பீரோவில் இருக்கும் அளவு பத்தாத துணியை என்ன செய்ய வேண்டும்? பழைய துணியை இப்படி செய்தால் தரித்திரம் வந்துவிடும் பார்த்துகோங்க!

vasthira-dhanam
- Advertisement -

மாதத்திற்கு மாதம் உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் கொண்டிருக்கும் நபர்களுக்கு எந்த அளவுகளில் துணிமணிகள் வாங்கினாலும் கொஞ்ச காலத்திலேயே அது அவர்களுக்கு உரிய அளவாக இல்லாமல் போய்விடுகிறது. குறிப்பாக குழந்தைகள் வேகமாக வளர்வதால் புதிய துணிமணிகளை கூட சில மாதங்களில் அவர்களால் அணிய முடியாமல் போய்விடுகிறது. இப்படிப்பட்ட துணிமணிகள் பீரோவில் நிறைய சேர்த்து வைத்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? பழைய துணிகளை செய்யக்கூடாதது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பழைய துணிமணிகளை எப்போதும் தனியாக வைத்திருக்க வேண்டும். விடாப்பிடியான அழுக்குகள் படிந்த துணிமணிகள், நைந்து போன துணிகள், கிழிந்த துணிமணிகள் ஆகியவற்றை ஒரு போதும் மற்றவர்களுக்கு தானம் கொடுக்க கூடாது. இத்தகைய வஸ்திரங்களை தானம் செய்பவர்களுக்கு கட்டாயம் பாவம் வந்து சேரும் என்கிறது ஆன்மீகம். கிழிந்து நைந்து போன துணிகளை எரித்து விடுவது நல்லது. ஓடும் தண்ணீரில் விடுவது பாவத்தை கொண்டு வரும்.

- Advertisement -

சிலர் பழைய துணிமணிகளை குப்பையில் அப்படியே போட்டு விடுவது உண்டு. உங்கள் வியர்வை பட்ட இந்த துணிமணிகள் குப்பையில் சென்ற பிறகு என்ன ஆகும்? என்பது நமக்கு தெரிவதில்லை. தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் தெரு நாய்கள் நம்முடைய துணிமணிகளை இழுத்துச் சென்று நார் நாராக கிழித்து எறியும். இதனால் நமக்கு தரித்திரம் வந்து சேர வாய்ப்புகள் உண்டு எனவே குப்பையில் அப்படியே எறியாமல் எரிப்பது தான் சரியான முறையாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அளவு பத்தாத துணிமணிகள் நிறையவே பீரோவில் அடுக்கி வைத்திருப்பார்கள். அதை அவர்களால் போட முடியாவிட்டாலும் மற்றவர்களுக்கு கொடுக்க மனம் வருவதில்லை என்பது தான் வேதனைக்குரியது. நீண்ட காலம் வைத்திருக்கும் துணிமணிகளில் ஒருவிதமான துர்நாற்றம் வீசத் தொடங்கும். இது குடும்பத்தில் தரித்திரத்தை ஏற்படுத்தும் எனவே அவ்வப்போது உங்களுக்கு பத்தாத துணிமணிகளை இல்லாத ஏழை, எளியவர்களுக்கு தானம் கொடுத்து விடுவது நல்லது. குறிப்பாக 1 முதல் 10 வயது உள்ள குழந்தைகளின் துணிமணிகள் புதிதாக இருந்தாலும் அவை கொஞ்ச காலத்தில் அவர்களுக்கு அளவு போதாமல் போய்விடும். இப்படிப்பட்ட நல்ல துணிமணிகளை அனாதை இல்லங்களுக்கு நீங்களாகவே சென்று தானம் கொடுப்பது மிகவும் நன்மை கொடுக்க கூடிய ஒரு விஷயமாகும்.

- Advertisement -

இன்று பழைய துணிமணிகளை அனாதை இல்லம் என்கிற பெயரில் ஏமாற்றி வாங்கிக் கொண்டு பலரும் அதனை விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் அவர்களிடம் கொடுக்க மனம் இல்லாதவர்கள் அப்படியே வைத்திருப்பார்கள். நீண்ட நாட்களாக உங்கள் பீரோவில் இப்படிப்பட்ட துணிமணிகள் இருப்பது குடும்பத்திற்கு நல்லதல்ல எனவே அவற்றை நல்ல முறையில் தானம் கொடுப்பது தான் நல்லது. வஸ்திர தானம் என்பது நம் வறுமையைப் போக்கக் கூடிய ஒரு அற்புதமான தானம் ஆகும்.

குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு நல்ல நாள், கிழமையில் புது வஸ்திரம் வாங்கிக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வது பல்வேறு தோஷங்களை போக்க வல்லது. சகோதரன், சகோதரிகளுக்கு வருடம் ஒரு முறையாவது புது வஸ்திரம் வாங்கிக் கொடுக்க வேண்டும். இதனால் அந்த உறவு மேலும் வலுபெறும். நீண்ட நாள் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோருக்கு வஸ்திர தானம் செய்து பாருங்கள், நிச்சயம் விரைவிலேயே நல்ல செய்திகளை பெறுவீர்கள். இப்படி புதிய வஸ்திரத்தி்லும், பழைய வஸ்திரத்தி்லும் நிறையவே சாஸ்திரங்கள் உள்ளன. நல்ல விஷயங்களை செய்து அதற்குரிய பலன்களையும் அனுபவிக்கலாமே!

- Advertisement -