இந்த முடிச்சை ஒரே ஒருமுறை உங்கள் கையால் கட்டி வையுங்கள். நிறைவேறாத ஆசை கூட கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்.

cash
- Advertisement -

மனிதர்களாக இருந்தால் மனதிற்குள் நிறைய ஆசைகள் இருக்கும். நமக்கு இருக்கக்கூடிய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியுமா? என்றால் அது கேள்விக்குறியான ஒரு விஷயம்தான். ஆசைகளுக்கு நிறைவு என்பது நிச்சயம் இருக்காது. ஒரு ஆசை நிறைவேறிய பின்பு, மற்றொரு ஆசை தலைதூக்க தொடங்கும். இதில் நம்முடைய தகுதிக்கு தகுந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தாந்திரீக ரீதியாக ஒரு பரிகாரம் உள்ளது. நியாயமான ஆசைகளை ஒரே ஒரு வரியில் எழுதி, இந்த முடிச்சில் வைத்தால், அந்த ஆசை கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும் என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது. நாமும் இந்த பரிகாரத்தை ஒருமுறை முயற்சி செய்து தான் பார்ப்போமே

ஒரு சிறிய மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பட்டை 2 துண்டு, ஏலக்காய் 2, முழு கொட்டை பாக்கு 2, கிராம்பு 2, கல் உப்பு – 1 ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் போட்டு ஒரு முடிச்சாக கட்டிக்கொள்ள வேண்டும். இந்த முடிச்சை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து விடுங்கள். ஒரு மஞ்சள் காகிதத்தில், பேனாவில் உங்களுடைய நிறைவேறாத ஆசையை ஒரே ஒரு வரியில் எழுதி விடுங்கள்.

- Advertisement -

உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். குறிப்பிட்ட இந்த காலேஜில் இடம் கிடைக்கவேண்டும். குறிப்பிட்ட இந்த படிப்புக்கான இடம் கிடைக்க வேண்டும். கலெக்டர் ஆக வேண்டும். டாக்டராக வேண்டும் என்ற எந்த கனவு உங்கள் மனதில் இருந்தாலும் அந்த காகிதத்தில் ஒரே ஒரு வரியில் எழுதி விடலாம். ஒரு ஆசையை மட்டும் எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

சில பேருக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொத்து சுகம் வாங்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். உங்களுடைய மகனுக்கோ மகளுக்கோ நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று கூட அடுத்தவர்களுக்காக இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் கணவர் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று எழுதிக் கொள்ளலாம். கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றாலும் அதை ஒரே வரியில் அந்த பேப்பரில் எழுதி அந்த பேப்பரை மடித்து நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் டப்பாவில் போட்டு அந்த டப்பாவை மூடி வைத்துவிடுங்கள்.

- Advertisement -

இந்த டப்பாவை பூஜை அறையில் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வேறு ஏதாவது இடத்தில் அலமாரியில் ஒரு ஓரமாக வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. உங்களுடைய வீட்டில் நீங்கள் வேலை இல்லாமல் சும்மா இருக்கும் நேரத்தில், அந்த டப்பாவை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, நீங்கள் அந்த டப்பாவில் பேப்பரில் என்ன ஆசையை எழுதி வைத்தீர்களோ, அந்த ஆசையானது நிறைவேற வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் சொல்ல வேண்டும். எந்த நேரத்திலும், எத்தனை முறை வேண்டுமென்றாலும் இப்படி தயார் செய்த டப்பாவை கையில் வைத்துக் கொண்டு உங்களுடைய பிரார்த்தனையை வைக்கலாம்.

ஒரு சில நாட்கள் வேலை அதிகமாக உள்ளது. அந்த டப்பாவை கையில் எடுக்கவே முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அதனால் எந்த பிரச்சனையும் வராது. இதே மாதிரி தொடர்ந்து உங்களுடைய நிறைவேறாத ஆசையை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லும்போது உங்களுடைய ஆசை கூடிய சீக்கிரத்திலேயே நிச்சயம் நிறைவேறும். (உள்ளே இருக்கும் பொருட்களை மாற்ற வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. அந்த பொருள் எதுவும் கெட்டுப் போவது இல்லை.) நம்பிக்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான் இது. நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

- Advertisement -