடுத்தாலும் சோர்வுடன் இருப்பார்கள். எதை செய்யவும் பயப்படுவார்கள் அவர்களால் துணிந்து எந்த செயலையும் செய்ய முடியாது. அப்படியானவர்கள் இந்த வாராகி அன்னையை வழிபட்டால் போதும் பயம் நீங்கி தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இது மட்டும் இன்றி பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் போன்ற சகல தோஷங்களையும் நீக்கக் கூடிய வல்லமை கொண்ட அன்னையாக வாராகி இருக்கிறார். வாராகி அன்னை பார்க்க பன்றி தலையுடனும் மனித உடலுடன் காட்சி தந்தாலும் உண்மையில், குழந்தை மனம் கொண்ட அற்புதமான தெய்வமாக திகழ்கிறார். இந்த அன்னைக்கு பஞ்சமி திதி மிகவும் விசேஷமானது. இந்த நாளில் இவரை வணங்கும்போது நாம் கூடுதல் நன்மைகளை பெற முடியும்.

பஞ்சமி திதியில் இவருக்கு பிடித்த மாதுளை முத்துக்கள், கிழங்கு வகைகள், செவ்வரளி பூக்கள் போன்றவற்றை படைத்து இவரை மனதார நினைத்து நாம் வணங்கி கேட்கும் எந்த ஒரு காரியமும் தடை இன்றி நடப்பதற்கான அருளை தருவார். இந்த அன்னையை சரணடைந்தவர் வாழ்க்கையில் தோல்வி என்பதே இல்லை. வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்தினையும் தரக் கூடிய செளபாக்கியவதியாகவும் இந்த அன்னை திகழ்கிறார். இப்படியான இந்த அன்னையின் இந்த மந்திரத்தை தினமும் உச்சரிப்பதால் நாம் எண்ணற்ற பலன்களை பெற முடியும்.

- Advertisement -

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

வாராகி அன்னையின் இந்த மந்திரத்தை தினமும் 24 முறை சொல்ல வேண்டும். இதை சொல்ல சொல்ல உங்களுடைய வாழ்க்கை நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மாறும் அதிசயம் நடக்கும். மன பயம், மரண பயம் போன்ற அனைத்து விதமான பயங்களும் நீங்கும் எதிரி தொல்லை நீங்கும். வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி தீய சக்திகள் நம்மை விட்டு விலகும். நம்முடைய சிந்தனைகள் நேர்மறை ஆகும்.

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகளை தீர்க்கும் நவகிரக பரிகாரம்

இவையெல்லாம் சரிவர மாறும் போது நம்முடைய செயல்களும் நன்றாக இருக்கும். இதன் மூலம் நாம் நன்றாக வாழ்க்கையில் முன்னேற முடியும். முன்னேற்றம் என்றால் அதில் செல்வம் நிச்சயம் அடங்கும். அதுமட்டுமின்றி நோய் நொடி இன்றி செல்வ வளத்துடன் நல்ல முறையில் வாழ வாராகி அன்னையின் இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இத்தகைங பலனை நீங்களும் பெற வேண்டும் எனில் இந்த மந்திரத்தை படித்து சொல்லலாம்.

- Advertisement -