தரித்திரம், கிரக கோளாறு நீங்க பௌர்ணமி பரிகாரம்

pornami kiragam
- Advertisement -

ஒருவருக்கு கஷ்டம் என்று வந்து விட்டால் தொடர்ந்து ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருக்கும். இதை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்தும் இருப்போம். பலர் அனுபவிப்பதை கேட்டும் இருப்போம். சிலர் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். திடீரென சின்ன அளவில் ஒரு சரிவை சந்தித்து இருப்பார்கள். அது அப்படியே தொடர்கதையாகி கடைசியில் எதுவும் இல்லாமல் இருப்பார்கள். இது ஒரு வகையான கஷ்டம்.

அடுத்து இன்னொரு புறம் பார்த்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் பணம் தங்காது சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பெரிதாக சண்டை சச்சரவுகள் வரும். இப்படியான பிரச்சனைகளும் பல குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த இரண்டு வகையான பிரச்சனைகளில் ஏதாவது ஒன்றை இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறோம். இதற்கு பிறருடைய கெட்ட எண்ணங்கள், கண் திருஷ்டி போன்றவை காரணம் என்றாலும் சில நேரங்களில் நம்முடைய கிரக கோளாறுகளும் காரணமாக இருக்கலாம்.

ஏனெனில் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி நட்சத்திரமாக இருப்பார்கள். ஒருவருக்கு நேரம் சரி இருக்கும் போது மற்றவருக்கு சரியில்லாத போகும். இவையும் குடும்பத்தை இப்படி பாடாய்படுத்தும். இதையெல்லாம் சரி செய்யக் கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தரித்திரம் பீடை கிரக கோளாறுகள் நீங்க தேங்காய் பரிகாரம்

இந்த பரிகாரத்தை பௌர்ணமி நாளில் மட்டும் தான் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு சிகப்பு நிறத்திலான ஒரு துண்டு, நல்ல தரமான தேங்காயாக ஒன்றை பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

முதலில் ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக குங்குமத்தை எடுத்து அதை பன்னீர் ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள். இப்போது குங்குமத்தை உங்களுடைய வலது கையில் உள்ள மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தேங்காயை சிகப்பு நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த மூட்டையை உங்கள் வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் கொண்டு திருஷ்டி சுற்றுவது போல சுற்றுங்கள். அப்படியே வீட்டின் மூளையில் உள்ள சுவற்றில் எல்லாம் தேங்காயை வைத்து ஒற்றி எடுங்கள். அதே போல் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஒவ்வொருவராக நிற்க வைத்து இந்த தேங்காய் வைத்து திருஷ்டி சுற்றிக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் செய்த பிறகு இந்த தேங்காயை கொண்டு கடல் அல்லது ஓடும் நீரின் போட வேண்டும். அப்படி போடும் போது உங்கள் காலணிகளை கரையில் வைத்து விட்டு வெறும் காலுடன் தண்ணீரில் நின்று கொண்டு உங்களுடைய துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த தேங்காயை தண்ணீரில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: திறமையை வெளிப்படுத்த உதவும் பரிகாரம்.

இந்த பரிகாரத்தை செய்த சில நாட்களுக்குள்ளாகவே உங்களுக்கு இருக்கும் இது போன்ற பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை உணர்வீர்கள். அதுமட்டுமின்றி குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி சுமுகமான சூழ்நிலையும் நிலவும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -