விரலி மஞ்சளை வைத்து இப்படி பரிகாரம் செய்தால் குரு பகவானின் அருளால் திருமண தடை ஏற்பட்டு இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும்.

virali manjal marriage
- Advertisement -

திருமணம் என்பது இரு மனங்களும் இணையும் சங்கமம் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இரண்டு மனமும் இணைய வேண்டும் என்றால் அதற்கு குரு பகவானின் அருள் நிச்சயமாக தேவைப்படுகிறது. குருபகவானின் அருள் இருந்தால்தான் ஒருவருக்கு திருமணம் என்பது நடைபெறும் என்பது ஜாதக ரீதியான கருத்து. அவ்வாறு குரு பகவானின் அருள் கிடைக்காதவர்களுக்கு என்ன தான் முயற்சி செய்தாலும் திருமணத்தில் ஏதாவது ஒரு தடைகளோ, தடங்கலோ ஏற்பட்டு கொண்டுதான் இருக்கும். அப்படிப்பட்ட குரு பகவானின் அருளை பெறுவதற்கும் திருமணம் விரைவில் நடைபெறுவதற்கும் விரலி மஞ்சள் வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய நன்மைகள் அனைத்திற்கும் குரு பகவானின் பார்வையே காரணமாக திகழ்கிறது என்றும் கூட கூறலாம். அனைத்து வசதிகளும், செல்வ செழிப்புகளும் இருந்து ஒருவருக்கு காரணம் இன்றி திருமணம் தடைபடுகிறது அல்லது நடக்கவில்லை என்றால் அவர்களுக்கு குருவால் ஏதாவது பாதிப்பு இருக்கும். அதை சரி செய்வதற்குரிய எளிய பரிகாரத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது விரலி மஞ்சள். மஞ்சள் என்பது குரு பகவானின் அம்சம் பொருந்திய பொருள் என்பதால் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது குருபகவானின் அருள் நமக்கு கிடைக்கும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு 27 விரலி மஞ்சள் தேவைப்படும். நல்ல விரலி மஞ்சள் ஆக பார்த்து வாங்க வேண்டும். அதை ஒரு மஞ்சள் நிற நூலால் மாலையாக கட்ட வேண்டும். இந்த மாலையை அருகில் இருக்கும் ஆலயத்தில் இருக்கும் கடவுளுக்கு வழங்க வேண்டும். ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருக்கும் சுவாமி படத்திற்கு இதை மாலையாக அணிவிக்கலாம். ஒரு நாள் முழுவதும் இந்த மாலை சுவாமியின் படத்திலேயே இருக்கட்டும்.

மறுநாள் காலையில் அந்த விரலி மஞ்சள் மாலையை எடுக்க வேண்டும். இரண்டு வெற்றிலை, ஒரு பாக்கு, இரண்டு வாழைப்பழம், நான்கு வளையல், குங்குமம், மஞ்சள் இவற்றை வைத்து அதனுடன் ஒரு விரலி மஞ்சளையும் வைத்து சுவாமியின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். அடுத்ததாக அந்த மாலையில் இருந்து மற்றொரு விரலி மஞ்சள் எடுத்து நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மீதம் இருக்கும் 25 விரலி மஞ்சளை சுவாமிக்கு எப்படி வைத்தோமோ அதே போல் வைத்து 25 சுமங்கலி பெண்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு கொடுக்கும் நாள் ஆனது வெள்ளிக்கிழமையாக இருக்க வேண்டும். இப்படி கொடுத்த பிறகு அவர்களிடம் இருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இயன்றவர்கள் இந்த பொருட்களுடன் ஏதாவது ஒரு காணிக்கையை வைத்து கொடுக்கலாம் அல்லது இனிப்பு வைத்து கொடுக்கலாம்.

இப்படி தொடர்ந்து 27 வாரங்கள் வெள்ளிக்கிழமை தோறும் நாம் சுமங்கலி பெண்களுக்கு தர வேண்டும். சுமங்கலி பெண்களை நம் வீட்டிற்கு அழைத்தும் கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்தோம் என்றால் அவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது செய்து தர வேண்டும். அல்லது கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களிடமும் நாம் கொடுத்த ஆசிர்வாதத்தை வாங்கலாம்.

- Advertisement -

இவ்வாறு நாம் செய்வதன் மூலம் குரு பகவானின் அருள் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து சுமங்கலி பெண்களின் ஆசீர்வாதத்தை பெறுவதால் விரைவிலேயே தடைப்பட்ட திருமணம் என்பது நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: ஜாதகத்தில் இருக்கும் சுக்கிர தோஷம் நீங்கி சுக்கிர வசியம் ஏற்பட்டு செல்வ செழிப்புடன் வாழ ஒரு கைப்பிடி மொச்சை இருந்தால் அதை இப்படி செய்து விடுங்கள் போதும்.

விரலி மஞ்சளை வைத்து பல பரிகாரங்களை செய்தாலும் அவற்றில் திருமண தடையை விளக்கக்கூடிய இந்த எளிமையான பரிகாரத்தை திருமண தடை உள்ளவர்கள் தாங்களே செய்து விரைவில் திருமணம் நடைபெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -