நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவில் எழுந்து நடக்க எளிமையான பரிகாரம்.

patiet gomathi sakkaram
- Advertisement -

முன்பெல்லாம் உடல் நலம் சரியில்லை என்று யாரோ ஒருவர் எப்போதோ சொல்ல கேள்விப்படுவோம். அதுவும் அவர்கள் வயது முதிர்ச்சியானவர்களாக தான் இது போன்று வியாதிகள் வரும். இன்றைய காலக்கட்டம் அப்படி அல்ல, சிறு குழந்தை முதல் வயதானவர் முறை எல்லோருக்கும் ஏதேனும் ஒரு வியாதி இருக்கிறது. இதில் இன்னும் பல பேர் தெரியாத புதுவிதமான வியாதிகள் வேறு உருவாகிக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் தொடர்ந்து வியாதியால் துன்பப்பட்டுக் கொண்டு மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். எப்போதாவது உடல்நிலை சரியில்லாமல் போவது என்பது இயற்கை தான். அவ்வப் போது அதற்கு மருத்துவம் பார்த்துக் கொள்வதும் இயற்கை தான். ஆனால் ஒரு சிலருக்கோ ஏதாவது ஒன்று போனால் ஒன்று என வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

இப்படி சதா சர்வ காலமும் நோய்வாய் பட்டுக் கொண்டே இருந்தால் அந்த குடும்பத்தில் நிம்மதி என்பதை இல்லாமல் போய் விடும். அதுமட்டுமின்றி எல்லா நிலைகளிலும் அவர்கள் பின்தங்கி கொண்டே சென்று விடுவார்கள். இந்த நிலை மாறி நோய்வாய் பட்டவர்கள் அதிலிருந்து விரைவில் மீண்டு வர அற்புதமான இந்த பரிகாரத்தை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

தீரா நோயிலிருந்து மீண்டு வர

இந்த பரிகாரத்திற்கு நாம் இரண்டு பொருட்களை வாங்க வேண்டும். ஒன்று மண்ணால் ஆன பானை மூடியுடன் வாங்க வேண்டும். மற்றொன்று கோமதி சக்கரம் ஐந்து கோமதி சக்கரம் வாங்கிக் கொள்ளுங்கள். இதை வாங்க முடியாதவர்கள் குறைந்தது மூன்று கோமதி சக்கரமாவது வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை எதுவும் பார்க்க வேண்டியது கிடையாது. எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் மாலை விளக்கு வைத்த பிறகு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை நோய்வாய்ப்பட்டவர் தான் செய்ய வேண்டும் என்று இல்லை அவருக்கு பதில் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

நீங்கள் வாங்கி வைத்திருக்கும் மண்பானையில் கோமதி சக்கரத்தை போட்டு அதன் மேல் உங்கள் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வமோ இஷ்ட தெய்வமோ யாரேனும் ஒருவரை மனதில் நினைத்துக் கொண்டு யாருக்கு உடல்நிலை சரியில்லையோ அவரது பெயரையும் அவருக்கு இருக்கும் பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்தப் பானையை மூடி போட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். இரவு படுக்கும் முன்பாக இந்த பானையை பூஜை அறையில் இருந்து எடுத்து நோய் வாய்பட்டவர் படுத்து கொண்டிருக்கும் கட்டிலில் கட்டி தொங்கவிட வேண்டும். இப்படி கட்டும் போது தெற்கு திசை தவிர மற்ற எந்த திசையில் வேண்டுமானாலும் இதை கட்டி தொங்க விடலாம்.

கட்டில் இல்லை தரையில் தான் படுத்து உறங்குவார் என்றால் அவருக்கு அருகிலே இந்த பானையை வைத்து விடுங்கள். இந்த பானை அவருடைய நோயின் தாக்கம் குறையும் வரை தினமும் இரவு படுக்கும் பொழுது இப்படியே வைத்து விடுங்கள். இதை செய்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே அவருடைய உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: தரித்திரம், கிரக கோளாறு நீங்க பௌர்ணமி பரிகாரம்

அவர் பரிபூரணமாக குணமான உடன் இந்த பானையும் கோமதி சக்கரத்தையும் ஓடும் நேரில் போட்டு விடுங்கள். இந்த பரிகாரம் செய்வது மிக மிக எளிமையான முறை தான். ஆனால் இதற்கான பலனானது மிகவும் அற்புதமானதாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த எளிமையான பரிகாரம் செய்து நீண்ட நாட்களாக நோயினால் அவதிப்படுபவர்கள் நோயில்லா ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முயலலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -