இந்த 1 பொருளை மணி பர்ஸில் வைத்துக் கொண்டால் உங்களை பகைத்து கொண்டு யாராலும் இருக்க முடியாது தெரியுமா?

milagu-purse
- Advertisement -

ஒரு சில பொருட்களுக்கு ஒரு சில விசேஷமான தன்மை உண்டு. இதை தாந்த்ரீக முறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஒரு பொருளை நம்முடன் வைத்துக் கொண்டால், நம்மை யாராலும் பகைத்துக் கொள்ள முடியாது. துஷ்ட சக்திகள், நம் குடும்பத்தையும், வேலை செய்யும் இடங்களிலும் சுற்றி உள்ள பகைவர்கள் எவராலும் நம்மை நெருங்க முடியாது. நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கூட, அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்த்தி விடும் அளவிற்கு ரொம்பவே சக்தி வாய்ந்த பொருளாக இப்பொருள் இருக்கிறது. அந்த பொருள் என்ன? அதை நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீக குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் தமிழ் பழமொழிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் ஏராளம். சில பழமொழிகள் பல அர்த்தங்களையும் தன்னுள் கொண்டிருக்கும். அந்த வகையில் இந்த பொருளுக்கு சொல்லப்படும் பழமொழியும் பல அர்த்தங்களை தனக்குள் உள்ளடக்கியுள்ளது. ’10 மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது தான் அந்த பழமொழியாகும்.

- Advertisement -

‘கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது’ என்கிற ஒரு பழமொழி உண்டு. இது கடுகை குறிப்பிடுவன அல்ல! இது மிளகை குறிக்கும் ஒரு எளிய பழமொழியாக இருந்து வருகிறது. கடுகு போல சின்னதாக மிளகு இருந்தாலும், அதன் காரம் மட்டும் குறைவதில்லை என்பது தான் இதன் பொருள் ஆகும். அதே போல பத்து மிளகு இருந்தால் பகைவன் நமக்கு விஷம் வைத்து உணவு கொடுத்தாலும், அது நம்மை ஒன்றும் செய்யாது முறித்து விடும் என்பதால் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த அளவிற்கு கொடிய விஷத்தை கூட முறிக்கும் தன்மை மிளகிற்கு உண்டு. இந்த மிளகு சமையலுக்கு மட்டும் அல்லாமல் ஆரோக்கிய நலனுக்காகவும், மூலிகை பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆன்மீகத்தில் கொடிய பகைவர்களை துவம்சம் செய்ய, இந்த மிளகு போட்டு விளக்கு ஏற்றப்படுகிறது. மிளகு சனி பகவான், கால பைரவர் போன்றவருக்கு உகந்த ஒரு பொருளாக இருக்கிறது. இந்த ஒரு பொருளை நம்முடைய மணி பர்சில் நான்கைந்து எப்பொழுதும் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் நம்மை எதிர்க்க வரும் பகைவர்கள் எவரும் சூழ்ச்சி செய்து நம்மை எதிர்க்க முடியாது.

- Advertisement -

கூடவே இருந்து கொண்டு துரோகம் செய்பவர்கள் இன்றைய காலகட்டங்களில் ஏராளமானோர் இருக்கின்றனர். நம்மை போலவே அனைவரும் இருப்பார்கள் என்று எப்பொழுதும் தவறாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், உறவினர்களாக இருந்தாலும் 100% முழுமையாக அவர்களை நம்பாமல் அவர்கள் மீது சிறு சந்தேகம் கொள்வது தவறு கிடையாது. அப்போது தான் நாம் எச்சரிக்கையாக இருக்க முடியும்.

இதையும் படிக்கலாமே:
புதன் அருள் இருந்தால் புத்தி மட்டுமல்ல சொத்தும் சேருமாம் தெரியுமா? புதன்கிழமைகளில் விரதம் இருந்து எளிதாக இவரை வழிபட்டால் அள்ள அள்ள குறையாத செல்வங்கள் பெருகும்!

இது போன்ற மறைமுகமாக நம்மை சூழ்ச்சியால் எதிர்கொள்பவர்களை செயலிழக்க செய்யக்கூடிய ஆற்றல் மிளகிற்கு உண்டு. எனவே எப்பொழுதும் மிளகை ஒரு கருப்பு துணியில் சிறு மூட்டையாக கட்டி உங்களுடைய மணி பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் பூஜையறையிலும் சிறு மூட்டையாக கட்டி மிளகை வைத்துக் கொள்ளலாம். சனிக்கிழமைகளில் காலபைரவர் கோவிலுக்கு சென்று 27 மிளகை கருப்பு துணியில் மூட்டையாக கட்டி தீபம் ஏற்றலாம். இதனால் பகைவர்கள் தொல்லை ஒழியும், கடன் பிரச்சினை நீங்கும் என்கிற ஐதீகம் உண்டு.

- Advertisement -