ஒரே 1 ரூபாய் இருந்தால் போதும். ஓயாமல் உங்களைத் துரத்தி வரும் கஷ்டங்களை, பிரச்சினைகளை அடித்து ஓட ஓட விரட்டி விடலாம்.

sad
- Advertisement -

கஷ்டம் இல்லாமல் பிரச்சினைகள் இல்லாமல் யாரால் தான் வாழ முடியும். நிச்சயமாக மனிதப்பிறவி எடுத்து விட்டால் கஷ்டத்தையும் பிரச்சனைகளையும் கடந்து தான் வாழ வேண்டும். முடிந்த வரை அந்தப் பிரச்சினை, கஷ்டம், நஷ்டம் இவை அனைத்தும் நம்மை கண்டு ஓட வேண்டும் என்றால் நம்மால் முடிந்த சில பரிகாரங்களை செய்து கொள்ளலாம். அப்படி ஒரு சுலபமான ஒரு ரூபாய் பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கஷ்டத்தை ஓட ஓட விரட்ட தயாராக இருந்து கொள்ளுங்கள்.

sad-crying2

முதலில் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாணயத்தை உங்களுடைய வலது கையில் வைத்துக் கொள்ளுங்கள். வலது கையில் உள்ள நாணயத்தை உங்களுடைய தலை பகுதியிலிருந்து கால் பகுதி வரை, மேலிருந்து கீழ் பக்கமாக, ஏற்ற இறக்கமாக, அப்படியே தடவி விட வேண்டும்.

- Advertisement -

முதல் முறை தலையிலிருந்து உடம்பை அப்படியே உரசிக்கொண்டு பாதம் வரை நாணயத்தை எடுத்து வருகிறீர்கள். மீண்டும் பாதம் வரை சென்ற நாணயத்தை எடுத்து தலை மேல் வைத்து, மேலிருந்து கீழ் பக்கமாக தடவி விடவேண்டும். இதேபோல் ஏழு முறை இந்த நாணயத்தை மேலிருந்து கீழ் பகுதியில் உங்களுடைய உடம்பை தடவி விட்டு விடுங்கள். (இப்படி நாணயம் உங்களுடைய உடம்பில் உரசும் போது உங்களுக்கு என்ன கஷ்டம் உள்ளதோ அந்த கஷ்டமானது, உங்களை விட்டு போக வேண்டும் என்று மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.)

one rupee

சில பேருக்கு பணம் வருவதில் பிரச்சனை இருக்கலாம். சில பேருக்கு கடன் பிரச்சினை இருக்கலாம். சில பேருக்கு குடும்பத்தில் பிரச்சனை இருக்கலாம். சில பேருக்கு திருமணம் நடக்க வேண்டும் என்ற கவலை இருக்கலாம். சில பேருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எதை நினைத்து நீங்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும் அந்த வேண்டுதல் நிச்சயமாக கூடிய விரைவிலேயே நடக்கும். காரியத் தடைகள் விலகும்.

- Advertisement -

ஒரு வெள்ளைக் காகிதத்தில் இந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து மடித்து, கால் படாத ஏதாவது ஒரு இடத்திற்கு கொண்டு போய் சிறிய பள்ளத்தை தோண்டி இந்த நாணயத்தை புதைத்து விட்டு வரவேண்டும். உங்களுடைய வீட்டினருகில் நீர் நிலைகள் இருந்தால் அந்த நீர் நிலைகளில் இந்த நாணயத்தை போட்டு விடலாம்.

kuladheivam

இப்படி செய்வதால் என்ன பலன் கிடைக்கப் போகின்றது என்று சில சிந்திக்கலாம். இது ஒரு தார்மீக ரீதியான பரிகாரம். நமக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்க வில்லை என்றால், அதற்கு காரணம் நம்மை சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல் தான். அந்த எதிர்மறை ஆற்றலை நம்மிடம் இருந்து போகக் கூடிய சக்தி இந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு உண்டு.

kula-dheivam

பொதுவாகவே நிறைய கோவில்களில் குழந்தைகளுக்கு ரூபாய் நோட்டை வைத்து சுற்றி உண்டியலில் போடும் பழக்கம் இருக்கும். அந்த ரூபாய் நோட்டுடன் கட்டாயமாக வைக்கக்கூடிய நாணயம் இந்த ஒரு ரூபாய் நாணயம். நிறைய உக்கிர தெய்வங்களின் கோவில்களில் இதை நாம் பார்த்திருப்போம். எதிர்மறை ஆற்றல் பாதிக்கப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்து, அவர்களுடைய தலையை மூன்று முறை காசைக் கொண்டு சுற்றி, அந்த காசை அந்த கோவிலில் போட்டு விட்டு வருவார்கள்.

one-rupee0

இப்படி காசை தலையை சுற்றி போட்டால் அந்த குறிப்பிட்ட நபரின் உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகிவிடும் என்பது அந்த காலத்தில் இருந்து வந்த நம்பிக்கை. இதை மையமாக வைத்து சொல்லப்பட்டுள்ள ஒரு ரூபாய் பரிகாரத்தை தான் இன்று நாமும் தெரிந்து கொண்டிருக்கின்றோம். உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு வாழ்க்கையில் இயக்கக்கூடிய பல வகையான கஷ்டத்திற்கு பல வழிகளில் தீர்வு கிடைக்கும்.

- Advertisement -