நிரந்தரமா நீங்கள் பணக்காரராக மாற வேண்டுமா? ஒரே 1 ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும்.

budhan
- Advertisement -

நிரந்தரமாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. உண்மையாக கஷ்டப்பட்டு நேர்மையான வழியில் சென்று கடின உழைப்பை முதலீடாக போட்டால் நிச்சயமாக எல்லோராலும் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் பணக்காரராக முடியும். நீங்களும் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு, கடின உழைப்போடு தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் பணம் விரும்பி உங்கள் கையில் வரும். கடின உழைப்போடு சேர்த்து சில பரிகாரங்களை நாம் செய்த பார்ப்பதிலும் தவறொன்றும் கிடையாது. ஒழிப்புக்கான பலனும் வருமானமும் கூடுதலாக கிடைக்கும்.

budhan

நமக்கு வரக்கூடிய பண தடைகளை தகர்த்தெறிய கூடிய சக்தி சில சக்தி வாய்ந்த பரிகாரங்கள் உண்டு. அந்த வரிசையில் நமக்கு வரும் பண கஷ்டங்கள், தடைகள், அனைத்தும் நம்மை விட்டு விலக பணம் பல வழிகளில் நம் கையை வந்து சேர வெந்தயத்தை வைத்து, புதன் பகவானை நினைத்து செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

புதன்கிழமை அதிகாலை வேளையிலேயே 6 மணிக்கு முன்பு எழுந்து சுத்தமாக குளித்து விடுங்கள். புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு சிறிய வெள்ளைத் துணியில், ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை வைத்து சிறிய முடிச்சாக கட்டி, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். தீபம் ஒன்றை ஏற்றி வைத்து விடுங்கள்.

பூஜை அறையில் ஒரு பாயை விரித்து அதன் மீது அமர்ந்து நீங்கள் முடிந்த முடிச்சை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனையை அந்த இறைவனிடம், குலதெய்வத்திடம் வாய்விட்டு சொல்லலாம். தவறு கிடையாது. ‘பணம் பல வழிகளில் என் கைக்கு வரவேண்டும், வியாபாரத்தில் முன்னுக்கு வர வேண்டும், செய்யும் தொழில் வெற்றி அடைய வேண்டும். செய்யும் வேலையில் வருமானம் நிறைய கிடைக்க வேண்டும்’ என்ற எப்படிப்பட்ட கோரிக்கையை வைத்தாலும் சரி, முழுமனதோடு நம்பிக்கையோடு இறைவனிடம் அந்த வரத்தினை கேளுங்கள்.

- Advertisement -

7 மணிக்குள் உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு கையில் இருக்கும் முடிச்சை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். தினமும் தீபம் ஏற்றும் போது இந்த முடிச்சுக்கும் ஊதுவத்தி காண்பிக்க வேண்டும். தினமும் வரக்கூடிய புதன் ஹோரையில் நீங்கள் முடிந்து வைத்திருக்கும் முடிச்சை உங்களுடைய கையில் வைத்து இறைவனிடம் வரங்களை கேட்கலாம் தவறு கிடையாது.

Oorai in Tamil
Oorai in Tamil

தினமும் உங்களால் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றால், வாரம் ஒருமுறை வரக்கூடிய புதன்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம். புதன் கிழமை என்றால் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் புதன் ஹோரை வரும். அந்த நேரத்தில் 5 வாரம், 5 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, முடிந்து வைத்திருக்கும் வெந்தயத்தை ஓடுகின்ற தண்ணீரில் கொட்டி விடலாம்.

money4

உங்களுடைய வீட்டு அருகில் ஓடுகின்ற ஆறு ஏரி குளம் எதுவும் இல்லை என்றால், செடிகொடிகள் இருக்கும் இடத்தில் இந்த வெந்தயத்தை போட்டு விடுங்கள் அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் பண தரித்திரம் வீட்டை விட்டு வெளியே சென்று விடும். பணம் பல வழிகளில் உங்களை தேடி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள் 5 வாரங்களில் நிச்சயமாக ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு நடப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -