ஓயாமல் தீயாய் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு கூட தீர்வு தரும் ஓமம். இதை செய்தால் கஷ்டங்கள் வெளியே ஓடிவிடும். தெய்வங்கள் வீட்டிற்குள் வந்துவிடும்.

omam
- Advertisement -

கெட்ட சக்திகளுக்கு பிடிக்காத, நல்ல சக்திகளுக்கு ரொம்பவும் பிடித்த வாசம் தான் இந்த ஓமம் வாசம். ஓமத்தில் இருந்து வெளிவரக்கூடிய வாசத்திற்கு வீட்டில் எந்த கெட்ட சக்தியும் தாங்காது. இந்த ஓமத்தை வைத்து செய்யக்கூடிய ஒரு சில சுலபமான பரிகாரங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதை செய்தால் வீட்டில் இருக்கும் சண்டை சச்சரவுகள் குறையும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி வெளியே ஓடிவிடும். நிலை வாசலில் காத்து நிற்கும் தெய்வங்கள் வீட்டிற்குள் வரும்.

மலிவாக எல்லா மளிகை கடைகளிலும் இந்த ஓமம் நமக்கு கிடைக்கும். ஓமத்தில் மருத்துவ குணம் ஏராளம். அதே அளவிற்கு மகத்துவமும் நிறைவாக இருக்கின்றது. இந்த ஓமத்தை ஆன்மீக ரீதியாக பரிகாரங்களுக்கு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம். இந்த பரிகாரத்திற்கு ஓமத்தோடு சேர்த்து நமக்கு கட்டி கற்பூரம் தேவை. சூடம். அதாவது மெழுகு கற்பூரத்தை இதற்கு பயன்படுத்தக் கூடாது. பச்சை கற்பூரத்தையும் பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

ஒரு சிறிய டப்பாவில் கற்பூரத்தையும் ஓமத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். கற்பூரத்தை உடைத்து தூள் செய்து, அந்த கற்பூர துகள்களில், இந்த ஓமத்தை கலந்து வைத்தாலும் சரிதான். ஒரு சிறிய தட்டில் ஓமம் கலந்த கற்பூரத்தை ஏற்றி வைத்தால் ஓமமும் கற்பூரமும் சேர்ந்து எறிய தொடங்கும். இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்கலாம். இந்த புகைக்கு வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறிவிடும்.

இந்த வாசம் நிச்சயமாக உங்களுடைய வீட்டில் நிலைத்து இருக்கும். இந்த வாசத்திற்கு உங்களுடைய வீட்டை தேடி தெய்வ சக்தி வரும். இதோடு மட்டுமல்லாமல் இந்த கலவையை ஒரு சிறிய மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டி நிலை வாசல் படியில் மாட்டி வைக்கும் போது அது நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும்.

- Advertisement -

வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தூபம் போடும்போது அந்த சாம்பிராணி தூளுடன் இந்த ஓமத்தை சேர்த்து தூபம் போடலாம். இந்த கற்பூரமும் ஓமமும் சேர்ந்த கலவையை சின்ன சின்ன மூட்டையாக கட்டி வீட்டில் ஆங்காங்கே வைக்கும் போது இதனுடைய நறுமணம் வீடு முழுவதும் நிறைந்து இருக்கும். மூளை முடுக்குகளில் வந்து தங்கக்கூடிய எந்த ஒரு கெட்ட சக்தியாலும் நிம்மதியாக நம்முடைய வீட்டில் இந்த வாசத்திற்கு குடி இருக்கவே முடியாது. தானாக தலை தெரிக்க வீட்டை விட்டு ஓடிவிடும்.

ஜீரணத்திற்காக பயன்படுத்தக்கூடிய இந்த சின்ன பொருளுக்கு எத்தனை மகத்துவம் அடங்கி இருக்கிறது என்பதை நீங்கள் பரிகாரத்திற்காக பயன்படுத்தும் போது மட்டும்தான் உணர முடியும். வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் ஓமத்தை பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. எச்சில் செய்யாத புதிய ஓமமாக கடையில் இருந்து வாங்கி பரிகாரத்திற்கு தனியாக பூஜையறையில் வைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -