அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்களை இப்படி பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? இது தெரிஞ்சா இந்த பொருளை குப்பையில் போட்டிருக்க மாட்டேனே!

job-peel
- Advertisement -

எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது. தொடர்ந்து ஓரிடத்தில் அமரும் போது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பலரும் பாதிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் ஓட்டுநர்கள், கணிப்பொறியில் அமர்ந்து வேலை செய்பவர்கள் என்று பல்வேறு விதங்களில் பல துறைகளில் இருப்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்களை மட்டும் இப்படி பயன்படுத்தினால், கிடைக்கக் கூடிய நன்மைகள் ஏராளம்! அவை என்னென்ன? அந்த பொருட்கள் யாவன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு பைல்ஸ் போன்ற அவதிப்படக்கூடிய பிரச்சனைகளும் அடிக்கடி வருவது உண்டு. இது போன்ற பிரச்சனைகளையும் தீர்க்க வல்ல இந்த அற்புதமான குறிப்பு எளிதாக எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்? உங்கள் வீட்டில் இருக்கும் பழைய திக்கான காட்டன் டவல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டாக மடித்து மூன்று புறமும் நன்கு ஸ்டிச்சஸ் போட்டு தைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நான்காவது வாய் வழியாக இந்த பைக்குள் முழுவதுமாக நிறைய வெங்காய தோலை நீங்கள் திணிக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் மற்றும் பூண்டு தோல்களில் ஏராளமான வைட்டமின்கள் உண்டு. இதை இயற்கை விவசாயத்திற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது உண்டு. வீட்டு தோட்டத்திற்கு கூட அதிக அளவில் பயன்படுத்தப்படும் இந்த வெங்காயம் மற்றும் பூண்டு தோல் கொண்டு செய்யப்படும் தலையணைகள் இருக்கையில் போட்டு அமரும் பொழுது ஏராளமான நன்மைகள் நமக்கு நடப்பது உண்டு.

எனவே வீட்டில் வேண்டாம் என்று குப்பையில் இனி வீசக்கூடிய இந்த வெங்காயத்தோல் மற்றும் பூண்டு தோலை எந்த அளவிற்கு அதிகமாக சேர்க்க முடியுமோ, அந்த அளவிற்கு சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இது போல பில்லோ செய்து உள்ளே வெங்காய தோலை திணித்து அதை நன்கு நவீன தலையணையாக தைத்து அதை இருக்கையில் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். இதில் வெங்காயத் தோல் மட்டும் கொண்டு செய்யப்படும் இந்த இருக்கை மெத்தையை பயன்படுத்தும் பொழுது பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும். இதிலிருந்து ஓரளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இதில் அமரும் போது உடல் சூடு என்பது முற்றிலுமாக தணிந்து குளிர்கிறது. இதனால் உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் நீங்குகிறது. வெங்காயத்தோல் பயன்படுத்தும் பொழுது பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் எந்த வெங்காயத்தையும் நீங்கள் உபயோகிக்கலாம். இதே போல முழுவதுமாக பூண்டு தோலை மட்டும் பயன்படுத்தி செய்யப்படுவதை தலையணையாக உபயோகிக்கும் பொழுது தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி, நீர் கோர்த்தல், சைனஸ் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இது போன்ற மெத்தைகளை பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே:
நீங்கள் காபிக்கு அடிக்க்ஷனா இருக்கீங்களா? அதிக அளவு காபி ஆபத்தானது தெரியுமா? காபிக்கு பதிலா ஆரோக்கியமா இதை ட்ரை பண்ணுங்க, காபி மாதிரியே தான் இருக்கும்.

தலைக்கு வைத்து பயன்படுத்தும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் விரைவில் நீங்குகிறது. மேலும் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடவும் இந்த பூண்டு தோல் கொண்டு செய்யப்படும் தலையணையை பயன்படுத்தலாம். இப்படி நாமே வீட்டில் எளிதான முறையில் தயாரிக்கும் இந்த இயற்கை மெத்தைகள் இயற்கையான முறையில் நம்முடைய நோயையும் விரட்டி அடிக்கிறது என்பது அனுபவத்தில் கண்டவர்கள் சொன்ன உண்மையாகும்.

- Advertisement -