தீராத நோய் தீர்க்கும் முருகர் வழிபாடு

murugar valipadu
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எவ்வளவு உயரிய செல்வத்தை பெற்று இருந்தாலும் உடல் ஆரோக்கியம் என்பது இல்லை என்றால் அந்த செல்வத்தை அவர்களால் அனுபவிக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. எந்த செல்வமும் இல்லாமல் உடல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த அனைத்து செல்வங்களையும் பெற முடியும் என்பதும் பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தது தான். அப்படிப்பட்ட ஆரோக்கியமான உடலை பெறுவதற்கும் நீண்ட நாட்கள் ஆக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நோயிலிருந்து விடுபடவும் முருகப்பெருமானை வழிபடும் முறை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு அந்த நோயின் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் இருப்பவர்கள் தங்களுடைய மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனையிலேயே மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறுவார்கள். அதனால் தான் மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை சாப்பிடும் பொழுதே தெய்வத்தையும் நாடி தெய்வ வழிபாட்டையும் செய்தோம் என்றால் இவை இரண்டும் சேர்ந்து நம்முடைய நோயின் தாக்கத்தை படிப்படியாக குறைக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

இந்த முருகர் வழிபாட்டை நாம் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்களில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இந்த வழிபாட்டை நோய்வாய்ப்பட்டவர்கள் தான் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை. அவர்களால் இயலும் பட்சத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம். இயலாத பட்சத்தில் அவர்களுக்கு பதிலாக வேறு யாரு வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. இயலாத பட்சத்தில் வீட்டிலேயே இருக்கும் முருகனுக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வழிபாட்டை மேற்கொள்ளும் நாளன்று வீட்டில் இருக்கக் கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தமாக துடைத்த அவருக்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவருக்கு செவ்வரளி பூக்களை வாங்கி வந்து மாலையாக தொடுத்த அணிவிக்க வேண்டும். இவ்வாறு அணிவித்த பிறகு அவருக்கு அகலில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி ஏற்றும் பொழுது அதில் இருக்கக்கூடிய திரியானது சிவப்பு நிற திரியாக இருப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அடுத்ததாக அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து “ஓம் பாலசுப்பிரமணிய மகா தேவி புத்ரா சுவாமி வரவர ஸ்வாஹா” என்னும் மந்திரத்தை தங்களால் எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை கூற வேண்டும். இதற்கென்று எந்த வித கணக்கும் கிடையாது. இப்படி கூறிவிட்டு முருகப் பெருமானிடம் மனதார உங்களுடைய நோய் பரிபூரணமாக குணமாக வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும்.

ஆலயத்திற்கு செல்பவர்களாக இருந்தால் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை கொடுத்துவிட்டு அவருக்கு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை அங்கே உச்சரிக்கலாம். தொடர்ந்து இத்தனை நாட்கள் தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. தங்களுக்கு இயலும் பட்சத்தில் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் நோயின் தாக்கத்தை பொருத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தொடர்ச்சியாக தினமும் மேற்கொள்வது சிறப்பு.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் நம்முடைய நோய்கள் மட்டும்தான் நீங்கும் என்பது கிடையாது. இந்த மந்திரத்தை நாம் தினமும் உச்சரிப்பதன் மூலம் சகல தோஷங்களும் விளகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர அஷ்டலட்சுமி தீபம்

மிகவும் எளிமையான இந்த முருக வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு நோய் நொடிகளின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -