கலரா இல்லைன்னு வருத்தப்படாதீங்க! நம்ம முகமா இது? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நீங்களும் வெள்ளையாக மாற 3 நாள் இதை செய்தால் போதுமே!

skin-face-pack
- Advertisement -

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றெல்லாம் பழமொழி கூறலாம். ஆனால் முகத்தை வைத்தே இங்கு பலரின் குணங்களும் எடை போடப்படுகின்றன. நம்முடைய முகம் எப்பொழுதும் நல்ல பளிச்சென்ற ஒரிஜினல் நிறத்தில் இருக்க, இந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து வந்தால் ஆச்சரியப்படும்படி மாற்றம் ஏற்படும். ரொம்பவும் எளிதாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நம்முடைய முகத்தை பளிச்சென்று வெள்ளை ஆக மாற்றுவது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம்முடைய தோலின் நிறத்தை பொறுத்தே சில விஷயங்கள் நமக்கு கிடைக்கப்படுகின்றன. இதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். தோலின் நிறம் நம்முடைய குணத்தை முடிவு செய்வது கிடையாது ஆனாலும் நாம் எப்படி இருக்கிறோம்? என்பதை பொறுத்தே நமக்கு கிடைக்க வேண்டியவையும் சில சமயங்களில் தீர்மானிக்கப்படுகின்றன. இத்தகைய முகத்தை எப்பொழுதும் அழகான தோற்றத்துடன் மட்டும் அல்லாமல், நம்முடைய இழந்த சுய நிறத்தை அடைய என்ன செய்யலாம்?

- Advertisement -

சிலர் இயற்கையாகவே கறுத்த தேகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கறுத்த தேகம் கொண்டவர்களாக இருந்தாலும் முகத்தை எப்பொழுதும் இது போல செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக சருமத்திற்கு நிறமூட்டும் மெலனின் என்னும் மூலக்கூறு வேலை செய்து நம்முடைய நிறத்தை அதிகரிக்க செய்யும். அந்த அளவிற்கு ரொம்பவும் எஃப்பெக்டிவ் ஆன இந்த ஒரு முகப்பூச்சு எளிதாக செய்யப் போகிறோம்.

முதலில் ஒரு சிறு பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சைச்சாறு ஒரு ஸ்பூன் விதைகள் இல்லாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் பால் காய்ச்சும் பொழுது மேலே ஆடை கட்டும் அல்லவா? அந்த பால் ஆடையை எடுத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் அளவிற்கு வெள்ளை சர்க்கரை ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பேஸ்ட் போல ஸ்பூனால் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை அப்படியே ஒரு ஓரமாக வைத்துவிட்டு நீங்கள் உங்களுடைய முகத்தை சோப் எதுவும் போடாமல் வெதுவெதுப்பான தண்ணீரால் சூடு பொறுக்கும் அளவிற்கு நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் கலந்து வைத்துள்ள இந்த முகப்பூச்சு முகம் முழுவதும் உங்களுக்கு எங்கெல்லாம் நல்ல நிறத்துடன் இருக்க வேண்டுமோ, அங்கே எல்லாம் தடவிக் கொள்ளுங்கள். கழுத்து, கை, கால் பகுதிகளிலும் நீங்கள் தடவிக் கொள்ளலாம். நன்கு திக்கான கோட்டிங்காக தடவிக் கொள்ளுங்கள். இதை அப்படியே மூன்று மணி நேரம் ஊற விட்டு விடுங்கள்.

மூன்று மணி நேரம் கழித்து நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை நன்கு சுத்தம் செய்து விட வேண்டும். இப்பொழுதும் சோப்பு எதுவும் பயன்படுத்தக் கூடாது. இது இதனுடைய ஆற்றலை குறைத்து விடும். இது போல வாரம் மூன்று நாட்கள் நீங்கள் செய்து வர நம்முடைய முகமா இது? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல ஒரு நிறத்தை சில மாதங்களிலேயே அதிகரித்து காட்டி இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் ஆச்சரியம் காத்திருக்கும்.

- Advertisement -