தங்கம் சேர தீப வழிபாடு

guru bhagavan dheepam
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் அவசிய தேவை என்ற பட்டியலில் தங்கம் முக்கியமானதாகி விட்டது. முன்பெல்லாம் தங்கமானது அழகியல் சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்கப்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் அப்படி அல்ல தங்கம் என்பது அந்தஸ்தை காட்டக் கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு அனைவரும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

அப்படியான இந்த தங்கத்தை வாங்கி சேர்க்க அனைவருமே ஆசைப்படத் தான் செய்வார்கள். வசதி படைத்தவர்கள் ஏதேனும் ஒன்றை செய்து வாங்கி கொள்கிறார்கள். வசதி இல்லாதவர்கள் என்ன செய்வது?. அப்படி ஒரு பொட்டு தங்கம் கூட என்னிடம் இல்லையே என்று வருத்தப்படுபவர்கள், இந்த தீப வழிபாட்டை செய்யும் போது தங்கம் வாங்கக் கூடிய யோகம் வரும் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

தங்கம் சேர குரு புஷ்ய யோகம்

தங்கம் வீட்டில் சேர வேண்டுமெனில் முதலில் தங்கம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் தோன்ற வேண்டும். அதற்கான நியாயமான முறையில் முயற்சிகளையும் உழைப்பையும் நாம் செலுத்த வேண்டும். அத்துடன் சில வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்யும் போது தங்கமானது சீக்கிரம் வாங்க கூடிய யோகம் அமையும்.

அப்படியான யோகத்தை சில நாட்கள் நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். அதே போல் சில நட்சத்திரங்களும் இது போன்ற பலனை கொடுக்கும். நாளைய தினம் வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள் தங்கம் என்றாலே குருவிற்கு உரியது தான். அத்தகைய அற்புதமான நாளில் பூசம் நட்சத்திரம் இணைந்து வந்துள்ளது. பூசம் நட்சத்திரத்தில் நகை வாங்கும் போது அது சேரும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இவை இரண்டும் இணைந்து வந்திருக்கக்கூடிய இந்த நாளை தான் குரு புஷ்ய யோகம் என்று சொல்வார்கள். இந்த நாளில் நாம் தங்கம் வாங்க எடுக்கக்கூடிய முயற்சிகள் பல மடங்கு அதிக பலனை கொடுக்கும். இது மட்டும் இன்றி வியாழக்கிழமை குபேரருக்கும் உகந்த நாள். இந்த நாளில் நாம் வழிபடும் பொழுதும் தங்கம் வாங்கக் கூடிய யோகத்தை பெறலாம்.
நாளை மாலை 6 மணிக்கு வீட்டில் நிலை வாசலில் இரண்டு புறமும் இரண்டு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த இலுப்பைஎண்ணையானது குபேரருக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது. நாளைய தினம் இந்த தீப வழிபாட்டை தொடங்கி தொடர்ந்து 41 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

இந்த தீப வழிபாடு தங்கம் வாங்கக்கூடிய யோகத்தை உங்களுக்கு தேடித் தரும் என்று சொல்லப்படுகிறது. அதைப் போன்று நாளைய தினம் குரு புருஷ யோக தினத்தில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் தங்கம் வாங்கினால் அதிக அளவு தங்கம் சேரும். நாளைய தினத்தில் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும் பல மடங்கு பெருக கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே: பண வரவை தரும் கற்றாழை பரிகாரம்

தங்கம் வாங்க செய்யக்கூடிய இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நாளைய தினம் தவறாது இதை செய்து தங்க நகைகளை அதிகமாக வாங்கும் யோகத்தை பெறலாம்.

- Advertisement -