ஒரு கைப்பிடி உப்பு இருந்தா போதும் இவ்வளவு விஷயம் நடக்குமா? வீட்டில் தீராத பிரச்சனையையும் தீர்க்கும் உப்பு பற்றி அறியாத ஆன்மீக தகவல்கள்!

salt-uppu
- Advertisement -

உப்பு திருஷ்டியை கழித்து பல்வேறு விதமான பிரச்சினைகளை வீட்டிலிருந்து விரட்டி அடிக்கக்கூடிய அற்புதமான ஆற்றல்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்கிறது ஆன்மீகம்! உப்பு என்பது கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த இயற்கையாக கிடைக்கக்கூடிய உப்பு எதனுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு தனித்துவமானது. இந்த உப்பு ஒரு கைப்பிடி வீட்டில் இருந்தால் இவ்வளவு விஷயங்களை செய்து நாம் பலனடைய முடியுமா? என்பதை கேட்டாலே நமக்கு ஆச்சரியமாக இருக்கும். வாருங்கள் அதைப் பற்றிய ஒரு சிறு அலசல்!

ஒரு கைப்பிடி உப்பு இருந்தால் போதும், நம் உடம்பில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அல்லது நெகட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் எதிர்மறையான ஆற்றல்கள் தலை தெறிக்க ஓடிவிடுமாம். அந்த அளவிற்கு அதீத சக்தி கொண்டுள்ள இந்த ஒரு கைப்பிடி உப்பை நீங்கள் வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் போவதற்கு முன்னால் ஒரு வாளியில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் வெதுவெதுப்பான தண்ணீர் பாதி அளவிற்கு ஊற்றி நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் ஐந்து நிமிடம் மட்டும் நீங்கள் கால்களை வைத்திருந்தால் போதும். பாதங்கள் மற்றும் பாத கட்ட விரல் நகத்தின் வழியாகவே கெட்ட விஷயங்கள் நமக்குள் நுழைகிறது என்கிறது ஆன்மீகம், எனவே இப்படி உப்பினுள் கால் வைத்து காத்திருந்தால் அது அதன் சக்தியை பொறுக்க முடியாமல் நம் உடலை விட்டு வெளியேறி விடுமாம். இதனால் நமக்கு வரக்கூடிய பிரச்சனைகள் வீட்டு வாசலிலேயே சென்று விடுகிறது.

- Advertisement -

ஒரு கைப்பிடி அளவிற்கு உப்பை ஒரு டம்ளரில் போட்டு அதில் முக்கால் பாகம் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இதை வீட்டில் மட்டும் அல்லாமல் தொழில் செய்பவர்கள் கடைகளிலும், வைக்கலாம் அல்லது வியாபாரம் செய்யும் தளங்கள், தொழில் செய்யும் இடங்கள் எங்கு வேண்டுமானாலும் இதை நீங்கள் வைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பண வரவு அதிகரிக்கும், செல்வ வளம் உண்டாகும். துர் சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை.

அதே போல ஒரு கைப்பிடி அளவிற்கு உப்பை பவுலில் போட்டு நீங்கள் குளியல் அறையில் வைக்க வேண்டும். இது வீட்டில் இருக்கும் தரித்திரத்தை போக்குமாம். குளிக்க செல்லும் பொழுது சிறிதளவு உப்பை எடுத்து குளிக்கும் தண்ணீரில் கரைத்து பின்னர் குளித்து பாருங்கள், உங்களை பிடித்த தரித்திரம், பீடை எல்லாம் நீங்கும். இதே போல ஒரு கைப்பிடி அளவிற்கு உப்பை எப்பொழுதும் டைனிங் டேபிளில் வைத்திருக்க வேண்டும். உணவு சாப்பிடும் இடத்தில் இது போல உப்பை வைத்திருந்தால் வறுமையை ஏற்படாதாம். சாப்பாட்டிற்கு பஞ்சம் என்பதே வராதாம்.

- Advertisement -

அந்த அளவுக்கு லட்சுமி கடாட்சத்தை பெருக செய்யக்கூடிய ஒரு விஷயம்தான் இது! அந்த காலத்தில் முன்னோர்கள் எல்லாம் டைனிங் டேபிள் இல்லாவிட்டாலும் அவர்கள் எப்பொழுதும் சாப்பிடும் இடம் ஒரே இடமாக இருக்கும். அந்த இடத்தின் அருகில் எப்பொழுதும் உப்பையும் வைத்திருப்பார்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு உப்பை எடுத்து ஒரு சிகப்பு நிற துணியில் இறுக்கமாக கட்டி முடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை வீட்டு வாசலில் தொங்கவிட்டால் துர்சக்திகள் வீட்டிற்குள் நுழையாது. எந்த விதமான பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனைகளும் நம்மை அண்டாது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த உப்பு மூட்டை எப்பொழுதும் தலைவாசலில் தொங்க விட்டிருப்பது ரொம்பவும் நல்லது.

வீட்டில் பிரச்சனை அல்லது ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏதாவது இருந்தால் உடனே ஒரு கைப்பிடி அளவிற்கு உப்பை எடுத்து கிழக்கு நோக்கி பாதிக்கப்பட்டவர்களை அமர வைத்து தலையை சுற்றி மூன்று முறை திருஷ்டி சுற்றுவது போல சுற்றி வெளியில் கொண்டு போய் நெருப்பில் போட்டு விடுங்கள். இதனால் அவர்களுக்கு பிடித்த திருஷ்டிகள் கழியும். ஒரு கைப்பிடி உப்பில் இவ்வளவு விஷயங்கள் நாம் செய்ய முடியும். இவை எல்லாம் நம்மையும் மீறிய ஒரு சக்தியாக இருந்து நம்மை பாதுகாக்கும்.

- Advertisement -