அக்டோபர் மாத ராசி பலன் 2019

October matha rasi palan
- Advertisement -

மேஷம்

உங்களின் பொருளாதார நிலையில் சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டிய காலமிது. நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் நீண்ட தடை தாமதத்திற்கு பின்பே உங்களுக்கு கிடைக்கும். உங்கள் உடலுக்கு, அடிக்கடி பயணங்களின் போது புதிய உணவுகளை உண்பதாலும் சிலருக்கு வயிறு சம்பந்தம்மான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல் அசதி மிகும்.

- Advertisement -

குடும்பத்தில் உள்ளவர்களும் சில உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டு மீள்வார்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது ஏற்படும் உறவினர்களளோடு அனுசரித்து நடந்து கொள்வதின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உத்தியோகிஸ்தர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கும் பல விதமான அலைச்சல்கள், தடங்கல்களை சந்தித்த பிறகே நல்ல வேலை வாய்ப்பு அமையும். கலைத்தொழில் இருப்பவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும் கடன் வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

- Advertisement -

வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர் தரும் கலவியேகருதி
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

- Advertisement -

ரிஷபம்

Rishabam Rasi

உடல் நலம் நன்றாக இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறிது நோய்வாய்ப்பட்டு மீண்டும் குணமாகும் நிலையிருக்கும்.ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசைய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கு கொடுத்த தொகையை வட்டியுடன் திரும்ப பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் தொழில், வியாபாரங்களை விரிவு படுத்தும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் ஏற்படும்.

வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும்.

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

மிதுனம்

midhunam

அவ்வப்போது நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். பெரும் தொகையை கடனாக கொடுத்தவர்கள் அதை சுலபத்தில் வசூல் செய்ய முடியாமல் தவிப்பார்கள். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

பிறருக்கு கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரங்களில் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்கும் நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிராக சிலர் மறைமுகமாக சதிகளை செய்வார்கள்.

திருமணம் வயது கொண்ட பெண்களுக்கு நல்ல வரன் அமையும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று மந்த நிலையை அடைவார்கள்.எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்.

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே

கடகம்

Kadagam Rasi

கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் பெருகும். உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், நோய்கள் நீங்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும்.

புதிய வீடு, மனை, வாகனங்களை வாங்கும் அமைப்பு ஏற்படும்.பெண்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைபேறில்லாமல் தவித்த பெண்களுக்கு புத்திர பாக்கியங்கள் உண்டாகும். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும்.

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

சிம்மம்

simmam

சுக வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாகும். சுப காரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். வீண் செலவுகள் ஏற்படலாம். புத்திர வழியில் மனக்கவலைகள் உருவாகும். பிறரின் சொந்த விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் கடன்கள் கொடுக்க கூடாது. தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் வயதானவர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். உடலில் அசதியும், மனதில் கவலைகளும் அதிகரிக்கும்.வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும்.

வேலை தேடுபவர்கள் பல அலைச்சல்களுக்கு பிறகு புதிய வேலை கிடைக்க பெறுவார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் ஆதரவை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும்.

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நன்மை தரும்.

பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்
காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்
பேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,
நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

கன்னி

Kanni Rasi

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழ்நிலை இருக்காது. திருமண, புது வீடு போன்ற சுப காரியங்கள் சம்பந்தமான முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். பிறருடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். பயன்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையிலேயே இருக்கும்.

குடும்பத்தேவைகளுக்காக கடன் வாங்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். ஊழியர்கள் எதிலும் சற்று பணிந்து போவது தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். விவசாய தொழில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கும்.

எல்லாவற்றிலும் கடின முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே விரும்பிய பலன்களை பெற முடியும்.கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும்.

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்
பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே
எண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.

துலாம்

Thulam Rasi

உடல் நிலை நன்றாக இருக்கும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். கொடுத்த கடன்களும் சரியான வட்டியுடன் மீண்டும் வந்து சேரும். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வழிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள்.

தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும்.வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி தீர்ப்பீர்கள். உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறக்கூடும். நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் விரும்பியவாறு உங்களுக்கு வெற்றி உண்டாகும்.

பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும்.வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும்.

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்

விருச்சிகம்

Virichigam Rasi

பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் மிகவும் தாமதமாகவே கிடைக்கும். எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை விரைவில் பெற முடியாது. உங்களுக்கு மேல் உயர்பதவிகளிலிருப்பவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

ஆடம்பர மற்றும் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகும்.

கல்வியில் சிறக்க மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறருடைய விடயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிறருக்கு பணத்தை கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நல்ல லாபங்களை தொழிலில் பெற முடியும்.

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!

பாரதியார் கவிதைகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

தனுசு

Dhanusu Rasi

உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பிறருடனான பணம் கொடுக்கல் வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத் தாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் வெளிநபர்களிடமும் பேசும் போது கவனமுடன் இருப்பது நல்லது. தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் எதுவும் இருக்காது. பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதின் மூலம் தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்க்க முடியும்.

வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும்.உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் வழியிலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிறருக்கு கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன்

மகரம்

Magaram rasi

உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவியுயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெருந்தொகையை முதலீடாக போட்டு செய்யும் வியாபாரங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறக்கூடிய காரியங்களை செய்வீர்கள்.பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.வாகனங்களை ஊட்டும் போது அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே.

கும்பம்

Kumbam Rasi

குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.பிறருடன் பேசும் போது கனமுடன் பேச வேண்டும்.தொலைதூர பயணங்களால் வீண் பொருள் மற்றும் கால விரயம் ஏற்படும்.

பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
குடும்பத்தில் பெரியவர்களுக்கு மனக்கவலைகள் அதிகம் ஏற்படும். அவர்களின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள்.

உறவினர்களோடு உங்களுக்கு பிரச்சனைகள் எழலாம். பணவரவு தாராளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் ஒரு சிலருக்கு தாமதங்களும் பிரச்சனைகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து நன்றாக படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.

மீனம்

Meenam Rasi

கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும்.குழந்தைகள் வழியில் அவ்வப்போது மருத்துவ செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனம் சற்று குழப்ப நிலையில் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும்.

அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்.தொழில், வியாபாரங்களில் லாபம் கிடைக்கும்.புதிய வாகனங்கள் வாகும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொலைதூர பயணங்களை சிலர் மேற்கொள்வார்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

வார ராசி பலன், மாத ராசி பலன், திருமண பொருத்தம், காதல் பொருத்தம், பெயர் பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have October month Rasi palan in Tamil or October matha Rasi palangal in Tamil. This October month Rasi palangal covers Mesham to Meenam Rasi.

- Advertisement -