எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும் முகம், டால் அடிக்கும் அளவிற்கு பள பளன்னு மாற இந்த ஒரு பேக் போதும்.

face6
- Advertisement -

சில பேருடைய முகம் என்னதான் சோப்பு போட்டு கழுவினாலும் பத்து நிமிடத்தில் மீண்டும் எண்ணெய் வடிய தொடங்கிவிடும். முகம் பிசுபிசுவென ஒட்டிக் கொண்டே இருக்கும். பொலிவிழந்து காணப்படும். எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும் அவர்களுக்கு பொலிவான தோற்றம் கிடைக்காது. அப்படிப்பட்டவர்கள் எல்லாம் பின் சொல்லக்கூடிய குறிப்பை 15 நாட்களுக்கு ஒருமுறை முயற்சி செய்தாலே போதும். முகம் அப்படியே டால் அடிக்கும் அளவிற்கு அழகாக மாறிவிடும்.

இந்த குறிப்பில் 3 step கொடுக்கப்பட்டுள்ளது. சரியான முறையில் இதை பின்பற்றி வந்தால் எண்ணெய் வடியும் பிரச்சனை உடனடியாக நிற்கும்.

- Advertisement -

Step 1:
முதலில் உங்களுடைய முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சில் பச்சை பாலை நனைத்து முகத்தை சுத்தமாக துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்கிற தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலை, துளசி இலை, எலுமிச்சை இலை, இந்த 3 இலைகளையும் போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது சுடுதண்ணீரில் இருந்து ஆவி வரும் அல்லவா. அந்த ஆவியை உங்கள் முகத்தில் காட்ட வேண்டும். சளி பிடித்தால் பெட்ஷீட் போட்டு ஆவி பிடிப்பதுபோல், ஐந்தி லிருந்து ஏழு நிமிடங்கள் ஆவியில் உங்களுடைய முகத்தை காண்பியுங்கள். அதன் பின்பு முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள்.

Step 2:
அடுத்தபடியாக முகத்தை லேசாக ஸ்கிரப் செய்ய வேண்டும். 1 ஸ்பூன் ஜாதிக்காய் பொடியில், தேவையான அளவு தேன் விட்டு, கலந்து பேக் போல தயார் செய்து இதை தொட்டு முகம் முழுவதும் அப்ளை செய்து வட்டவடிவில் 5 நிமிடங்கள் போல ஜென்டிலாக ஸ்கரப் செய்ய வேண்டும். உங்களுடைய முகத்தில் முகப்பரு இருந்தால் ஸ்க்ரப் செய்யக்கூடாது. இந்த பேக்கை இலேசாக அப்ளை செய்துவிட்டு, 5 இலிருந்து 7 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடவேண்டும். கழுத்துப் பகுதிகளிலும் ஸ்க்ரப் செய்ய மறக்காதீங்க.

- Advertisement -

Step 3:
அடுத்தபடியாக ஃபேஸ் பேக் போட வேண்டும். ஒரு சிறிய பௌலில் முல்தானிமெட்டி பொடி 2 ஸ்பூன் போட்டு, இதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் ஊற்றி, நன்றாக கலந்து இதை முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து லேசாக மசாஜ் செய்து முகத்தை கழுவி விட வேண்டும். அவ்வளவு தான்.

உங்களுடைய சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இருப்பதை பார்க்க முடியும். 15 நாட்களுக்கு ஒருமுறை மேல் சொன்ன குறிப்பை பின்பற்றி வரும் போது நிரந்தரமாக உங்களுடைய முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை குறையும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -