உடல் நலனில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுகிறதா? வீட்டில் இருப்பவர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவ செலவு நேரிடுகிறதா? அப்பொழுது இந்த தானத்தை செய்து பாருங்கள். குடும்பத்தில் மருத்துவ செலவு குறைய ஆரம்பிக்கும்.

thaanam
- Advertisement -

நம் முன்னோர்கள் காலம் தொட்டு தானமும், தர்மமும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து வருகிறது. ஏதாவது ஒரு பிரதிபலனை எதிர்பார்த்து நாம் செய்யக் கூடியதுதான் தானம். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்யக் கூடியது தான் தர்மம். பொதுவாக நமக்கு ஏதாவது ஒரு வேண்டுதல் இருக்கிறது என்றால் அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக யாருக்காவது ஏதாவது பொருளை தந்தோம் என்றால் அது தானத்தில் சேர்ந்து விடும். அப்படி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம்முடைய நோய்கள் தீருவதற்கு எந்த பொருளை தானமாக தர வேண்டும் என்று பார்க்கப் போகிறோம்.

குழந்தை பாக்கியம் வேண்டும், குழந்தைகள் சிறப்பாக படிக்க வேண்டும், திருமண தடை விலக வேண்டும், எதிர்பார்த்த வேலை கிடைக்க வேண்டும், தொழில் லாபகரமாக நடக்க வேண்டும் என்று பல வேண்டுதலுக்காக பல தானங்களை தருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் உடல் நோயை தீர்ப்பதற்கு உதவக்கூடிய தானத்தை தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த தானத்தை நாம் அமாவாசை நாளில் தான் செய்ய வேண்டும். அதுவும் உச்சிப் பொழுதில் தான் செய்ய வேண்டும். அதாவது நண்பகல் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் இந்த தானத்தை செய்து விட வேண்டும். இந்த தானத்தை செய்யும்பொழுது தானம் செய்பவர்கள் விரதம் இருந்து செய்ய வேண்டும். அதாவது காலைப் பொழுதில் எதுவும் உண்ணாமல் இந்த தானத்தை செய்து விட்டு பிறகு உண்ணலாம். இந்த தானத்தை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

உடல் நலனில் இருக்கக்கூடிய பாதிப்புகள் குறைவதற்கு உதவும் தானங்களை இப்பொழுது பார்ப்போம். இந்த தானத்தை நாம் தரும்பொழுது அதனுடன் ஏதாவது ஒரு காணிக்கையை வைத்து தர வேண்டும். அதாவது 11, 21, 51 ரூபாய் என்று காணிக்கை வைத்து தர வேண்டும். முதலில் தரக்கூடிய தானமானது பாய் தானம். நாம் படுத்து உறங்கும் பாய் இருக்கிறது அல்லவா? அந்தப் பாயை தான் காணிக்கையுடன் யாருக்காவது தானம் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பாயை தராமல் கோரை பாயை தந்தால் தான் அதில் நமக்கு பலன் கிடைக்கும்.

- Advertisement -

அடுத்ததாக மஞ்சள் பூசணிக்காய். இந்த மஞ்சள் பூசணிக்காயையும் நாம் காணிக்கையுடன் தான் யாருக்காவது தரவேண்டும். அதுவும் குறிப்பாக கோவிலில் அர்ச்சனை செய்யும் ஐயர்களுக்கு இதை தரலாம். அன்று அமாவாசை என்பதால் தர்ப்பணம் செய்யும் ஐயர்களுக்கும் இந்த மஞ்சள் பூசணிக்காயை தரலாம். இதில் முக்கியமானது என்னவென்றால் முழு பூசணிக்கையாக தான் தர வேண்டும்.

இந்த தானத்தை உங்களால் இயன்ற அளவிற்கு எத்தனை நபர்களுக்கு தர முடியுமோ அத்தனை நபர்களுக்கு தரலாம். இவ்வாறு தருவதன் மூலம் உடல் நலனில் இருக்கக்கூடிய பாதிப்புகள் சரியாக ஆரம்பித்து விடும். காரணம் என்னவென்றே தெரியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய உடல் நலனில் நல்ல மாற்றம் தென்படும் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே: விரலி மஞ்சளை வைத்து இப்படி பரிகாரம் செய்தால் குரு பகவானின் அருளால் திருமண தடை ஏற்பட்டு இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும்.

முறையாக மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதுடன் இந்த தானத்தையும் நாம் செய்து வந்தால் நம் உடல் நலனில் நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும்.

- Advertisement -