குடும்பத்தில் நிம்மதியே இல்லையா? ஏதோ பாவம் செய்தது போல் தோன்றுகிறதா? தீராத பாவங்களும் தீர செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள், எல்லாமும் மாறும்!

- Advertisement -

நன்றாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில் திடீரென பிரச்சனைகள் வருவது சாதாரண விஷயம் அல்ல. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த நல்ல ஒரு இணக்கமான சூழ்நிலை தளர்வு காணும் பொழுது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் எவருடன் சண்டையிட்டாலும் பரவாயில்லை ஆனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தலை தூக்க ஆரம்பிக்கும் பொழுதே அதனை சரி செய்து விடுவது அந்த குடும்பத்திற்கும், அந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கும் நலமாகும். எனவே சண்டை சச்சரவுகள் அதிகரித்து நிம்மதி இல்லாத நிலையில் இருந்தால் செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை செய்து அதிலிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். அதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ego-couple

அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டு மீண்டும் சமாதானம் ஆகி விடுவது என்பது வேறு ஆனால் நன்றாக இருந்த குடும்பத்தில் திடீரென சண்டைகள் வருவது என்பது வேறு. சண்டை சச்சரவுகள் இல்லை என்றாலும் ஏதோ ஒரு அசௌகரியமான சூழ்நிலை அந்த வீட்டில் நிகழும். எதையோ இழந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும் அல்லது நாம் ஏதோ பாவம் செய்து விட்டோம் போலிருக்கிறது என்கிற மனோபாவம் நமக்கு ஏற்படும். அந்த சமயத்தில் தான் நமக்கு இந்த பரிகாரம் தேவைப்படும்.

- Advertisement -

ஒரு மனிதன் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதே அவன் செய்த கர்மவினை தான் காரணம் என்கிறது ஜோதிடம். கர்ம வினைப் பயனை நல்லதோ, கெட்டதோ அனுபவித்து தான் தீர வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய விதியாகும். அந்த விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி எவருக்கும் இது வரை இருந்தது இல்லை என்கிறது புராணங்கள். அனுபவிக்கின்ற வினைப்பயன் அதனால் உண்டாகும் துன்பத்தை குறைத்துக் கொள்ளலாமே ஒழிய, முழுவதுமாக அழித்து விட முடியாது. செய்த பாவத்திற்கான தண்டனையை மறுபிறவியிலும், இம்மையிலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.

sad-crying4

அப்படி நீங்கள் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்க நினைக்கின்றீர்களா? மீண்டும் இழந்த மகிழ்ச்சியை மற்றும் நிம்மதியைப் பெற வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? அப்படி என்றால் இந்த எளிய பரிகாரத்தை செய்து அனைவரும் பயன் அடையலாம். அமாவாசை அல்லது பௌர்ணமியில் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் விசேஷமானது. அந்த தினங்களில் தான் பிரபஞ்சத்தில் அதீத சக்தி ஊடுருவும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

- Advertisement -

பிரபஞ்ச சக்தி அதிகரிக்கும் பொழுது தான் தெய்வத்திற்கும் சக்தி அதிகமாக இருக்கும். வேண்டிய வேண்டுதல்களும் எளிதாக பலிக்க அமாவாசை மற்றும் பௌர்ணமியில் இதனை செய்வது உத்தமம். அவற்றில் ஏதேனும் ஒரு நாளில் நீங்கள் வயது முதிர்ந்த தம்பதியினருக்கு வஸ்திர தானம் செய்து பாருங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்று இருக்கும் ஏழை தம்பதியினருக்கு வஸ்திர தானம் செய்வது என்பது ஏலேழு ஜென்ம பாவத்தை நீக்கும் என்பது தான் சாஸ்திரம் கூறும் நம்பிக்கையாகும்.

white-cloth

நீங்கள் இதனை உங்களுடைய பிறந்த நாள் அல்லது திருமணநாள் போன்ற விசேஷ தினங்களில் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுடைய கர்ம வினையால் அனுபவித்து வரும் துன்பங்கள் குறையும். உங்களிடம் வசதி வாய்ப்புகள் அதிகமாக இருந்தால் அப்படிப்பட்ட ஏதாவது ஒரு முதியவர்களை தத்தெடுத்து அவர்களுக்கான பணிவிடைகளையும் செய்யலாம். முழு செலவுகளை ஏற்கவும் ஒப்புக் கொள்ளலாம். அது இன்னும் உங்களுக்கு புண்ணியத்தை சேர்க்கும்.

- Advertisement -