தீராத நோய் தீர முருகன் வழிபாடு

murugan pray
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் நோயில்லா வீடு இல்லவே இல்லை என்று சொல்லலாம். ஒரு காலத்தில் யாரேனும் ஒருவருக்கு வியாதி இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். இன்றோ வீட்டுக்கு வீடு வியாதிகள் பெருக்கெடுத்து காணப்படுகிறது. அதிலும் பெயர் கூட தெரியாத புதுப்புது வியாதிகள் வந்து மனிதனை தினம் தினம் பாடாயப்படுத்துகிறது.

இது ஒரு புறம் இருக்க ஒரு சிலர் நன்றாக இருந்திருப்பார்கள் திடீரென உடல் நல கோளாறு வந்திருக்கும். அது என்ன பிரச்சனை ஏன் வந்திருக்கிறது என்பது கூட கண்டுபிடிக்க முடியாது. இன்னும் சிலருக்கோ வியாதிக்கு தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டாலும் அவை தீராது. இவைக்கெல்லாம் கர்ம வினை காரணம் என்று ஒரு புறம் சொன்னாலும், அதற்காக வியாதியுடனே காலத்திற்கும் வாழ முடியாது அல்லவா.

- Advertisement -

அப்படியானால் நம்முடைய கர்ம வினையையும் வியாதியும் நீங்க சரணடைய வேண்டிய கடவுள் கந்த பெருமான் தான். கருணைமிக்க கந்தனை இந்த முறையில் வழிபட்டால் தீராத வியாதியும் தீர்ந்து நலமுடன் வாழலாம் என்று சொல்லப்படுகிறது அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நோய் தீர கந்தன் வழிபாடு

இந்த வழிபாடை 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் இதில் ஒரு நாளும் தவறு விடக் கூடாது. பெண்கள் செய்வதாக இருந்தால் அவர்களுக்கான மாதவிலக்கு நாட்களை தவிர்த்து விட்டு வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம். இந்த வழிபாட்டை நோய்வாய்ப்பட்டவர்கள் செய்தால் நல்லது. அவர்களுக்காக மற்றவர்களும் செய்யலாம்.

- Advertisement -

ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்தது அதே போல் ஒவ்வொரு நட்சத்திரமும் உகந்தது. அந்த வகையில் சஷ்டி திதியும் கிருத்திகை நட்சத்திரமும் முருகனுக்கு உகந்த தனிப்பெரும் சிறப்பு வாய்ந்த நாட்கள். அதில் இந்த வழிபாட்டை சஷ்டி திதி என்று துவங்குவது மிகவும் நல்லது. அது வளர்பிறை சஷ்டி தேய்பிறை சஷ்டி எதுவாக இருந்தாலும் செய்யலாம்.

அன்றைய தினம் காலையில் குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு செல்லுங்கள். அதற்கு முன்னதாக சுத்தமான பசுஞ்சாணத்தால் ஆன விபூதியை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த விபூதியை கொண்டு முருகருக்கு விபூதி அபிஷேகம் செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்னவோ நீங்கள் ஆலயத்தில் கேட்டு தெரிந்து கொண்டு செய்யுங்கள்.

- Advertisement -

இப்படி அபிஷேகம் செய்த விபூதியை நீங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். அத்துடன் வேல்மாறல் பதிகத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆலயத்திற்கு சென்று வந்த பிறகு வீட்டில் முருகப் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதற்கு முன்பாக அமர்ந்து இந்த வேல் மாறல் பதிகத்தை படிக்க வேண்டும்.

இதைப் படித்து முடித்த பிறகு அபிஷேகம் செய்து வந்த விபூதியை நோய்வாய்ப்பட்டவர் நெற்றியில் வைத்து விடுங்கள். இதே போல தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். விபூதி அபிஷேகத்தை ஒரு நாள் செய்தால் போதும். ஆனால் வீட்டில் தீபம் ஏற்றி வேல்மாறல் படிப்பதை 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த 48 நாட்கள் அசைவத்தை மட்டும் தவிர்த்து விடுவது நல்லது.

நீங்கள் எப்பொழுதும் எடுக்கும் மருந்து மாத்திரைகளுடன் இந்த ஒரு வழிபாட்டு முறையும் நம்பிக்கையுடன் செய்து வந்தால் எப்பேர்பட்ட நோயிலிருந்தும் மீளலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வேல்மாறல் பதக்கத்தை நோய் தீர்க்கும் பதிகம் என்றும் சொல்வார்கள். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த பதிகமும் முருகருக்கு அபிஷேகம் செய்த விபூதியும் நிச்சயம் ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும்.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர தீப வழிபாடு

முருகனின் இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து நோயில்லா வாழ்க்கையை வாழுங்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வழிபாட்டு முறையில் நீங்களும் நம்பிக்கையுடன் செய்தால் முருகனின் முழு அருளையும் பெறலாம்.

- Advertisement -