ஒரே வாரத்தில் முடி காடு போல வளரும் அதிசயம் நடக்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் இதைத் தான் செய்யணும். நம்ம முடியா இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்குனு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.

- Advertisement -

முடி நல்ல நீளமாக வளர வேண்டாம் என்று சொல்லும் பெண்கள் மிகவும் குறைவு. அப்படியானால் ஏன் முடியை வெட்டி விடுகிறார்கள் என்ற கேள்வி தோன்றலாம். முடி நீளமாக இல்லாமல் மிகவும் மெலிதாக குச்சி போல பார்க்கவே நன்றாக இல்லாத போது வேறு என்ன செய்ய முடியும். முடியை அழகாக ஆக்க வெட்டி விடுகிறார்கள். ஆனால் இந்த ஒரு சீரத்தை நீங்கள் வீட்டிலே தயார் செய்து வைத்துக் கொண்டால், நீங்களே வேண்டாம் என்று தடுத்தாலும் உங்கள் முடி வளர்ந்து கொண்டே இருக்கும். வாங்க அந்த சீரம் எப்படி தயாரிப்பது என்று இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முடி வளர தேவையான அந்த சீரம் தயாரிக்கும் முறை.
இந்த சீரம் தயாரிக்க முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் டீத்தூளை சேர்த்து அதுவும் கொதிக்கட்டும்.

- Advertisement -

டீ தூள் நன்றாக கொதித்த பிறகு கொஞ்சம் வெங்காயத் தோலை சேர்த்து சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் உங்களிடம் எது இருக்கிறதோ, அதன் தோலை போட்டு கொதிக்க வையுங்கள். இந்த தண்ணீர் குறைந்தது 10 நிமிடம் வரை கொதிக்க வேண்டும். அப்போது தான் ஒரு டம்ளர் தண்ணீர் அரை அளவிற்கு குறையும். அதன் பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வடிகட்டி எடுத்த பின் அந்த டீத்தூள், வெங்காயத்தோலை அரைத்து நீங்கள் தலையில் பேக் போல கூட போட்டுக் கொள்ளலாம். அதுவும் முடி வளர்ச்சிக்கு உதவி செய்யும்.

- Advertisement -

இந்த சீரம் வாரம் இரண்டு முறை உங்கள் முடியின் வேர்ப்பகுதிகளில் தேய்த்து 10 நிமிடம் வரையில் நன்றாக மசாஜ் செய்து கொடுங்கள். இதை தேய்த்த பிறகு நீங்கள் முடியை அலச வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஒரு வேளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அலசிக் கொள்ளுங்கள். ஆனால் தேய்த்த பிறகு மசாஜ் செய்து கொடுப்பது மிகவும் முக்கியம்.

அதே போல் இதை உங்கள் முடியில் அப்ளை செய்யும் போது தலை அதிக அழுக்காக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் சீரம் வேர்களின் வழியாக உள்ளே சென்று முடி வளர வேலை செய்யும். அழுக்குகள் அதிகமாக இருந்தால் சீரம் வேர் கால்களுக்குள்ளேயே செல்லாது.

- Advertisement -

டீத்தூளும், வெங்காயத்தோலும் முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவி செய்யக் கூடியவை. இதை இப்படி தேய்க்கும் போது உங்கள் தலையின் வேர் பகுதி வரை சென்று முடி நன்றாக வளர, இவை வேர்கால்களை தூண்டி விடும் வேலையை செய்யும்.

இதையும் படிக்கலாமே: தினமும் இந்த பொடியை போட்டு தேய்த்து குளித்தால், வயசு கூட கூட, உங்களுடைய இளமையும் அழகும் கூடிக் கொண்டே செல்லும்.

இந்த எளிமையான சீரமை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து வைத்துக் கொண்டு வாரம் இருமுறை இதை தேய்த்து, உங்கள் முடி வளர்ச்சியை நன்றாக அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த முறை நல்ல பலன் அளிக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -