கைக்கு வரும் காசு மொத்தமும் மருத்துவத்திற்க்கே செலவாகி விடுகிறதா? மருத்துவச் செலவைக் குறைக்க, மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஆரோக்கியமாக வாழ, இந்த தெய்வத்தின் படத்தை வீட்டில் வையுங்கள்.

dhanvanthri
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியத்தை அடமானம் வைத்து விட்டு தான் வாழ்கிறார்கள். இன்று ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் அது இந்த மாத்திரையை சாப்பிட்டால் தான் முடியும் என்ற அளவுக்கு போய்விட்டது. இதற்கு என்ன காரணம்? எல்லாம் நவீனமயம் ஆகிவிட்டது. இயற்கையாக விளையக்கூடிய அரிசி, பருப்பு, காய்கறிகளில் எல்லாம் செயற்கையாக போடப்படும் உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் நம்முடைய ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே தான் வருகிறது. சரி, கால சூழ்நிலைக்கு ஏற்ப உலகம் மாறத்தான் செய்யும். அதை நம்மால் எதுவும் செய்ய முடியாது. நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள ஆன்மீக ரீதியாக நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறை என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

dhanvantari4

தீராத நோய் தீர, தீராத வியாதிகள் எல்லாம் வைத்தியம் பார்க்கக்கூடிய தெய்வம் என்றால் அவர் தன்வந்திரி பகவான். பெரும்பாலும் வழிபாடுகளில் இந்த தன்வந்திரி பகவானுக்கு என்று நாம் நிறைய முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய தெய்வங்களின் திருஉருவப் படங்களின் பட்டியலில் நிச்சயமாக தன்வந்திரி பகவானும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

- Advertisement -

விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகர் என்று கட்டாயமாக நம் வீட்டு பூஜை அறைகளில் சில தெய்வங்களின் படம் இருக்கும் அல்லவா. அதே போல் ஒவ்வொரு வீட்டில் இருப்பவர்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். ஆரோக்கிய செல்வத்தை நிறைவாக பெற வேண்டும் என்றால் நிச்சயமாக பூஜை அறையில் தன்வந்திரி பகவானையும் வைத்து வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

dhanvantari

மற்ற ஸ்வாமி படங்களை எப்படி பூஜை அறையில் வைத்து இருக்கிறீர்களோ, அதேபோல தன்வந்திரி பகவானின் திருவுருவப் படத்தையும் மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் பூஜை செய்யும் போது தன்வந்திரி பகவானையும் வணங்கி கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாள் வியாழக்கிழமை உங்களால் முடிந்த பிரசாதத்தை தன்வந்திரி பகவானுக்கு நிவேதனமாக வைத்து, பின் வரக்கூடிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்காக தன்வந்திரிபகவானின் மந்திரம் இதோ.

- Advertisement -

ஓம் நமோபகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீமஹா விஷ்ணவே நம:

dhanvantari

இந்த மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். மேல் இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாது என்று சொல்லுபவர்கள் ‘ஓம் தன்வந்திரி பகவானே போற்றி’ என்ற மந்திரத்தை 21 முறை உச்சரிக்கலாம். குறிப்பாக தன்வந்திரி பகவானுக்கு நிவேதனமாக பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் தீராத நோய்க்கு கூட கூடிய விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும். (பேரிச்சம் பழம், கற்கண்டு, பழ வகைகள், இப்படி இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கூட பிரசாதமாக வைக்கலாம்.)

praying-god

சில வீடுகளில் மருந்து மாத்திரை சாப்பிடாதவர்களே இருக்கமாட்டார்கள். வாங்கும் சம்பளத்தை மருத்துவச் செலவிற்காக அப்படியே கொடுத்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய வீட்டில் நிச்சயமாக நல்லதொரு மாற்றம் தெரியும். நோய் நொடியோடு இருப்பவர்கள் வீட்டில்தான் தன்வந்திரி பகவானை வழிபட வேண்டுமா. நிச்சயம் கிடையாது. உங்கள் வீட்டில் எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட தினம்தோறும் இவரை வழிபாடு செய்து வந்தால், அந்த ஆரோக்கியம் இறுதிவரை உங்களுடனே இருக்கும். நோய் நொடிகள் வீட்டில் இருப்பவர்களை அண்டாது. நல்லதே நடக்கும்.

- Advertisement -