உங்களுடைய முகத்திலும் இப்படி அதிகமாக குழிகள் உள்ளதா? இதை சரி செய்ய ஒரே 1 வாழைப்பழம் இருந்தால் போதுமே.

open-porse
- Advertisement -

நிறைய பேருக்கு முகத்தில் ஓபன் போர்ஸ் என்று சொல்லப்படும் குழிகள் இருக்கும். என்னதான் செய்தாலும் இதை நிரந்தரமாக போக்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அடர்த்தியான மேக்கப்பை போட்டு வேண்டும் என்றால் இதை நாம் மறைத்துக் கொள்ளலாம். நிரந்தரமாக இதை நீக்குவதற்கு இயற்கையான முறையில் ஒரு டிப்ஸை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பார்ப்பதற்கு சிலர் ரொம்பவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய இரண்டு கன்னத்திலும் இருக்கும் இந்த ஓட்டைகள் அவர்களுடைய முக அழகை அப்படியே குறைத்து காட்டும். இது நிறைய பேருக்கு மன அழுத்தம் நிறைந்த ஒரு விஷயமாகவும் இருக்கும். உங்கள் முகத்தை அழகாக மாற்ற குறைந்த செலவில் சூப்பரான டிப்ஸ் இது. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

முதலில் ஒரு அகலமான சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பழுத்த வாழைப்பழம் பாதி அளவு, போட்டு முதலில் உங்கள் கையை கொண்டு நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும். ஸ்பூனை கொண்டும் இந்த பழத்தை நசுக்கி கொள்ளலாம். தேவைப்பட்டால் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம். அதன் பின்பு அந்த வாழைப்பழத்துடன் 1 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு, சேர்த்து நன்றாக கலந்து கொடுக்கவேண்டும். இதோடு சுத்தமான தேன் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து இதை நன்றாக கலந்தால் நமக்கு ஒரு க்ரீம் கிடைத்துவிடும்.

- Advertisement -

ஒரு பவுலில் பழுத்த வாழைப்பழம், கோதுமை மாவு, தேன், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக மசித்து பிசைந்து கிரீமாக எடுத்து வந்து விட்டீர்கள். (தேவைப்பட்டால் அலோ வேரா ஜெல் உங்கள் வீட்டில் இருந்தால், அதுவும் அது இயற்கையாக கிடைத்த, எந்த ஒரு கெமிக்கல் சேர்க்காத அலோ வேரா ஜெல் ஆக இருந்தால் அதையும் இந்த க்ரீமுடன் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.) இந்த க்ரீம் அப்படியே இருக்கட்டும். முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு நாம் தயார் செய்த இந்த கிரீமை எடுத்து உங்களுடைய முகம் முழுவதும் தடவி 2 லிருந்து 3 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து கொடுங்கள். (குறிப்பாக ஓபன் போஸ் உள்ள இடத்தில் இந்த க்ரீமை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். துவாரங்கள் உள்ள அந்த இடத்தில், இந்த க்ரீம் எசன்ஸை நன்றாக சருமம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.)

அதன்பின்பு உங்களுடைய கன்னத்தில் முதலில் திக்காக இந்த க்ரீமை அப்ளை செய்து கொள்ள வேண்டும். அடுத்து முகம் முழுவதும் சாதாரணமாக இந்த கிரீமை தடவி அப்படியே விட்டுவிடுங்கள். அதாவது ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். 15 லிருந்து 20 நிமிடங்கள் இந்த க்ரீம் உங்களுடைய முகத்தில் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அதன் பின்பு உங்களுடைய முகம் லேசாக இழுத்து பிடிக்க ஆரம்பிக்கும். அப்போது குளிர்ந்த நீரால் உங்களுடைய முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். ஒரே முறை இதை பயன்படுத்தும் போது உங்களுடைய முகம் பொலிவாக மாறும். அதாவது உங்களுடைய சருமத்தின் நிறம் கொஞ்சம் கூடியது போல இருக்கும். சருமம் மிருதுவாக மாறும். அதை உங்களால் நிச்சயம் உணர முடியும்.

ஆனால் ஓபன் போர்ஸ் என்று சொல்லப்படும் முகத்தில் இருக்கும் அந்த சின்ன சின்ன ஓட்டைகள், ஒருநாளில் மறையவே மறையாது. தினமும் இதை நீங்கள் பயன்படுத்தி வரவேண்டும். 1 மாதம், தொடர்ந்து இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் போட்டு வந்தால் நிச்சயமாக உங்களுடைய முகத்தில் இருக்கும் ஓபன் போர்ஸ் மூடி இருப்பதை பார்க்க முடியும். அதாவது பெரிய பெரிய ஓட்டைகள் சுருங்கி சிறிய ஓட்டைகளாக மாறும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாக மறையும் வரை இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

உங்களுக்கு இந்த ரெமடி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நம்முடைய முக அழகு கூடினால் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழைப்பழம், தேன், கோதுமை மாவு, இந்த மூன்று பொருட்களுக்குமே பெரியதாக செலவும் இருக்காது. நல்ல சான்ஸ். மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோங்க. உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா மட்டும்.

- Advertisement -